search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ragi Dosa"

    கேழ்வரகு, முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து அருமையான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - 1/4 கிலோ
    முருங்கைக் கீரை - கைப்பிடியளவு
    வெங்காயம் - 2
    பச்சரிசி - கால் கப்
    உளுத்தம்பருப்பு - கைப்பிடியளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

    பிறகு அதனை தனித்தனியாக நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

    அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான சத்தான கேழ்வரகு தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வரகு, ராகி, கோதுமையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வயதானவர்கள் சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது.
    தேவையான பொருட்கள் :

    வரகு அரிசி - 200 கிராம்
    கோதுமை - 100 கிராம்
    கேழ்வரகு - 100 கிராம்
    உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
    வெந்தயம் - 2 டீஸ்பூன்
    நெய் (அ) நல்லெண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வரகு அரிசி, ராகி, கோதுமையை தண்ணீரில் 5 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த எல்லா மாவையும் ஒன்றாக கலக்கவும்.

    இதில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

    சத்தான வரகு ராகி கோதுமை தோசை தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, ரவை சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்
    அரிசி மாவு - கால் கப்
    ரவை - அரை கப்
    ப.மிளகாய் - 1
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மிளகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    ப.மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகை இரண்டாக பொடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ரவை, பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவை விட சற்று தளர்வாக கரைத்து கொள்ளவும்.

    கரைத்த மாவை அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை பரவலாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சத்து நிறைந்த கேழ்வரகு ரவா தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×