search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Cricket"

    வங்காளதேசத்தில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்காளதேசம் அணி. #PAKWvBANW
    பாகிஸ்தான் மகளிர் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. நேற்று நடைபெற்ற ஒரே ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் வீராங்கனைகளை வங்காளதேச பந்து வீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர்.
    அதனால் பாகிஸ்தான் மகளிர் அணியினர் 34.5 ஓவரில் 94 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகமாக கேப்டன் ஜவேரியா கான் 29 ரன்கள் எடுத்தார்.

    வங்காளதேசம் அணி சார்பில் கதிஜா துல் குப்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 95 ரன்களை இலக்காக கொண்டு வங்காளதேசம் அணி விளையாடியது. பர்கனா ஹக் 48 ரன்களும், ருமானா அகமது 34 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    இறுதியில், வங்காளதேசம் அணியினர் 29 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றனர். கதிஜா துல் குப்ரா ஆட்ட நாயகி விருது பெற்றார். #PAKWvBANW
    இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வீராங்கனகைள் கடைசி போட்டியில் 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தொடரை 4-0 எனக் கைப்பற்றியது #INDWvSLW
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வந்தது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய வீராங்கனைகள் 2-1 எனக் கைப்பற்றினார்கள்.

    அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 3-வது மற்றும் 4-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகித்தது.

    இன்று 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் தொடங்கியது. தொடக்க வீராங்கனைகள் மிதாலி ராஜ் (12), மந்தனா (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.



    அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 5 சிக்சருடன் 63 ரன்கள் குவித்தார்.

    அதன்பின் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 18.3 ஓவரில் 156 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணியில் ஸ்ரீவர்தனே, பெர்னாண்டோ தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.



    பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை வீராங்கனைகள் களம் இறங்கினார்கள். இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 105 ரன்னில் இலங்கை சுருண்டது. இதனால் இந்தியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-0 எனக் கைப்பற்றியது.
    பெண்கள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. #INDWvSLW
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய வீராங்கனைகள் 2-1 எனக் கைப்பற்றினார்கள்.

    தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 3-வது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றது.



    இந்நிலையில் 4-வது ஆட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது. இலங்கை வீராங்கனை ஸ்ரீவர்தனே அதிகபட்சமாக 32 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். இந்திய வீராங்கனை அனுஜா பட்டீல் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் (52), அனுஜா பட்டீல்  (54) அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் தொடரை கைப்பற்றியதுடன் 3-0 என முன்னிலை வகிக்கிறது. 5-வது மற்றும் கடைசி போட்டி நாளை நடக்கிறது.
    ×