என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "TTD"
- கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
- இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெவ்வேறு தேதிகளில் வெளியிடப்படுகிறது.
முன்கூட்டியே இது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் பக்தர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
ஆனாலும் சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் முன்பதிவு செய்து விடுகின்றனர்.
இந்த நிலையில் மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிகளில் ஆர்ஜித சேவை மற்றும் ரூ.300 கட்டண டிக்கெட்டுகளை வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் 18 முதல் 20-ந் தேதிக்குள் சுப்ரபாதம் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். பொது ஆர்ஜித சேவைக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் 21-ந் தேதி வெளியிடப்படும்.
மாதந்தோறும் 24-ந் தேதி ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு இலவச தரிசனம் டிக்கெட் வழங்கப்படுகிறது. நடைபாதையாக செல்லும் பக்தர்களுக்கு 1240-வது படிக்கட்டில் சாமி தரிசனம் செய்ய இலவச டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 70,366 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 38,653 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.32 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- ஒரு வினாடிக்கு 20 முதல் 30 டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.
- 1½ மணி நேரத்தில் 15.25 லட்சம் தரிசன டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தது.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் நீண்ட நேரம் தரிசனத்திற்காக காத்திருக்காமல் இருப்பதற்காக தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது.
இந்த நிலையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இன்று காலை ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
மே மாதத்திற்கான 7 லட்சத்து 75 ஆயிரம் டிக்கெட்டுகளும், ஜூன் மாதத்திற்கு 7 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 15 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்படுவதால் விறுவிறுப்பாக தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் டிக்கெட் முன் பதிவு செய்ய முயன்றதால் ஆன்லைன் சேவை முடங்கியது. இதனால் பக்தர்கள் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் அவதி அடைந்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டே இருந்தனர். ஒரு வினாடிக்கு 20 முதல் 30 டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. வெளியிடப்பட்ட 1½ மணி நேரத்தில் 15.25 லட்சம் தரிசன டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தது.
ஆன்லைன் முன்பதிவு எந்த வித பிரச்சனையும் இல்லாமல் வேகமாக நடந்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தகர்.
இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களின் வசதிக்காக பஸ் நிலையம், ரெயில் நிலையம், அலிபிரி, கோவிந்தராஜ சாமி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தினமும் 25 ஆயிரம் நேர ஒதுக்கிட்டு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.
இதேபோல் ஸ்ரீவாணி அறக்கட்டளை, சுப்ரபாதம், நிஜபாத சேவை, சகஸ்ர தீப அலங்காரம், கல்யாண உற்சவம் உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பதியில் நேற்று 63, 870 பேர் தரிசனம் செய்தனர்.27,480 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.88 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- போலி இணையதளங்களை நம்ப வேண்டாம்.
- பக்தர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தலாம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (மே) மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
பக்தர்கள் ரூ.300 டிக்கெட் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து தரிசனம் செய்யலாம். போலி இணையதளங்களை நம்ப வேண்டாம்.
பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான URL https://tirupatibalaji.ap.gov.in என்ற முகவரியை பயன்படுத்தலாம். பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியான "TTDevasthanams" மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
- மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை செலுத்தி உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல், ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் இன்று காலை 11.30 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
ஜூலை மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் இன்று மாலை 3 மணிக்கு தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஜூலை மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்வாய்பட்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்களின் ஒதுக்கீடு நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் தேவஸ்தானம் வெளியிடுகிறது.
இதன் தொடர்ச்சியாக, மெய்நிகர் சேவைகளுக்கான மே மாத ஒதுக்கீடு, 24-ந்தேதி காலை 10 மணிக்கும், ஜூன் மாத ஒதுக்கீடு 24-ந் தேதி மாலை 3 மணிக்கும் வெளியிடப்படுகின்றன.
மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.
திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கும், திருப்பதியில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு 27-ந் தேதி காலை 10 மணிக்கும் இணையத்தில் வெளியிடப்பட் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
- இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை செலுத்தி உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல், ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் நாளை காலை 11.30 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
ஜூலை மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் நாளை மாலை 3 மணிக்கு தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஜூலை மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்வாய்பட்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்களின் ஒதுக்கீடு நாளை மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் தேவஸ்தானம் வெளியிடுகிறது.
இதன் தொடர்ச்சியாக, மெய்நிகர் சேவைகளுக்கான மே மாத ஒதுக்கீடு, 24-ந்தேதி காலை 10 மணிக்கும், ஜூன் மாத ஒதுக்கீடு 24-ந் தேதி மாலை 3 மணிக்கும் வெளியிடப்படுகின்றன.
மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.
திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கும், திருப்பதியில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு 27-ந் தேதி காலை 10 மணிக்கும் இணையத்தில் வெளியிடப்பட் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 66, 476 பேர் தரிசனம் செய்தனர். 25,338 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை பக்தர்களுக்கு வசதியாக தரிசனம் செய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியாக உள்ளது.
திருப்பதி ஏழுமலையானை ரூ.300 டிக்கெட்டில் சென்று சுலபமாக தரிசிக்க ஏப்ரல் மாதத்துக்கான ஆன்லைன் ஓதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது.
- ஏப்ரல் மாதத்திற்காக டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை பக்தர்களுக்கு வசதியாக தரிசனம் செய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியாக உள்ளது.
திருப்பதி ஏழுமலையானை ரூ.300 டிக்கெட்டில் சென்று சுலபமாக தரிசிக்க ஏப்ரல் மாதத்துக்கான ஆன்லைன் ஓதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இன்று பிற்பகல் 2 மணியளவில் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
- உற்சவ சேவைக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த மாதத்துக்கான (மார்ச்) ரூ.300 தரிசன டிக்கெட் ஒதுக்கீடு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது.
ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று பிற்பகல் 2 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
அதேபோல் மார்ச் மாதத்துக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, உற்சவ சேவைக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் கவனத்தில் கொண்டு தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாலை 4 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடுகிறது.
- ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மூலமாக தரிசிக்க மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத ஒதுக்கீட்டை இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடுகிறது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை அதில் அடங்கும்.
அதேபோல் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீதமுள்ள ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் லக்கி டிப் (குலுக்கல் முறை) பதிவு செயல்முறை இன்று காலை 10 மணியில் இருந்து 24-ந்தேதி காலை 10 மணி வரை இருக்கும். லக்கி டிப்பில் டிக்கெட் பெற்றவர்கள் பணம் செலுத்தி உறுதிப்படுத்த வேண்டும். பக்தர்கள் இந்த நடைமுறைகளை கவனித்து ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 7 நாளைக்கு 1.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.
- சிறிது நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்பட்டுவிட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரத்தில் உள்ள தங்க தகடுகள் பதித்து நீண்ட நாட்கள் ஆனதால் புதியதாக தங்கத் தகடுகள் பதிக்கும் பணிக்காக தேவஸ்தானம் சார்பில் பாலாலயம் நடந்தது. இதனால் இம்மாதம் 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 7 நாட்களுக்கு ரூ.300 ஆன்லைன் தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தங்க தகடுகள் பதிக்கும் பணி தாமதமாகும் என கூறப்பட்டதால் சர்வதேச அளவில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு உள்ளது. இதனால் தங்க தகடுகள் பதிக்கும் பணி 6 மாத காலத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதனால் ஆன்லைன் தரிசனம் ரத்து செய்யப்பட்ட 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலான ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
ஒரு நாளைக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 7 நாளைக்கு 1.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.
டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்பட்டுவிட்டது.
இதேபோல் மார்ச் மாதத்திற்கான அங்கப்பிரதட்சனை டிக்கெட்டுகளை இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட்டது.
பக்தர்கள் அங்கப்பிரதட்சன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருப்பதியில் நேற்று 80,969 பேர் தரிசனம் செய்தனர். 26,777 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.
- குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்யலாம்.
திருப்பதி ஏழுமலையானை வருகிற 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை தரிசிப்பதற்காக ரூ.300 டிக்கெட்டுகள் 13-ந்தேதி காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதைப் பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் ரூ.300 டிக்கெட் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்யலாம்.
மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும்.
- டிக்கெட்டுகள் நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இம்மாதம் 22-ந் தேதி முதல் 28 ம் தேதி வரை நடக்கும் கல்யாண உற்சவம், கட்டண பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை ஆகிய கட்டண சேவைகளில் மெய் நிகர் அடிப்படையில் கலந்து கொள்ள தேவையான டிக்கெட்டுகள் நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
மெய்நிகர் அடிப்படையிலான கட்டண சேவைகளில் பங்குபெறும் பக்தர்களுக்கு மற்றொரு நாளில் ஏழுமலையானை நேரடியாக தரிசிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
இதேபோல் இம்மாதம் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அபிஷேகம் ஆகிய கட்டண சேவைகளில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள் இன்று காலை 10 மணி முதல் 10 ம் தேதி காலை 10 மணி வரை தேவஸ்தான வெப் சைட் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்த பக்தர்கரின் பெயர்கள் குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் இம்மாதம் 22 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை நடக்க இருக்கும் கட்டண சேவைகளில் நேரடியாக பங்கு பெற விரும்பும் பக்தர்கள் இன்று பகல் 12 மணி முதல் தேவையான டிக்கெட்டுகளை www.tirupatibalaji.gov.in என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்