search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle accident"

    கனகசெட்டிகுளத்தில் சாலையை கடக்க முயன்றவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து போனார்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டை அடுத்த கனக செட்டிகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இரவு 50வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் அந்த நபர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விபத்தில் பலியானவர் யார்- எந்த ஊர் என்பது குறித்தும் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குன்னம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
    குன்னம்:

    குன்னம் அருகே உள்ள சின்னவெண்மணி சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மகன் காந்தி (வயது45). விவசாயி. இவர் சம்பவதன்று தனது மோட்டார் சைக்கிளில் சின்ன வெண்மணியில் இருந்து மேலமாத்தூர் சென்று  கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் காந்தி படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காந்தி இறந்தார். 

    இது குறித்து குன்னம் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகிறார்கள். 
    குறிஞ்சிப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த மதனகோபாலபுரம் ஆர்.சி.காலனியை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 35). கூலித்தொழிலாளி.

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடி சென்று மளிகைப்பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் ஜெபராஜ் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இந்தவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் குறிஞ்சிப்பாடி போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் ஜெபராஜீக்கு மனைவியும், 2 பெண்கள் குழந்தைகள் மற்றும் 1 மகனும் உள்ளனர்.

    வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    வேப்பூர்:

    வேப்பூர் அருகே உள்ள விளம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல்(வயது 50) விவசாயி. இவர் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூர் சென்றார். பின்னர் அங்கு வேலை யை முடித்துவிட்டு அங்கிருந்து விளம்பாவூருக்கு அதே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    பெரியநசலூர் பஸ் நிறுத்தம் அருகே சேலம்-விருத்தாசலம் சாலையில் வந்தபோது பின்னால் வந்த வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் தூக்கிவீசப்பட்ட ராஜவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விபத்து குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த அடிப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    குன்னம்:

    பெரம்பலூர் அருகே உள்ள எரையசமுத்திரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் ரங்கநாதன் (வயது 34). இவர் நேற்று பெரம்பலூருக்கு வேலைக்காக சென்றார். பின்னர் இரவு வீடு திரும்பினார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே கல்பாடிபிரிவு ரோட்டில் சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது அங்கு வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ரங்கநாதன் மீது மோதியது. 

    இதில் தலையில் பலத்த அடிபட்டு ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டது.

    இது குறித்து தகவல் அறிந்தும் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று ரங்கநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசுமருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகிறார்கள். 
    முள்ளோடையில் சாலையை கடக்க முயன்றவர் மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் உடல் சிதைந்து பலியானார்.

    பாகூர்:

    கன்னியகோவில் அருகே முள்ளோடையில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் எதிரே இன்று அதிகாலை 5 மணியளவில் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் புதுவை- கடலூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் மீது அடுத்தடுத்து வந்த வாகனங்களும் மோதின. இதில் முகமே அடையாளம் தெரியாத வகையில் அவர் உடல் சிதறி போனது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிதறி கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வாகனங்கள் மோதி இறந்தவர் கடலூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

    இதையடுத்து கடலூர், நெல்லிக்குப்பம் பண்ருட்டி, போலீசாருக்கு கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

    ×