என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » traffic ramasamy
நீங்கள் தேடியது "Traffic ramasamy"
விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிப்பில் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் `டிராஃபிக் ராமசாமி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #TrafficRamasamy
சமூக போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி `டிராஃபிக் ராமசாமி' என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. விக்கி இயக்கியிருக்கும் இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்திருக்கிறார். அவரது மனைவி கதாபாத்திரத்தில் ரோகினி நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி படம் வருகிற ஜூன் 22-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
பிரகாஷ்ராஜ், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பூ உள்ளிட்டோர் சிறப்பு வேடத்தில் வருகின்றனர். பாலமுரளி பாலு இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படத்தில் இருந்து ஏற்கனவே `போராளி அன்ந்தம்', `கோமாளி' என இரு பாடல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் மற்ற பாடல்கள் இன்று வெளியாக இருக்கிறது. #TrafficRamasamy
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடைவிதிக்கக்கோரி டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். #Jayaalithaa #TrafficRamasamy #HighCourt
சென்னை:
சென்னை ஐகோர்ட்டு கோடை விடுமுறைகால நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு ஆகியோர் இன்று அவசர வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.
அப்போது, டிராபிக் ராமசாமி ஆஜராகி, ‘முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடலோர ஒழுங்கு முறை சட்டத்துக்கு எதிராக, கடற்கரைக்கு மிக அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டக்கூடாது என்று ஏற்கனவே, நான் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தோம். ஆனால், என் தரப்பில் வக்கீல் ஆஜராகவில்லை என்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை ஐகோர்ட்டு ஏற்றுக் கொண்டது. தற்போது அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த சில நாட்கள் முன்பு நடந்தது. இதில், முதல்அமைச்சர், துணை முதல்அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். வழக்கு நிலுவையில் இருக்கும் போது அரசு செலவில் நினைவிடம் பணியை மேற்கொள்வது ஐகோர்ட்டை அவமதிக்கும் செயல். இதுதொடர்பாக நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கை அவசர வழக்காக இப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்’ என்று கூறினார்.
அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. உங்களது வழக்கை முதல் வழக்காக விசாரணைக்கு ஏற்க முடியாது. கடைசி வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று கூறினார். #Jayaalithaa #TrafficRamasamy #HighCourt
சென்னை ஐகோர்ட்டு கோடை விடுமுறைகால நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு ஆகியோர் இன்று அவசர வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.
அப்போது, டிராபிக் ராமசாமி ஆஜராகி, ‘முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடலோர ஒழுங்கு முறை சட்டத்துக்கு எதிராக, கடற்கரைக்கு மிக அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டக்கூடாது என்று ஏற்கனவே, நான் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தோம். ஆனால், என் தரப்பில் வக்கீல் ஆஜராகவில்லை என்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை ஐகோர்ட்டு ஏற்றுக் கொண்டது. தற்போது அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த சில நாட்கள் முன்பு நடந்தது. இதில், முதல்அமைச்சர், துணை முதல்அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். வழக்கு நிலுவையில் இருக்கும் போது அரசு செலவில் நினைவிடம் பணியை மேற்கொள்வது ஐகோர்ட்டை அவமதிக்கும் செயல். இதுதொடர்பாக நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கை அவசர வழக்காக இப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்’ என்று கூறினார்.
அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. உங்களது வழக்கை முதல் வழக்காக விசாரணைக்கு ஏற்க முடியாது. கடைசி வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று கூறினார். #Jayaalithaa #TrafficRamasamy #HighCourt
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X