search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலத்த மழை எச்சரிக்கை- வேலூர் மாநகராட்சியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
    X

    பலத்த மழை எச்சரிக்கை- வேலூர் மாநகராட்சியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    பலத்த மழை எச்சரிக்கையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதியில் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர், கமி‌ஷனர் ஆய்வு செய்தனர்.
    வேலூர்:

    பலத்த மழை எச்சரிக்கையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதியில் கால்வாய் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடக்கிறது.

    தமிழகத்தில் பலத்த மழை செய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவிப்பு விடுத்துள்ளது. இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தபட்டு தயார் நிலையில் இருக்குமாறு வலியுறுத்தபட்டுள்ளது.

    இதையடுத்து வேலூர் மாநகராட்சி பகுதியில் பணிகள் முன்னேற்பாடு துரிதபடுத்தபட்டுள்ளது. சாலைகளில் தேங்கிய மழைநீரை வாகனங்கள் மூலம் அகற்றி வருகின்றனர்.

    பலத்த மழை பெய்தால் நிக்கல்சான் கால்வாயில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதில் அடைப்பு ஏற்பட்டால் முள்ளிப்பாளையம், இந்திராநகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் வரும். இதனை தவிர்க்க நிக்கல்சன் கால்வாய் தூர்வாரப்பட்டது.

    பெங்களூர் ரோட்டில் மங்காய் மண்டி அருகே கால்வாயில் இருந்த அடைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். பொக்லைன் எந்திரம் கொண்டு தூர்வாரப்பட்டது.

    பழைய பைபாஸ் ரோடு பகுதிகளில் உள்ள கால்வாய்களும் தூர்வாரப்பட்டன. பணிகளை கலெக்டர் ராமன், சப்-கலெக்டர் மெகராஜ், கமி‌ஷனர் விஜயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். உதவி கமி‌ஷனர் மதிவாணன், மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    இதேபோல காட்பாடி, சத்துவாச்சாரி, தொரப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. #tamilnews
    Next Story
    ×