search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Dosa"

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - ஒரு கப்
    ஓட்ஸ் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 1
    கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
    இஞ்சி - சிறிது அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    வெங்காயம் - 2
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், அரிசி மாவு, கொத்தமல்லி போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, சீரகம் சேர்த்து வதக்கி கரைத்த மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்தான ஒட்ஸ் - வெங்காய தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - முக்கால் கப்,
    அரிசி மாவு - கால் கப்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    புளித்த மோர் - கால் கப்,
    வெங்காயம் - ஒன்று,
    இஞ்சி -  சிறு துண்டு,  
    பச்சை மிளகாய் - ஒன்று,
    நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு,



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவை போட்டு அதனுடன் புளித்த மோர், சீரகம், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை விளிம்பிலிருந்து நடுவாக ஊற்றி, இடைவெளியை மாவால் பரத்தி, ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விடவும்.

    ஒரு பக்கம் தோசை வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு சிவந்ததும் எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை - சீரக தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    வல்லாரை கீரை ஞாபகசக்தியை அதிகரிக்கும். ஊட்டச்சத்துமிக்கது என்பதால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்றது. இன்று இந்த கீரையை வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வல்லாரை கீரை - 1 கப்
    கோதுமை மாவு - 2 கப்
    பெரிய வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து அதனுடன் வெங்காயம். ப.மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஒரு கரண்டி ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பச்சைப்பயறு வைத்து செய்யும் பெசரட்டு சத்து நிறைந்தது. இந்த சந்து நிறைந்த இந்த பெசரட்டுடன் மசாலா சேர்த்து செய்து எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பச்சைப் பயறு - 1 கப்
    பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\
    வெங்காயம் - 1 (விரும்பினால்)
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - சிறு துண்டு
    உப்பு - தேவையான அளவு
    பெருங்காயம்

    தாளிக்க:

    எண்ணெய், சீரகம்.

    காய்கறி :

    வெங்காயம்,
    கேரட்,
    குடைமிளகாய்,
    கறிவேப்பிலை,
    கொத்தமல்லித் தழை.



    செய்முறை :


    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சைப் பயறு, பச்சரிசியை குறைந்தது 8 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.

    இரண்டும் நன்றாக ஊறியதும் அதனுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துக் கலந்துகொள்ளவும்.

    மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெயைச் சூடாக்கி, அதில் மிகப் பொடியாக அரிந்த வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், துருவிய கேரட், கறிவேப்பிலை சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து வைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.

    மேலே காய்கறிக் கலவையை சிறிது பரவலாகத் தூவவும், தோசைத் திருப்பியால் லேசாக ஒட்டிக்கொள்ளுமாறு அழுத்தவும்.

    சுற்றி எண்ணெய் விட்டு முறுகலாக வேகவைக்கவும்.

    திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

    சூப்பரான மசாலா பெசரட்டு ரெடி.

    அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும். காய்கறிக் கலவை மேலே தூவி தயாரிக்க சிரமப்படும் புதிதானவர்கள், மாவுக் கலவையிலேயே இந்த வதக்கிய கலவையைக் கலந்து செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வரகு, ராகி, கோதுமையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வயதானவர்கள் சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது.
    தேவையான பொருட்கள் :

    வரகு அரிசி - 200 கிராம்
    கோதுமை - 100 கிராம்
    கேழ்வரகு - 100 கிராம்
    உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
    வெந்தயம் - 2 டீஸ்பூன்
    நெய் (அ) நல்லெண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வரகு அரிசி, ராகி, கோதுமையை தண்ணீரில் 5 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த எல்லா மாவையும் ஒன்றாக கலக்கவும்.

    இதில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

    சத்தான வரகு ராகி கோதுமை தோசை தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கொத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். விருந்தினர்கள் திடீரென வந்து விட்டால் இதை செய்து கொடுத்து அசத்தலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 2 கரண்டி
    முட்டை - 2
    வெங்காயம் - ஒன்று
    கொத்தமல்லித்தழை -  சிறிதளவு
    மிளகு - அரை டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகு, சீரகத்தைப் பொடித்து வைக்கவும்.

    முட்டையை உடைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்.

    தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தேய்க்கவும் (சற்று தடிமனாக இருந்தால் நல்லது; மெல்லியதாக வார்க்க வேண்டாம்). தோசையின் மேல் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றவும்.

    ஒருபுறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.

    வெந்த முட்டை தோசையை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    கடாயில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் பாதியளவு வதங்கியதும் தோசைத் துண்டுகளைச் சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டு வதக்கவும்

    கடைசியாக மிளகு - சீரகப் பொடி, கொத்தமல்லி சேர்த்து வதக்கி இறக்கவும்.

    சூப்பரான கொத்து தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மசாலா தோசை, பொடி தோசை, ரவா தோசை என பலவிதமான தோசைகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குதிரைவாலி அரிசி, தக்காளி சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - 4 கப்
    உளுந்து - 1 கப்
    தக்காளி - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    வெந்தயம் - கால் டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 3 மணிநேரம் ஊறவைத்து தோசைக்கு அரைப்பது போல் அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலந்து 4 மணிநேரம் புளிக்க விடவும்.

    தக்காளி, இஞ்சி, சீரகத்தை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த விழுதை புளித்த மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான குதிரைவாலி தக்காளி தோசை ரெடி.

    இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தேங்காய் சட்னியுடன் சுவைக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கேரட், தக்காளி சேர்த்து சத்தான கலர்புல்லான தோசை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை அரிசி - 1 கப்
    புழுங்கல் அரிசி - 1 கப் [வேண்டுமெனில், அரை கப் அவல் கூட சேர்த்துக் கொள்ளலாம்]
    தக்காளி - 1
    கேரட் துருவியது - இரண்டு கப்
    மிளகு - 1 டீஸ்பூன்
    சிவப்பு மிளகாய் - 6
    பெருங்காயத் தூள் - சிறிது  
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு.



    செய்முறை

    அரிசியை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், தக்காளி, மிளகாய், மிளகு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த விழுதை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடைசியாக இதில் கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை சேர்த்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான கேரட் - தக்காளி தோசை ரெடி.

    இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாலக்கீரை, கேரட் இரண்டிலும் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :


    தோசை மாவு - ஒரு கப்,
    நறுக்கிய பாலக்கீரை - ஒரு கப்,
    கேரட் துருவல் - ஒரு கப்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்),
    எண்ணெய் - தேவையான அளவு,
    உப்பு - சிறிதளவு.



    செய்முறை:

    பாலக்கீரையுடன் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு வேகவிடவும்.

    ஆறியபின் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

    தோசை மாவுடன் அரைத்த விழுது, கேரட் துருவல் சேர்த்துக் கலக்கவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

    சத்தான பாலக் - கேரட் தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×