search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Volkswagen"

    வோக்ஸ்வேகன் நிறுவனம் 2021 டிகுவான் பேஸ்லிப்ட் மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.


    வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் 2021 டிகுவான் பேஸ்லிப்ட் மாடல் டிசம்பர் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த பேஸ்லிப்ட் மாடல் வோக்ஸ்வேகன் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகமாகிறது.

    முன்னதாக மேம்பட்ட டிகுவான் மாடல் 2020 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இந்தியாவில் புதிய பேஸ்லிப்ட் மாடல் ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டக்சன் மற்றும் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     2021 வோக்ஸ்வேகன் பேஸ்லிப்ட்

    பேஸ்லிப்ட் டிகுவான் மாடல் மட்டுமின்றி வோக்ஸ்வேகன் நிறுவனம் மிட்-சைஸ் பிரீமியம் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய இருக்கிறது. புதிய டிகுவான் பேஸ்லிப்ட் மாடலில் எல்.இ.டி. மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    2021 வோக்ஸ்வேகன் டிகுவான் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது 2021 டி ராக் மாடல் முன்பதிவை திடீரென நிறுத்தி இருக்கிறது.


    வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் 2021 டி ராக் மாடலுக்கான முன்பதிவை நிறுத்தியது. டி ராக் மாடலுக்கான இரண்டாம் கட்ட யூனிட்கள் விற்றுத்தீர்ந்த நிலையில் முன்பதிவு நிறுத்தப்பட்டு இருக்கிறது. இறக்குமதி செய்யப்படும் வோக்ஸ்வேகன் டி ராக் விலை ரூ. 21.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஒற்றை வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படும் டி ராக் எஸ்யுவி 1.5 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. இந்த என்ஜின் 148 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     வோக்ஸ்வேகன் டி ராக்

    காரின் உள்புறம் டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, பானரோமிக் சன்ரூப் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரபல போலோ காரின் புதிய வேரியண்ட் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Volkswagen



    ஃபோக்ஸ்வேகன் தயாரிப்புகளில் மிகவும் பிரபல மாடலாக போலோ இருக்கிறது. தற்சமயம் சீன சந்தைக்கென போலோ பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஷாங்காய் சர்வதேச கண்காட்சியில் இந்த கார் இடம்பெற்றது. 

    இந்த கார் சீனாவின் எஸ்.ஐ.ஏ.சி. ஃபோக்ஸ்வேகன் ஆலையில் தயாரிக்கப்பட்டதாகும். போலோ பிளஸ் மாடலானது இந்த நிறுவனத்தின் 6-வது தலைமுறை காராகும். இது முந்தைய மாடலைக் காட்டிலும் அதிக நீளம் கொண்டது. இது 4,053 மி.மீ நீளம், அகலம் 1,740 மி.மீ, உயரம் 1,449 மி.மீ. கொண்டது. இதன் சக்கரம் 2,564 மி.மீ. உடையது.



    இது இரட்டை வண்ணத்தில் 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்களைக் கொண்டுள்ளது. இரண்டு எக்சாஸ்ட் பைப் கொண்டது. தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், ஸ்டீரிங் கண்ட்ரோல், ரியர் கேமரா, இ.எஸ்.பி., ஏர்பேக் மற்றும் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இதில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதளம் உடையது. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஆட்டோமேடிக் ஸ்பீடு கியர்களைக் கொண்டது. சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த மாடல் கார்களை அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
    ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மைல்கல் சாதனையை கடந்துள்ளது. #Volkswagen



    ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பூனே உற்பத்தி ஆலையில் இருந்து பத்து லட்சமாவது காரை அந்நிறுவனம் வெளியிட்டது. ஃபோக்ஸ்வேகன் இந்திய உற்பத்தியில் பத்து லட்சமாவது மாடலாக அமியோ செடான் மாடல் கார் இருந்தது.

    சிறப்பு மைல்கல் சாதனையுடன் ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் ஃபோக்ஸ்வேகன் இந்தியா தலைவர் குர்பிரதாப் போபாரி மற்றும் ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார் பிரிவு தலைவர் ஸ்டீஃப் நேப் முன்னிலையில் வெளியிடப்பட்டது.



    இதுகுறித்து குர்பிரதாப் போபாரி கூறும் போது, 

    ஃபோக்ஸ்வேகன் இந்தியா உற்பத்தி ஆலை சர்வதேச அளவில் தரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையான வசதியை பெற்றிருக்கிறது. இதுவே இந்தியாவில் எங்களது வெற்றுக்கு முக்கிய பங்கு வகித்திருக்கிறது. 

    ஃபோக்ஸ்வேகன் இந்தியா குழுவினரின் அயராத உழைப்பு மற்றும் முயற்சியின் பலனாக எட்டப்பட்டிருக்கும் புதிய மைல்கல் சாதனைக்கு எங்களது மொத்த நிர்வாக குழு சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

    இந்திய சந்தையில் பத்து லட்சமாவது காரை வெளியிடுவது எங்களது நிறுவனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த மைல்கல் மட்டுமின்றி உள்நாட்டு உற்பத்தியில் மேலும் அதிக கவனம் செலுத்தி, உலகத்தரம் வாய்ந்த வாகனங்களை நாட்டுக்கும் பல்வேறு உலக சந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம். என அவர் தெரிவித்தார்.
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது போலோ, அமியோ மற்றும் வென்டோ கார்களை பிளாக் மற்றும் வைட் நிற எடிஷனில் அறிமுகம் செய்துள்ளது. #Volkswagen



    சொகுசு கார்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது முன்னணி மாடல்களான போலோ, அமியோ, வென்டோ ஆகிய மூன்று கார்களிலும் கருப்பு, வெள்ளை எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய கருப்பு மற்றும் வெள்ளை நிற எடிஷன் கார்களை பயனர்கள் எவ்வித கூடுதல் விலையும் இன்றி அனைத்து முன்னணி டீலர்களிடமும் வாங்க முடியும்.

    இந்த கருப்பு, வெள்ளை பேக்கேஜில் அனைத்து மாடல்களிலும் மேல் பகுதி கிராஃபிக்ஸ், லெதர் சீட் கவர்கள் பின்புற ஸ்பாயிலர், 16 அங்குல போர்டேகோ அலாய் சக்கரங்கள், மேல்பகுதி கருப்பு வண்ணம் பூசப்பட்டது, கருப்பு நிறத்திலான ஓ.ஆர்.வி.எம்., குரோம் பேட்ஜ் ஆகியன இடம்பெறும். இது தவிர முற்றிலும் கருமையான நிறத்தில் போலோ, வென்டோ மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

    அனைத்து மாடல்களுமே 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் யூனிட்டை கொண்டவை. 90 பி.ஹெச்.பி. திறன் கொண்ட போலோ ஹேட்ச்பேக் மாடலை போன்று இருக்கும் இது 5 மானுவல் கியர் வசதி கொண்டது. அமியோ மற்றும் வென்டோ செடான் மாடலில் 110 பி.ஹெச்.பி. திறனும் 5 கியரும் கொண்டது. இது தவிர 7 ஸ்பீடு இரட்டை கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உள்ள மாடலும் இதில் கிடைக்கும்.



    போலோ மற்றும் அமியோ மாடல் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரைக் கொண்டது. இது 76 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 95 என்.எம். டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியது. வென்டோ மாடலில் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் உள்ளது. இது 105 பி.ஹெச்.பி. திறன் 153 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது. 

    இதில் 5 கியர் வசதி மட்டுமே உண்டு. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலும் போலோ மற்றும் வென்டோவில் உள்ளது. இது 105 பி.ஹெச்.பி. திறன் 175 என்.எம். டார்க் இழுவிசை திறனை வெளிப்படுத்துகிறது.

    இதில் போலோ மாடல் மாருதி சுசுகி ஸ்விப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ 10, போர்டு பிகோ ஆகிய மாடலுக்கு போட்டியாகவும் அமியோ மாடல் மாருதி சுசுகி டிசையர், ஹூண்டாய் எக்சென்ட், ஃபோர்டு ஆஸ்பயர் மாடலுக்கு போட்டியாக இருக்கிறது. வென்டோ மாடலானது நடுத்தர ரக செடான் காராகும். இது ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ராபிட் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக விளங்குகிறது.
    24 மணி நேரத்துக்குள் கார் நிறுவனம் ரூ.100 கோடியை இடைக்கால தொகையாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. #NGT #Volkswagen #Deposit
    புதுடெல்லி:

    ஜெர்மனியை சேர்ந்த போக்ஸ்வேகன் மோட்டார் வாகன நிறுவனம் இந்தியாவில் தனது டீசல் கார்களில் மோசடியான கருவியை பயன்படுத்தியதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடியை இடைக்கால தொகையாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.



    இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு, தனது உத்தரவை அமல்படுத்தாத அந்த நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்தது. அதோடு, ரூ.100 கோடியை 24 மணி நேரத்துக்குள் அதாவது இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.  #NGT #Volkswagen #Deposit 
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மீது பசுமை தீர்ப்பாயம் விதித்த அபராத தொகையை விரைந்து செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #Volkswagen



    ஃவோக்ஸ்வேகன் டீசல் வாகனங்களில் வெளிப்படும் மாசு அளவை குறைக்க சட்ட விரோதமாக செயல்பட்டதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் மீது புகார் எழுந்தது. 

    இதைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் மாசு வெளிப்படுத்தியதாக ஃவோக்ஸ்வேகன் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி ஃவோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது. அதில் ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் செய்த குற்றத்திற்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.



    இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே அளித்த உத்தரவுபடி ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் நாளை (வெள்ளிக் கிழமை) மாலை 5 மணிக்குள் ரூ.100 கோடியை செலுத்த வேண்டும் என்று பசுமை தீர்பாயம் உத்தரவிட்டது.

    அதன்படி “நவம்பர் மாத உத்தரவை இதுவரை ஏன் பின்பற்றவில்லை? அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் நிறுவன தலைவர்கள் மீது கைது மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தெரிவித்தார். 
    அனுமதிக்கப்பட்ட அளவை விட வோல்க்ஸ்வோகன் கார்கள் அதிகளவு கார்பன் டை ஆக்சைடு புகையை வெளியேற்றுவதாக எழுந்த புகாரில் ஆடி கார் நிறுவனத்தின் சி.இ.ஓ ரூபெர்ட் ஸ்டாட்லெர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். #AudiCEO #RupertStadler
    முனிச்:

    ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கார் தயாரிப்பு நிறுவனம் வோல்க்ஸ்வோகன் , ஆடி கார் நிறுவனத்தின் தந்தை நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில், மூன்றாண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வோல்க்ஸ்வோகன் டீசல் கார்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, 40 மடங்கு அதிகளவு கார்பன் டை ஆக்சைடு புகையை வெளியேற்றுவது ஆய்வு ஒன்றில் தெரியவந்தது. 

    அமெரிக்காவில் நடந்த புகை மாசு பரிசோதனையில், அந்நிறுவனம் முறைகேடு செய்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. போலியாக விளம்பரம் வெளியிட்டு ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் உலகம் முழுவதும் கடும் நெருக்கடியை சந்தித்த வோல்க்ஸ்வோகன் நிறுவனம், லட்சக்கணக்கான கார்களை திரும்பப்பெற்றது. 

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆடி கார் நிறுவனத்தின் சி.இ.ஓ ரூபெர்ட் ஸ்டாட்லெர் ஜெர்மனியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அந்நிறுவனத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

    இந்தியாவில் TDI ரக இன்ஜின்களை தயாரிப்பதில் ஃபோக்ஸ்வேகன் புதிய மைல்கல் எட்டியிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 1,00,000 TDI (டர்போசார்ஜ்டு டைரக்ட் இன்ஜெக்ஷன்) ரக டீசல் இன்ஜின்களை தயாரித்து இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த இன்ஜின் பூனேவில் இயங்கி வரும் சக்கன் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இரண்டு TDI  ரக இன்ஜின்கள் - 1.5 லிட்டர் TDI  யூனிட், 108 பிஹெச்பி பவர், 89 என்எம் டார்கியூ செயல்திறன், பெரிய 2.0 லிட்டர் TDI மோட்டார் 141 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்கும் இன்ஜின்களை இந்தியாவில் தயாரித்து வருகிறது. 

    ஃபோக்ஸ்வேகன் தயாரித்த 1,00,000-வது இன்ஜின் 1.5 லிட்டர் TDI  மோட்டார் ஆகும். இந்த இன்ஜின் 108 பிஹெச்பி செயல்திறன் வழங்குகிறது. இது அதிகபட்சம் 250 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மேனுவல் மற்றும் DSG ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்குகிறது.



    இந்த இன்ஜின் ஃபோக்ஸ்வேகன் அமியோ, வென்டோ செடான் மற்றும் போலோ GT TDI மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான போலோ டீசல் இன்ஜின் 89 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்குகிறது. 

    2.0 லிட்டர் TDI இன்ஜின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டாப் என்ட் மாடல்களான ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யுவி மற்றும் பசாட் செடான் மாடல்களில் வழங்கப்படுகிறது. டகுவான் எஸ்யுவி மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 141 பிஹெச்பி பவர் வழங்குகிறது. பசாட் இன்ஜின் மாடலில் 175 பிஹெச்பி பவர் வழங்குகிரது. இரண்டு இன்ஜின்களும் 2.0 TDI டைரக்ட் ஷிஃப்ட் கியர்பாக்ஸ் (DSG) ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    புகைப்படம்: நன்றி PIXABAY
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கொல்ஃப் GTD மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    இந்திய சந்தையில் சர்ப்ரைஸ் வரவாக ஃபோக்ஸ்வேகன் கொல்ஃப் GTD சோதனை செய்யப்படுகிறது. கார்களின் வழக்கமான சோதனை போன்று இல்லாமல், கார் முழுமையாக மறைக்கப்படாமல் சாதாரணமாக சோதனை செய்யப்படுகிறது. 

    கர்நாடக மாநிலத்தின் பதிவு எண் கொண்டிருக்கும் கொல்ஃப் GTD பெங்களூரு சாலைகளில் சோதனை செய்யப்படுகிறது. காரின் பின்புறம் டெயில்பைப்-இல் சோதனை செய்யப்படும் கருவி பொருத்தப்பட்டு இருக்கிறது. இது போஷ் நிறுவனம் தனது டீசல் தொழில்நுட்பங்களை சோதனை செய்ய பயன்படுத்தும் கருவி போன்றே காட்சியளிக்கிறது. 

    போஷ் நிறுவனத்தின் புதிய டீசல் தொழில்நுட்பம் வாகன தயாரிப்பு நிறுவனங்களை நைட்ரஜன் ஆக்சைடு வெளியேற்றத்தை வெகுவாக குறைக்கச் செய்கிறது. இந்த தொழில்நுட்பம் பொருத்தி சோதனை செய்யப்படும் வாகனங்களின் மாசு அளவு தற்சமயம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் அளவுகளை விட குறைவு என்பதோடு இவை, 2020-ம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் அளவை விட குறைவு ஆகும். 



    ஃபோக்ஸ்வேகன் கொல்ஃப் GTD அந்நிறுவனத்தின் MQB பிளாட்ஃபார்ம் சார்வ்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது சர்வதேச சந்தையில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் தற்போதைய கொல்ஃப் MK7 மாடலின் செயல்திறன் மிக்க மாடலாகும். பாகங்கள் மற்றும் அம்சங்களை வைத்து பார்க்கும் போது கொல்ஃப் GTD பெரிய மாடலாக பார்க்கப்படுகிறது. 

    முன்பக்கம் கருப்பு நிற ஸ்டைலிங் செய்யப்பட்டு இருப்பதோடு ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப்கள், GTD பேட்ஜிங் கொண்ட பிளாக் மெஷ் கிரிள் அதிக காற்றோட்டம் வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. ட்வின் 5-ஸ்போக் அலாய் வீல்களை கொண்டிருக்கும் இந்த கார் வரிசையில் எல்இடி டெயில்லேம்ப்களை கொண்டுள்ளது.

    காரின் உள்புறம் அதிக தெளிவாக காட்சியளிக்காத நிலையில், கொல்ஃப் GTD மாடலின் கேபின் டிரைவர் சார்ந்த டேஷ்போர்டு, சென்ட்டர் கன்சோல், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் ஏர் கான் சிஸ்டம் இயக்க டையல் கன்ட்ரோல் மற்றும் 12.3 இன்ச் கலர் ஸ்கிரீன் மற்றும் நேவிகேஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் கொல்ஃப் GTD மாடலில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் இன்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 181 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்கியூ மற்றும் 7-ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    புகைப்படம்: நன்றி Etuners-Motorsport-India and Robesh Vasudevan
    பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் தனது புதிய கார்களின் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    ஐரோப்பாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் தனது போலோ, அமியோ மற்றும் வென்டோ கார்களின் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. 

    காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள புதிய கார்கள் ஸ்போர்ட் எடிஷன் என அழைக்கப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ மற்றும் வென்டோ ஸ்போர்ட் எடிஷன் மாடலின் ஸ்டைலிங்-ஐ மேம்படுத்துவம் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் கிளாஸ் பிளாக் ரூஃப் ஃபாயில், ஸ்டைலிஷ் சைடு ஃபாயில், பிளாக் ரியர் ஸ்பாயிலர் மற்றும் கார்பன் ஃபினிஷ் செய்யப்பட்ட ORVM கேப் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கின்றன. இதுதவிர மூன்று மாடல்களின் ஒட்டுமொத்த வடிவமைப்பில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.



    ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ மற்றும் வென்டோ ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் இந்தியா முழுக்க இயங்கி வரும் ஃபோக்ஸ்வேகன் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் கார்களுடன் #BeASport என்ற விளம்பர திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ஃபோக்ஸ்வேகன் கார்களை சோதனை செய்து காருக்கான விளம்பர வாசகத்தை #BeASport ஹேஷ்டேகுடன் சேர்த்து பதிவிட வேண்டும். இந்த போட்டியில் வெற்று பெறுபவருக்கு ஸ்பெஷல் எடிஷன் ஃபோக்ஸ்வேகன் கார் பரிசாக வழங்கப்படுகிறது.

    ஃபோக்ஸ்வேகன் சமீபத்தில் அறிமுகம் செய்த போலோ மற்றும் அமியோ பேஸ் எடிஷன்களில் சிறிய 1-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. 1-லிட்டர் இன்ஜின் 75 பிஹெச்பி பவர், 95 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
    ×