search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vadai"

    பட்டாணி பருப்பில் வடை செய்வதால் சூப்பராக இருக்கும். இன்று பட்டாணி பருப்பை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பட்டாணிப் பருப்பு - 200 கிராம்,
    கடலைப் பருப்பு - 50 கிராம்,
    அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு டேபிள் ஸ்பூன்,
    இஞ்சித் துண்டுகள் - சிறிய துண்ட
    பச்சை மிளகாய் - 2,
    உப்பு - தேவைக்கேற்ப,
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.



    செய்முறை :

    இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டாணிப் பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபியுடன் சூடாக சாப்பிட அருமையாக இருக்கும் கோதுமை ரவை வடை. இன்று இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானப் பொருட்கள் :

    கோதுமை ரவை - ஒரு கப்
    வெள்ளை உளுந்து - 1/2 கப்
    பெரிய வெங்காயம் - 1/2 கப்
    பச்சைமிளகாய் - 2
    இஞ்சி - ஒரு சின்ன துண்டு
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - 2 கொத்து
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    கோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

    பிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும்படி கலந்து வைக்கவும்.

    அரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.

    மாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் சூடாகும் வரை அடுப்பை நன்றாக எரியவிட்டு, வடைகளை போட்டு பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.

    சுவையான கோதுமை ரவை வடை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் காபி, டீயுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று கோஸ் சேர்த்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுத்தம்பருப்பு - 1 கப்,
    பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கப்,
    இஞ்சி - 1 துண்டு,
    பச்சை மிளகாய் - 2,
    கறிவேப்பிலை - சிறிது,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    உப்பு - ருசிக்கேற்ப,
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை:

    உளுத்தம் பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.

    ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து கொள்ளவும்.

    அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது மாவை எடுத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான கோஸ் வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட காலிஃபிளவர் வடை சூப்பராக இருக்கும். இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காலிஃபிளவர் - ஒரு கப்
    கடலை மாவு - இரண்டு டீஸ்பூன்
    கசகசா - கால் டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைகேற்ப
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - ஒன்று



    செய்முறை

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காலிஃபிளவரை நன்றாக சுத்தம் செய்து பூக்களாக வெட்டி வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் பொடியாக நறுக்கிய காலிஃபிளவர் போட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்டி வைத்து கொள்ளவும்.

    இன்னொரு கிண்ணத்தில் வடிகட்டிய காலிஃபிளவர், கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காலிஃபிளவர் மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

    சூப்பரான காலிஃபிளவர் வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட பிரெட் மெதுவடை சூப்பராக இருக்கும். இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் ஸ்லைஸ் (சால்ட் பிரெட்) - 10
    ரவை - 3 டீஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - ஒன்று
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு, பிரெட்டை சிறிய துண்டுகளாக்க வெட்டி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் பிரெட் துண்டுகள், ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நறுக்கி வைத்த கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பிறகு, அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக்கி, தட்டி, நடுவே ஓட்டை போட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பிரெட் மெதுவடை ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு காபி அல்லது டீயுடன் பிரெட், உருளைக்கிழங்கு சேர்த்து வடை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 10
    வறுத்த ரவை - அரை கப்
    அரிசி மாவு - இரு டேபிள் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    கேரட் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 2
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது
    உருளைக் கிழங்கு - 2



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பிரெட்டை போட்டு உதிர்த்துக்கொள்ளுங்கள்.

    இதனுடன் வறுத்த ரவை, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

    சூப்பரான பிரெட் - உருளைக்கிழங்கு வடை ரெடி.

    விருப்பப்பட்டால் தேங்காய் சட்னி, மல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் மட்டன் என்றால் சாப்பிட மறுப்பார்கள். இன்று மட்டனை வைத்து குழந்தைகள் சாப்பிடும் வகையில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாமல் கொத்திய மட்டன் - 200 கிராம்
    கடலைப்பருப்பு - 50 கிராம்
    சோம்பு - 10 கிராம்
    கரம்மசாலாத் தூள் - 2 கிராம்
    பூண்டு - 50 கிராம்
    பச்சைமிளகாய் - 3
    கறிவேப்பிலை - 3 ஈர்க்கு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    சீரகம் - 5 கிராம்
    வெங்காயம் - 25 கிராம்
    பொட்டுக்கடலை (லேசாகப் பொடிக்கவும்) - 20 கிராம்
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
    பெருங்காயம் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    எலும்பில்லாமல் கொத்திய மட்டனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பவுலில் கடலைப்பருப்பு, சோம்பு, சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து ஊறவைத்து பின்பு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த விழுதுடன் கொத்திய ஆட்டுக்கறியையும் போட்டு அரைத்து தனியாக வைக்கவும்.

    பொட்டுக்கடலை, கரம் மசாலாத்தூள், பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த மட்டன் விழுது, பொட்டுக்கடலை விழுது, உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து, தட்டையாகத் தட்டவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள உருண்டைகளை வடைகளாக தட்டி போட்டு எண்ணெயில் போட்டு பொரித்து சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் வடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க சிக்கன் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
    வெங்காயம் - 2
    ப.மிளகாய் - 2
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    முட்டை - 1
    கறிமசாலா துள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு,
    மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப,
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

    மிக்சியில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கன் விழுதை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.

    பிறகு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கறிமசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

    பின்னர் இவற்றுடன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். அரைத்த சிக்கன் விழுதுடன் எல்லாவற்றையும் சேர்த்த பிறகு ஒன்றாக கலந்து வடை மாவு பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவை வடை போல தட்டி எண்ணெயில் போட்டு வேக விடவும். நன்கு பொன்னிறமானதும் எடுத்து விடவும்.

    சூடான சிக்கன் வடை தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பச்சைப்பயறில் சுண்டல், தோசை, பெசரட் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பச்சைப்பயறை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பயறு - ஒரு கப்,
    பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன்,
    இஞ்சி - சிறிய துண்டு,
    மிளகு, சோம்பு - தலா கால் டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :  

    பச்சைப் பயறை 3 மணி நேரம் ஊறவிடவும்.

    பச்சரிசியை தனியே அரை மணி நேரம் ஊறவிடவும்.

    பச்சைப் பயறுடன், அரிசியை சேர்த்து அரைக்கவும்.

    கடைசியாக அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, சோம்பு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்து வைத்த மாவை வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உளுந்து, கடலைப்பருப்பு, பட்டாணி பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இன்று வேர்க்கடலையை வைத்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை வேர்க்கடலை - ஒரு கப்,
    பச்சை மிளகாய் - 3,
    இஞ்சி - சிறிய துண்டு,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
    வெங்காயம் - ஒன்று,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :  

    இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வேர்க்கடலையை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    ஊறிய வேர்கடலையை நீரை பிழிந்துவிட்டு, தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த வேர்க்கடலை விழுது சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதம் மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான வேர்க்கடலை வடை ரெடி.

    தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் காபி, டீயுடன் குடிக்க அருமையாக இருக்கும் இந்த கொண்டைக்கடலை வடை. இன்று இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சென்னா (கொண்டைக்கடலை) - ஒரு கப்,
    இஞ்சி - சிறிய துண்டு,
    சோம்பு - அரை டீஸ்பூன்,
    மிளகு - கால் டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 3,
    புதினா - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

    நன்றாக ஊறியதும் அதனுடன் தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, மிளகு, புதினா, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும் (தேவைப்பட்டால் 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்க்கவும்).

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால்... கொண்டைக்கடலை வடை தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க. பச்சை பட்டாணியில் வடை செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    பச்சைப் பட்டாணி (உரித்தது) - ஒரு கப் (காய்ந்த பட்டாணி எனில் ஒன்றரை கப்),
    கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    இஞ்சி - சிறிய துண்டு,
    சோம்பு - அரை டீஸ்பூன்,
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 4,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :  

    வெங்காயம், ப.மிளகாய், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டாணியுடன் (காய்ந்த பட்டாணியில் செய்வதாக இருந்தால் 8 மணி நேரம் ஊற வைக்கவும். பச்சைப் பட்டாணி என்றால், ஊற வைக்க வேண்டாம்) தோல் சீவிய இஞ்சி, சோம்பு, சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவுடன் கடலை மாவு, உப்பு, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, புதினா, சூடான எண்ணெய் 1 டீஸ்பூ சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் எண்ணெய் ஊற்றி மாவை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான பச்சை பட்டாணி வடை ரெடி.

    குறிப்பு - இந்த வடைக்கு மாவு அரைக்கும் போது கொரகொரப்பாக அரைத்தால் தான் மொறுமொறு என்று சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×