search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomato Dosa"

    சர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று தக்காளி சேர்த்து கோதுமை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 2,
    கோதுமை மாவு - 1 கப்,
    பெரிய வெங்காயம் - 1,
    இட்லி மாவு - அரை கிராம்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    காய்ந்தமிளகாய் - 2,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    சீரகம் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை கோதுமை மாவுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து, அதனுடன் காய்ந்தமிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.

    இட்லி மாவுடன் அரைத்த தக்காளி மாவு கலவை, உப்பு சேர்த்து நன்கு கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து மாவை கரைத்துக் கொள்ளவும்.

    பின்பு நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான தக்காளி கோதுமை தோசை ரெடி.

    தேங்காய் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மசாலா தோசை, பொடி தோசை, ரவா தோசை என பலவிதமான தோசைகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குதிரைவாலி அரிசி, தக்காளி சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - 4 கப்
    உளுந்து - 1 கப்
    தக்காளி - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    வெந்தயம் - கால் டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 3 மணிநேரம் ஊறவைத்து தோசைக்கு அரைப்பது போல் அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலந்து 4 மணிநேரம் புளிக்க விடவும்.

    தக்காளி, இஞ்சி, சீரகத்தை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த விழுதை புளித்த மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான குதிரைவாலி தக்காளி தோசை ரெடி.

    இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தேங்காய் சட்னியுடன் சுவைக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கேரட், தக்காளி சேர்த்து சத்தான கலர்புல்லான தோசை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை அரிசி - 1 கப்
    புழுங்கல் அரிசி - 1 கப் [வேண்டுமெனில், அரை கப் அவல் கூட சேர்த்துக் கொள்ளலாம்]
    தக்காளி - 1
    கேரட் துருவியது - இரண்டு கப்
    மிளகு - 1 டீஸ்பூன்
    சிவப்பு மிளகாய் - 6
    பெருங்காயத் தூள் - சிறிது  
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு.



    செய்முறை

    அரிசியை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், தக்காளி, மிளகாய், மிளகு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த விழுதை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடைசியாக இதில் கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை சேர்த்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான கேரட் - தக்காளி தோசை ரெடி.

    இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×