search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman injured"

    காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். #WomaninjuredinPakshellingdies
    ஜம்மு:

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

    அவ்வகையில், ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியான ஆர்னியா கிராமத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதி மீது கடந்த மே மாதம் 21-ம் தேதி பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி மற்றும் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த தர்ஷனா தேவி என்பவர் ஜம்மு நகரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மோர்ட்டார் குண்டுகளில் இருந்து வெளிப்பட்ட துகள்கள் அவரது மார்பகங்களுக்குள் பாய்ந்து அபாயகரமான காயத்தை ஏற்படுத்தி இருந்தது. இதைதொடர்ந்து அவருக்கு ஈரல் மற்றும் சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டது.

    அதை சரிப்படுத்துவதற்காக கடந்த 16 நாட்களாக அங்கு சிகிச்சை பெற்றுவந்த தர்ஷனா தேவி இன்று பிற்பகல் உயிரிழந்தார்.

    இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1,250 முறை காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 20 வீரர்கள் உள்பட 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #WomaninjuredinPakshellingdies 
    தா.பேட்டை அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அப்பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    தா.பேட்டை:

    தா.பேட்டை அடுத்த வளையெடுப்பு கிராமத்தை சேர்ந்தவர் மருதாயி (வயது 55) ,கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தா.பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவமனை அருகில் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் மருதாயிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

    அக்கம் பக்கத்தினர் காயமடைந்த மருதாயியை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் ரவி (47) என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை அருகே மினி லாரி-மொபட் மோதல் - பெண் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    மதுரை மாவட்டம் தேவன்பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மனைவி சித்ரா தேவி (வயது30). இவர் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.

    இன்று அதிகாலை சித்ராதேவி மொபட்டில் வெளியே புறப்பட்டார். மலம்பட்டி-கீழப்பூங்குடி ரோட்டில் சென்றபோது எதிரே வந்த மினி லாரி மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சித்ராதேவி படுகாயம் அடைந்தார். உடனே அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து மினி லாரியை ஓட்டி வந்த திருப்பத்தூர் திருமணப்பட்டியை சேர்ந்த கார்த்திகைசாமி என்பவரை கைது செய்தார்.

    மதுரை அருகே மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் தலையாரி படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மதுரை:

    மதுரை மேலவாசல் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கீதா (வயது 36). இவர் சிவகங்கை மாவட்டம்,காளையார் கோவிலில் தலையாரியாக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று கீதா தனது மொபட்டில் மேலூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இந்த விபத்தில் கீதா படுகாயம் அடைந்தார். அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பேராவூரணி அருகே மினி பஸ்சில் ஏறும்போது தவறி விழுந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பேராவூரணி:

    பேராவூரணியை அடுத்த மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 62), கூலி தொழிலாளி.

    இவர் முடச்சிக்காட்டில் உள்ள தனது மகள் வீடு சென்று விட்டு, ஊர் திரும்புவதற்காக முடச்சிக்காடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த வீரம்மாள், அவ்வழியே வந்த மினி பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதில் தவறி விழுந்த வீரம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரம்மாள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல்சிகிச்சைக்காக தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதுகுறித்து வீரம்மாளின் மகன் தனபால் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×