search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Dosa"

    ஹோட்டலில் ரவா ரோஸ்ட் செய்வது போலவே வீட்டிலேயும் எளிய முறையில் செய்யலாம். இன்று வீட்டில் ரவா ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - 1 கப்
    அரிசி மாவு - 1 1/2 கப்
    மைதா மாவு - 4 டேபிள் ஸ்பூன்
    கெட்டியான மோர் (அ) புளித்த தயிர் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு
    பச்சைமிளகாய் - 5
    முந்திரி - 15



    செய்முறை :

    கொத்தமல்லி, முந்திரி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் மோர் விட்டு கரைக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் வைக்கவும். மாவு, சாதாரண தோசை மாவைவிட நீர்க்க இருக்கவேண்டும். அதனால் ஒரு கப்பிற்கும் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

    தோசை வார்க்கும் முன்பாக மாவுடன் சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஊற்றவும். வழக்கமாக தோசை ஊற்றுவது போல செய்யக்கூடாது. கல் நன்றாகச் சூடானதும் கரண்டியால் ரவாதோசை மாவைக் கலக்கிவிட்டு 2 கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் தெளித்தாற்போல ஊற்றவும்.

    சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசை மீதும் கொஞ்சம் எண்ணெய் தெளித்து வேகவிடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து சட்னிகளுடன் சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான ரவா ரோஸ்ட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும். இன்று தூதுவளை சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தூதுவளை கீரை - அரை கப்
    இட்லி அரிசி - 1 கப்
    உளுந்து - கால் கப்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    இஞ்சி, மிளகாய் விழுது - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு



    செய்முறை:

    தூதுவளை கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.

    அரிசி, உளுந்து இரண்டையும் மூன்று மணி நேரம் ஊறவைத்து மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    வெந்தயத்தையும் ஊறவைத்து அதனுடன் தூதுவளை சேர்த்து அரைத்து மாவு சேர்க்க வேண்டும்.

    பின்னர் மாவு கலவையுடன் உப்பு சேர்த்து சில மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

    அதன் பிறகு மாவுடன் இஞ்சி மிளகாய் விழுதை கலந்து கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான தூதுவளை தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நவதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த நவதானியங்களை சேர்த்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :   

    புழுங்கல் அரிசி - 1 கப்
    பச்சரிசி - 1 கப்
    உளுந்து - 1/4 கப்
    கொள்ளு - 2 ஸ்பூன்
    கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
    கொண்டைக்கடலை - 2 ஸ்பூன்
    துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
    பாசிப்பருப்பு  - 1 ஸ்பூன்
    பட்டாணி பருப்பு - 1 ஸ்பூன்
    காராமணி - 1 ஸ்பூன்
    வேர்க்கடலை - 1 ஸ்பூன்
    மொச்சை பயறு - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :


    வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உளுந்து, அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

    மொச்சை பயிறு, கொண்டைக்கடலை, கொள்ளு, காராமணி இவைகளை கழுவி இரவே ஊற வைக்கவும்.

    வேர்க்கடலையை தவிர மற்ற பருப்புகளை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

    வேர்க்கடலையை சிவக்க வறுத்து ரவை போல பொடித்து கொள்ளவும்.

    ஊறவைத்த பருப்புகளை உப்பு சேர்த்து நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து 2 மணிநேரம் புளிக்க விடவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடனாதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    உடலுக்கு வலு சேர்க்கும் நவதானிய தோசை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பித்தம், கல்லீரல் கோளாறு உள்ளவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். இன்று பீட்ரூட் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரைத்த பீட்ரூட் விழுது - அரை கப்
    தோசை மாவு - இரண்டு கப்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    தோசை மாவுடன் அரைத்த உப்பு, பீட்ரூட் விழுதை தேவைகேற்ப சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும்.

    அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் மாவை ஊத்தப்பத்தை விட மெல்லியதாக ஊற்றி விடவும். இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் தோசையை எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான பீட்ரூட் தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சோளத்தில் மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து அதிகம் உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்து உள்ளது. இன்று சோள மாவில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோளம் - 500 கிராம்,
    உளுந்து - 100 கிராம்,
    வெந்தயம் - 2 மேசைக்கரண்டி,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து, தனியாக தோசைமாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

    ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்கவைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.

    சூப்பரான சத்தான சோள தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பன்னீரில் புலாவ், கிரேவி, பிரியாணி, பிரை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பன்னீர் ஸ்டப்ஃடு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 200 கிராம்
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    கறிவேப்பில்லை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1/4 - 1/2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    கரம்மசாலா தூள் - கால் தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 1



    செய்முறை :

    பன்னீரை துருவிக் கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து குலையும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் கடைசியாக துருவிய பன்னீர் சேர்த்து கிளறவும்.

    இப்போது பன்னீர் பூரணம் தயார்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் வேக விடவும்.

    தோசை வெந்த பிறகு பன்னீர் பூரணத்தை தோசைக்கு நடுவில் வைத்து இரண்டாக மடக்கி எடுத்து பரிமாறவும்.

    சுவையான பன்னீர் தோசை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகு, முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து அருமையான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - 1/4 கிலோ
    முருங்கைக் கீரை - கைப்பிடியளவு
    வெங்காயம் - 2
    பச்சரிசி - கால் கப்
    உளுத்தம்பருப்பு - கைப்பிடியளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

    பிறகு அதனை தனித்தனியாக நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

    அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான சத்தான கேழ்வரகு தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொள்ளுப்பருப்பில் ஏராளமான நன்மைகள் உள்ளன. மாதத்துக்கு இரண்டு முறை சேர்த்துக்கொண்டால் போதுமானது. இன்று கொள்ளு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி அரிசி - ஒரு கப்,
    பச்சரிசி - அரை கப்,
    கொள்ளு - ஒன்றரை கப்,
    கல் உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கொள்ளுப்பருப்பு சேர்த்து, தண்ணீரில் நன்கு கழுவிக்கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் மீண்டும் ஒருமுறை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும்.

    ஊறவைத்தவற்றை கிரைண்டரில் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து பொங்கப் பொங்க நன்கு அரைத்துக்கொள்ளவும் (சுமார் 30 நிமிடங்கள்). அரைத்த மாவைப் பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும். பிறகு தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்கவிடவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை மாவை ஊற்றி தோசையைச் சுற்றி 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு நன்கு முறுகலானதும் திருப்பிப் போட்டு வேகவைத்து இறக்கவும்.

    காரச் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான கொள்ளு தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோதுமையில் பல்வேறு சத்தான, சுவையான உணவுகளை தயார் செய்யலாம். இன்று கோதுமை ரவா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - முக்கால் கப்,
    அரிசி மாவு - கால் கப்,
    கோதுமை ரவை - அரை கப்,
    புளித்த மோர் - ஒரு கரண்டி,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று,
    இஞ்சி - சிறு துண்டு,
    கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்,  
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    எண்ணெய் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் விட்டு, தோசை மாவை விட நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் நான்ஸ்டிக் தோசைக்கல்லை வைத்து சூடானதும் சிறிது எண்ணெயை தடவி, மாவை விளிம்பிலிருந்து வட்டமாக உள்புறம் ஊற்றவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விட்டு, தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, முறுகலாக எடுத்துப் பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை ரவா தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு மசாலா தோசை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று உருளைக்கிழங்கு, பன்னீர் சேர்த்து ஸ்டப்ஃடு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 3 கப் உளுத்தம்
    பருப்பு - 1 கப்
    உருளைக்கிழங்கு - 4
    பன்னீர் - 1/2 கப்
    வெங்காயம் - 3
    பச்சை மிளகாய் - 4  
    கடுகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    வெண்ணெய் - 1/2 கப்



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இரவில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், அதனை கிரைண்டரில் போட்டு, நைஸாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து, அதில் உப்பு சேர்த்து கலந்து, 4-5 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின், வெங்காயம் ப.மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பன்னீர், மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி, இறக்க வேண்டும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் வெண்ணெய் ஊற்றி, உருகியதும், தோசை மாவால் தோசை ஊற்றி சுற்றி சிறிது வெண்ணெய் போட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்க வேண்டும்.

    பின் அந்த தோசை ஒரு தட்டில் வைத்து, அதன் நடுவில் வதக்கி வைத்த பன்னீர், உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அதில் வதக்கி சுற்றி தேய்த்து, சுருட்டி பரிமாற வேண்டும்.

    இதேப் போல் வேண்டி அளவில் தோசை ஊற்றி, சாப்பிடலாம்.

    இப்போது சுவையான பன்னீர் - உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை ரெடி.

    இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு மசால் தோசையை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே இந்த தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தோசை மாவு - 2 கப்

    மசாலாவிற்கு

    உருளைக்கிழங்கு - 250 கிராம்,
    வெங்காயம் - 2,
    ப.மிளகாய் - 4,
    இஞ்சி - ஒரு துண்டு,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    கொத்தமல்லி தழை - சிறிதளவு,
    உப்பு - சுவைக்கு

    தாளிக்க...
     
    கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தேவையான அளவு.



    செய்முறை :

    வெங்காய், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மசித்துக் கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி கிளறி இறக்கவும். மசால் ரெடி.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி மெலிதான தோசையாக வார்க்கவும். சுற்றி சிறிதளவு நெய் ஊற்றிக்கொள்ளவும். ஒரு பகுதி வெந்ததும், தயார் செய்து வைத்திருக்கும் மசாலில் இரண்டு தேக்கரண்டி எடுத்து தோசையின் நடுவில் வைத்து பரப்பி மடக்கி எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு மசால் தோசை ரெடி.

    இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

    கடைசியில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

    இப்போது சுவையான வடைகறி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று தக்காளி சேர்த்து கோதுமை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 2,
    கோதுமை மாவு - 1 கப்,
    பெரிய வெங்காயம் - 1,
    இட்லி மாவு - அரை கிராம்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    காய்ந்தமிளகாய் - 2,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    சீரகம் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை கோதுமை மாவுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து, அதனுடன் காய்ந்தமிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.

    இட்லி மாவுடன் அரைத்த தக்காளி மாவு கலவை, உப்பு சேர்த்து நன்கு கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து மாவை கரைத்துக் கொள்ளவும்.

    பின்பு நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான தக்காளி கோதுமை தோசை ரெடி.

    தேங்காய் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×