என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்கள் கிரிக்கெட்- 4-வது டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா
Byமாலை மலர்24 Sep 2018 11:50 AM GMT (Updated: 24 Sep 2018 11:50 AM GMT)
பெண்கள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. #INDWvSLW
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய வீராங்கனைகள் 2-1 எனக் கைப்பற்றினார்கள்.
தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 3-வது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் 4-வது ஆட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது. இலங்கை வீராங்கனை ஸ்ரீவர்தனே அதிகபட்சமாக 32 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். இந்திய வீராங்கனை அனுஜா பட்டீல் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் (52), அனுஜா பட்டீல் (54) அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தொடரை கைப்பற்றியதுடன் 3-0 என முன்னிலை வகிக்கிறது. 5-வது மற்றும் கடைசி போட்டி நாளை நடக்கிறது.
தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 3-வது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் 4-வது ஆட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது. இலங்கை வீராங்கனை ஸ்ரீவர்தனே அதிகபட்சமாக 32 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். இந்திய வீராங்கனை அனுஜா பட்டீல் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் (52), அனுஜா பட்டீல் (54) அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தொடரை கைப்பற்றியதுடன் 3-0 என முன்னிலை வகிக்கிறது. 5-வது மற்றும் கடைசி போட்டி நாளை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X