search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரிசன டிக்கெட்"

    • குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம்.
    • ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை பெறும் கட்டண சேவா டிக்கெட்டுகளுக்கான மே மாத டிக்கெட்கள் இன்று காலை வெளியிடப்பட்டன.

    இதில் சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கலுக்கு ஆன்லைன் பதிவு 21-ந் தேதி காலை 10 மணி வரை செய்யலாம்.

    அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ரதிப அலங்கர சேவைகளுக்கான டிக்கெட்டுகள் பிப்ரவரி 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

    இதே சேவைகளுக்கு நேரடியாக பங்கேற்காமல் சாமி தரிசனத்திற்கு மட்டும் மே மாத டிக்கெட்கள் வருகிற 22-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

    மே மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.

    மே மாதத்திற்கான. அங்கப்பிரதட்சணம் இலவச டோக்கன்கள் 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது.

    மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் வருகிற 23-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.

    மே மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.

    • பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன.
    • திருப்பதியில் நேற்று 63, 519 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசியொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன.

    இதேபோல் கடந்த 23-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு 4 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் 9 இடங்களில் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

    இலவச தரிசன டிக்கெட் பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 4 லட்சம் இலவச தரிசன டிக்கெட் இன்று அதிகாலையுடன் தீர்ந்தது.

    இதையடுத்து இலவச தரிசனம் டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டன. ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் திருப்பதி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    திருப்பதி மலைக்கு செல்லும் பக்தர்கள் பஸ்சில் ஏறும்போது தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டும் பஸ்சில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    மற்ற பக்தர்கள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடப்படுகின்றனர். இதேபோல் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடியில் டிக்கெட் உள்ளதா என பரிசோதித்து திருப்பதி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    மற்ற பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

    இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

    கோவிலில் நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    வருகிற ஜனவரி 1-ந் தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்த தகவல் தெரியாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாமல் திரும்பி வருகின்றனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் வைகுண்ட வாசல் தரிசன டிக்கெட்டு களை பக்தர்களுக்கு தேவஸ்தானம் தினமும் விநியோகித்து இருக்க வேண்டும்.

    ஒட்டுமொத்தமாக விநியோகம் செய்ததால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அவதி அடையாமல் இருக்க தேவஸ்தான அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்என வலியுறுத்தினர்.

    திருப்பதியில் நேற்று 63, 519 பேர் தரிசனம் செய்தனர். 26,424 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.5 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 9 இடங்களில் வழங்கப்படும் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
    • நடைபாதை பக்தர்கள் அலிப்பிரி நடைபாதை அடிவாரத்தில் தரிசனம் டோக்கன் பெறலாம்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் வருகிற 1-ந் தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது. இதற்காக ஏற்கனவே ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டது.

    மேலும் பக்தர்களுக்கு 4 லட்சம் இலவச தரிசன டோக்கன் வழங்க விரிவான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.

    திருப்பதியில் 9 மையங்களில் 90 கவுண்டர்களில் இன்று மதியம் 2 மணி முதல் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது.

    இதன் காரணமாக நாளை முதல் திருப்பதியில் நேரடி இலவச தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    9 இடங்களில் வழங்கப்படும் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    இதற்காக மலை அடிவாரத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பக்தர்களின் ஆதார் அட்டை மற்றும் தரிசன டோக்கன்களை சரி பார்த்து மலைக்கு அனுப்பி வைப்பார்கள்.

    9 மையங்களிலும் தரிசன டோக்கன் தீரும் வரை பக்கர்களுக்கு வழங்கிக் கொண்டே இருப்பார்கள்.

    அந்த டோக்கனில் பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டிய நாள், நேரம் போன்றவை இடம்பெற்றிருக்கும். அதன் அடிப்படையில் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து கொள்ளலாம்.

    தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது. இதனால் பக்தர்கள் வழக்கத்தை விட கூடுதலாக திருப்பதிக்கு வருவார்கள் .

    டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி உள்ளதால் கீழ் திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

    டோக்கன் வழங்கப்படும் மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்ப டுகின்றனர்.

    இன்று வழக்கம் போல நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    நாளை முதல் டோக்கன் இல்லாத பக்தர்கள் அனுமதிக்க படமாட்டார்கள். நேரடி இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் வர வேண்டாம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் 9 மையங்களில் வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் வேலூர் வழியாக திருப்பதி செல்லும் பக்தர்கள் பஸ் நிலையம் எதிரே உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களுக்கு எளிதில் செல்ல முடியும். அந்த இடங்களில் கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதால் டிக்கெட்டுகளை பெறலாம்.

    பஸ் நிலையம் அருகே உள்ள சீனிவாசம் காம்ப்ளக்சில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் உள்ளன.

    நடைபாதை பக்தர்கள் அலிப்பிரி நடைபாதை அடிவாரத்தில் தரிசனம் டோக்கன் பெறலாம்.

    • விமான நிலையத்துக்குப் பதிலாக திருமலை கோகுலம் தங்கும் விடுதியில் டிக்கெட் வழங்கப்படுகிறது.
    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை பரமபதவாசல் திறக்கப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலை யானை தரிசிக்க வரும் வெளிநாட்டு பக்தர்களின் வசதிக்காக திருப்பதி விமான நிலையத்தில் தினமும் 100 நேரடி (ஆப்லைன்) தரிசன ஸ்ரீவாணி டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

    ஆனால், ஸ்ரீவாணி டிக்கெட்டுகளுக்கு விமான நிலையத்தில் அனுமதி வழங்கப்படாததால், இன்று முதல் விமான நிலையத்துக்குப் பதிலாக திருமலை கோகுலம் தங்கும் விடுதியில் டிக்கெட் வழங்கப்படுகிறது.

    ஸ்ரீவாணி தரிசனம் நேரடி(ஆப்லைன்)தரிசன டிக்கெட்டுகளுக்கு வழக்கம் போல் அனுமதி சீட்டு சமர்ப்பித்த பக்தர்களுக்கு தினமும் 100 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை பரமபதவாசல் திறக்கப்படுகிறது.

    இதையொட்டி வருகிற 19-ந் தேதி கோவில் சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது. எனவே அன்று தேவஸ்தானம் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது.

    வருகிற 18-ந் தேதி முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பரணி தீபத்துக்கும், மகா தீபத்துக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
    • முறைகேடுகள் தடுப்பதற்காக புதிய முறையில் அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபத்துக்கும், மகா தீபத்துக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 24-ந் தேதி கோவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    அதேபோல் இந்த முறை கட்டளைதாரர், உபயதாரர்களுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டில் சிப் பொருத்தி வழங்கப்பட உள்ளது.

    முறைகேடுகள் தடுப்பதற்காக புதிய முறையில் அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அக்டோபர் மாதத்திற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
    • அக்டோபர் மாதத்துக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் சாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கூடுதலாக இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. அதேபோல் அக்டோபர் மாதத்துக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகிறது.

    அக்டோபர் மாதத்திற்கான, திருப்பதி மற்றும் தலகோனா விடுதியில் வாடகை அறைகள் முன்பதிவு வரும் 26-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் முன்பதிவு பட்டியலை வெளியிட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏற்கனவே ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களுக்காக கூடுதலாக வெளியிடப்பட உள்ளது.

    இதுதவிர அக்டோபர் மாதத்திற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. எனவே பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை இன்று (25-ந் தேதி) காலை 10 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • அக்டோபர் மாதத்திற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
    • நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அக்டோபர் மாதத்திற்க்கான திருமலை அங்கபிரதட்சணம் டோக்கன்களின் முன்பதிவு வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

    ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கு அக்டோபர் மாதத்துக்கான தரிசனம் மற்றும் தங்குமிட ஒதுக்கீடு உள்ளிட்டவை வரும் 24-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

    அக்டோபர் மாதத்திற்க்கான மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் அவதியுறுவோர் உள்ளிட்டோரின் முன்பதிவு வரும் 24-ந் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

    ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் சாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கூடுதலாக வரும் 25-ந் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. அதேபோல் அக்டோபர் மாதத்துக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகிறது.

    அக்டோபர் மாதத்திற்க்கான, திருப்பதி மற்றும் தலகோனா விடுதியில் வாடகை அறைகள் முன்பதிவு வரும் 26-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் முன்பதிவு பட்டியலை வெளியிட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏற்கனவே ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களுக்காக கூடுதலாக வெளியிடப்பட உள்ளது.

    இதுதவிர அக்டோபர் மாதத்திற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. எனவே பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை வருகிற 25-ந் தேதி காலை 10 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 71,721 பேர் சாமி தரிசனம் செய்தனர். 30,078 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.88 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • பக்தர்கள் மொபைல் எண், இ-மெயில் ஐடி குறிப்பிட்டு குலுக்கலில் பங்கு பெறலாம்.
    • டிக்கெட் ஒதுக்கீடு பெறும் பக்தர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.

    திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் குலுக்கல் முறையில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம் உட்பட கட்டண சேவை டிக்கெட் ஒதுக்கீடுசெய்யப்படுகிறது. பக்தர்கள் மொபைல் எண், இ-மெயில் ஐடி குறிப்பிட்டு குலுக்கலில் பங்கு பெறலாம்.

    டிக்கெட் ஒதுக்கீடு பெறும் பக்தர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். பின்னர் வங்கி கவுண்டரில் பக்தர்கள் நேரடியாக பணம் செலுத்தி, டிக்கெட் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் டிக்கெட் ஒதுக்கீடாக பெறும் பக்தர்கள் மொபைல் எண்ணுக்கு பேமென்ட்லிங்க் அனுப்பி, அதன்மூலம் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கிக் கொள்ளும் வசதியை தேவஸ்தான நிர்வாகம் சோதனை அடிப்படையில் நேற்று அறிமுகம் செய்தது.

    இந்த பேமென்ட் லிங்க் மூலம் யுபிஐ ஐடி, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பக்தர்கள் பணம் செலுத்தலாம். பக்தர்கள் கொடுத்திருக்கும் வாட்ஸ்ஆப் எண் அல்லது மெயில் ஐடிக்கு டிக்கெட் வந்து சேரும். அந்த டிக்கெட்டை பக்தர்கள் நகல் எடுத்துக் கொள்ளலாம்.

    திருப்பதியில் பரிசோதனை அடிப்படையில் கொண்டு வந்துள்ள இந்த நடைமுறை வெற்றி பெற்றால், அடுத்து வி.ஐ.பி பிரேக் தரிசன கட்டணம் செலுத்தவும் இதே நடைமுறையை கொண்டுவர தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

    • ரூ 5.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    • பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    90 நாட்களுக்கு முன்பு பக்தர்கள் தங்களது திருப்பதி பயணத்தை முன்பதிவு செய்து கொள்ளும் விதமாக டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.

    அக்டோபர் மாதத்திற்கான சுப்ரபாதம் தோமாலை அர்ச்சனை அஷ்டதல பாத மாறாதன சேவைக்காளை காண இன்று காலை 10 மணிக்கு டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

    ஆர்ஜித சேவை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் வருகிற 20-ந் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். பின்னர் நடைபெறும் ஆன்லைன் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்படும். தகவல் பெற்ற பக்தர்கள் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.

    கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவைகளை காண டிக்கெட்டுகள் வரும் 21-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது அக்டோபர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன் ஒதுக்கீடு வரும் 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

    பக்தர்கள் https:tiripati balaji.ap.gov.in என்ற இணையதளத்தில் சேவை டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 71,894 பேர் தரிசனம் செய்தனர். 25,208 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 5.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    • ஆகஸ்ட் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது.
    • நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறக்கூடிய சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, உள்ளிட்ட கட்டண சேவைகளுக்கான குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பதிவுக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது.

    வருகிற 19-ந் தேதி காலை 10 மணி முதல் 21-ந் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

    21-ந் தேதி காலை 12 மணிக்கு எலக்ட்ரானிக் குலுக்கல் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு செல்போன் அல்லது இமெயிலுக்கு தகவல் அனுப்பப்படும்.

    அதனை வைத்துக் கொண்டு பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

    இதேபோன்று ஆகஸ்ட் மாதம் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வருடாந்திர பவித்ர உற்சவம் ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந் தேதி வரையில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 22-ந் தேதி காலை 10 மணி முதல் தங்களுக்கு வேண்டிய சேவைகளை பக்தர்கள் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

    செப்டம்பர் மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 70 ஆயிரத்து 896 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 37,546 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.4.07 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • ரூபாய் 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கோடைகால விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 29 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ரூபாய் 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையானை ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தரிசிக்க, அந்த மாதங்களுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.

    பக்தர்கள் இதைக் கவனித்து, திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளமான https://tirupatibalaji.ap.gov.in -ல் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நேற்று 85,297 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    37,392 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். கோவில் உண்டியலில் செலுத்திய காணிக்கை இரவு எண்ணப்பட்டது இதில் ரூ.3.71 கோடி காணிக்கையாக கிடைத்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
    • இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெவ்வேறு தேதிகளில் வெளியிடப்படுகிறது.

    முன்கூட்டியே இது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் பக்தர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

    ஆனாலும் சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் முன்பதிவு செய்து விடுகின்றனர்.

    இந்த நிலையில் மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிகளில் ஆர்ஜித சேவை மற்றும் ரூ.300 கட்டண டிக்கெட்டுகளை வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    ஒவ்வொரு மாதமும் 18 முதல் 20-ந் தேதிக்குள் சுப்ரபாதம் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். பொது ஆர்ஜித சேவைக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் 21-ந் தேதி வெளியிடப்படும்.

    மாதந்தோறும் 24-ந் தேதி ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு இலவச தரிசனம் டிக்கெட் வழங்கப்படுகிறது. நடைபாதையாக செல்லும் பக்தர்களுக்கு 1240-வது படிக்கட்டில் சாமி தரிசனம் செய்ய இலவச டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 70,366 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 38,653 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.32 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

    இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ×