search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thathaiyangarpet"

    தா.பேட்டை அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அப்பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    தா.பேட்டை:

    தா.பேட்டை அடுத்த வளையெடுப்பு கிராமத்தை சேர்ந்தவர் மருதாயி (வயது 55) ,கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தா.பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவமனை அருகில் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் மருதாயிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

    அக்கம் பக்கத்தினர் காயமடைந்த மருதாயியை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் ரவி (47) என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×