என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vellore corporation"
- வேலூர் மாநகராட்சி மீது பரபரப்பு புகார்
- கலெக்டர் ஆபீசில் பொதுமக்கள் மனு
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.வேலூர் மாநகராட்சி 32 -வது வார்டு கொணவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது;
கொணவட்டம் விரிவு பகுதியான இந்திரா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு சாலைகள் கழிவுநீர் கால்வாய் சீரான குடிநீர் வசதி போதுமான மின்விளக்கு வசதி குப்பை தொட்டிகள் சுகாதார பராமரிப்பு வசதிகள் இல்லை.
இது பற்றி பலமுறை மனு அளித்தும் நேரில் முறையிட்டும் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
வேலூர் மாநகராட்சி நிர்வாகம் வரி வசூலில் காட்டும் வேகத்தை அடிப்படை வசதிகள் செய்வதிலும் அக்கறை காட்ட வேண்டும்.
இந்திரா நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேலூர் மாநகராட்சிக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
பலத்த மழை எச்சரிக்கையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதியில் கால்வாய் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடக்கிறது.
தமிழகத்தில் பலத்த மழை செய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவிப்பு விடுத்துள்ளது. இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தபட்டு தயார் நிலையில் இருக்குமாறு வலியுறுத்தபட்டுள்ளது.
இதையடுத்து வேலூர் மாநகராட்சி பகுதியில் பணிகள் முன்னேற்பாடு துரிதபடுத்தபட்டுள்ளது. சாலைகளில் தேங்கிய மழைநீரை வாகனங்கள் மூலம் அகற்றி வருகின்றனர்.
பலத்த மழை பெய்தால் நிக்கல்சான் கால்வாயில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதில் அடைப்பு ஏற்பட்டால் முள்ளிப்பாளையம், இந்திராநகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் வரும். இதனை தவிர்க்க நிக்கல்சன் கால்வாய் தூர்வாரப்பட்டது.
பெங்களூர் ரோட்டில் மங்காய் மண்டி அருகே கால்வாயில் இருந்த அடைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். பொக்லைன் எந்திரம் கொண்டு தூர்வாரப்பட்டது.
பழைய பைபாஸ் ரோடு பகுதிகளில் உள்ள கால்வாய்களும் தூர்வாரப்பட்டன. பணிகளை கலெக்டர் ராமன், சப்-கலெக்டர் மெகராஜ், கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். உதவி கமிஷனர் மதிவாணன், மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதேபோல காட்பாடி, சத்துவாச்சாரி, தொரப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்