search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPL 2022"

    • திருப்பூர் அணி சார்பில் மான் பாப்னா 37 ரன்கள் எடுத்தார்.
    • நெல்லை அணியின் ஈஸ்வரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    கோவை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கோயம்புத்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நெல்லை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. நெல்லை அணியின் துல்லியமான பந்துவீச்சில் திருப்பூர் அணி சிக்கியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    திருப்பூர் அணியில் அதிகபட்சமாக மான் பாப்னா 37 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது.

    நெல்லை சார்பில் ஈஸ்வரன் 3 விக்கெட், ஹரீஷ் 2 வ்க்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.

    • திருச்சி அணிக்கு எதிராக ராதாகிருஷ்ணன் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் விளாசினார்.
    • 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணியால் 159 ரன்களே எடுக்க முடிந்தது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 81 ரன்களும், உதிரசாமி சசிதேவ் 65 ரன்களும் குவித்தனர். திருச்சி தரப்பில் அஜய் கிருஷ்ணா, பொய்யாமொழி தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணியால் 20 ஓவர்களில் இலக்கை எட்ட முடியவில்லை. சாத்விக் 33 ரன்களும், சந்தோஷ் ஷிவ் 59 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் அளித்தனர். ஆனால் அதன்பின்னர் வந்த வீரர்கள் அதிரடி காட்ட தவறியதால் ரன்ரேட் வெகுவாக சரிந்தது. நிரஞ்சன் 11 ரன், நிதிஷ் ராஜகோபால் 9 ரன்கள் என விரைவில் விக்கெட்டை இழந்தனர். கடைசி நேரத்தில் சற்று அதிரடி காட்டிய ஆதித்ய கணேஷ் 28 ரன்கள் சேர்த்தார்.

    முகமது அத்னன் கான் 10 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் திருச்சி அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களே எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஹரிஷ் குமார் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    • ராதாகிருஷ்ணன் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் விளாசினார்.
    • திருச்சி தரப்பில் அஜய் கிருஷ்ணா, பொய்யாமொழி தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கவுசிக் காந்தி 19 ரன்களும், மற்றொரு துவக்க வீரர் ஜெகதீசன் 15 ரன்களும் சேர்த்தனர்.

    அதன்பின்னர், திருச்சி பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடச் செய்த ராதாகிருஷ்ணன் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் விளாசினார். உதிரசாமி சசிதேவ் 35 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 65 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். திருச்சி தரப்பில் அஜய் கிருஷ்ணா, பொய்யாமொழி தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.

    • முதலில் ஆடிய சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது.
    • கோவை அணியின் துவக்க வீரர் சுரேஷ் குமார் 64 ரன்கள் விளாசினார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் -சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. அதிபட்சமாக கோபிநாத் 41 ரன்களும், பிரணவ் குமார் 32 ரன்களும், அஸ்வின் 31 ரன்களும் எடுத்தனர்.

    இதையடுத்து 147 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கோவை அணி 21 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டியது. துவக்க வீரர் சுரேஷ் குமார் 64 ரன்கள் விளாசினார். கங்கா ஸ்ரீதர் ராஜு 13 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின்னர் சாய் சுதர்சன் ஆட்டமிழக்காமல் 56 ரன்களும், ஷாருக்கான் 5 ரன்களும் சேர்க்க, கோவை அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 149 ரன்கள் குவித்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சுரேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

    • மதுரை அணியின் கேப்டன் சதுர்வேத் அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 75 ரன்கள் குவித்தார்.
    • கோவை அணிக்கு எதிராக மதுரை அணியின் சிலம்பரசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கலில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. முகிலேஷ் அபாரமாக ஆடி 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சுரேஷ் குமார் 22 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் குவித்தார்.

    மதுரை அணி சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டும், சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆதித்யா, பால்சந்ஹர் அனிருத் ஆகியோர் டக் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் அருண் கார்த்திக் நிதானமாக ஆடினார்.

    கேப்டன் சதுர்வேத் பொறுப்புடன் ஆடினார். இவர் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தார். கார்த்திக் 38 ரன்னில் அவுட்டானார்.

    அபாரமாக ஆடிய சதுர்வேத் அரை சதமடித்து, 75 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெகதீசன் கவுசிக் 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மதுரை அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.

    • கோவை அணியில் அதிரடியாக ஆடிய முகிலேஷ், 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் குவித்தார்.
    • மதுரை அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட், சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கலில் நடைபெறும் 2வது ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி கேப்டன், பீல்டிங்கைத் தேர்வு செய்ய, கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    கோவை அணியின் துவக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜு, சாய் சுதர்சன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தனர். சஜித் சந்திரன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம், மறுமுனையில் சுரேஷ் குமார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆறுதல் அளித்தார். அவர் 22 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் குவித்தார்.

    அதன்பிறகு முகிலேஷ் அபாரமாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. தொடர்ந்து அதிரடி காட்டிய முகிலேஷ், 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.

    மதுரை அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட் கைப்பற்றினார். சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 12 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது.
    • பாபா அபராஜித், சஞ்ய் யாதவ் இருவரும் அதிரடியாக ஆடி ஆட்டத்தை முடித்தனர்.

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதினன. மழை காரணமாக போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    முதலில் ஆடிய திண்டுக்கல் அணி திண்டுக்கல் அணி 12 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய விஷால் வைத்யா, 21 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் குவித்தார். ஹரி நிஷாந்த் 27 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் விளாசினார். நெல்லை தரப்பில் ஸ்ரீ நிரஞ்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணி, 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 133 ரன்கள் குவித்து வெற்றியை எட்டியது. துவக்க வீரர் நிரஞ்சன் 18 ரன்னிலும், சூர்யபிரகாஷ் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் பாபா அபராஜித், சஞ்ய் யாதவ் இருவரும் அதிரடியாக ஆடி ஆட்டத்தை முடித்தனர். பாபா அபராஜித் 59 ரன்களும் (நாட் அவுட்), சஞ்சய் யாதவ் 55 ரன்களும் (நாட் அவுட்) விளாசினர். இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது.

    இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, நடப்பு சீசனில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியையும், 2வது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்சையும் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் நெல்லை அணி, புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    • விஷால் வைத்யா, 21 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் குவித்தார்.
    • திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை பந்துவீச்சாளர் ஸ்ரீ நிரஞ்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மழை காரணமாக போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நெல்லை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணியில், துவக்க வீரர்களான விஷால் வைத்யா, கேப்டன் ஹரி நிஷாந்த் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    அதிரடியாக ஆடிய விஷால் வைத்யா, 21 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். துவக்க ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. ஹரி நிஷாந்த் 27 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். மணி பாரதி (1), ராஜேந்திரன் விவேக் (12), மோகித் ஹரிஹரன் (3) என சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    மோனீஸ் 10 ரன்களும் (நாட் அவுட்), பிரதீப் 14 ரன்களும் (நாட் அவுட்) சேர்க்க, திண்டுக்கல் அணி 12 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது. நெல்லை தரப்பில் ஸ்ரீ நிரஞ்சன் 3 விக்கெட் வீழ்த்தினார். அதிசயராஜ் டேவிட்சன், சஞ்சய் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. 

    • திருச்சி அணியின் சரவணகுமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    • திருப்பூர் அணியின் துஷார் ரஹேஜா அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தார்.

    நெல்லை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லையில் நடைபெற்ற ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய திருச்சி அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. முரளி விஜய் 34 ரன்னும், அமித் சாத்விக் 26 ரன்னிம் எடுத்து வெளியேறினர். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய சரவணகுமார் 17 ரன்னும், மதிவண்ணன் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    158 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.

    இதனால் 6 விக்கெட்டுக்கு 98 ரன்களை எடுத்து திணறியது.

    அடுத்து இறங்கிய துஷார் ரஹேஜா, மொஹமது ஜோடி பொறுப்புடன் ஆடியது.

    இறுதியில், திருப்பூர் அணீ 6 விக்கெட்டுக்கு 158 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. துஷார் ரஹேஜா 26 பந்தில் 42 ரன்னுடனும், மொஹமது 15 பந்தில் 29 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    • ரூபி திருச்சி வாரியர்ஸ் முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்தது.
    • அதிரடியாக ஆடிய முரளி விஜய் 16 பந்தில் 1 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 34 ரன்னில் வெளியேறினார்.

    நெல்லை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லையில் நடைபெறும் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, திருச்சி அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான அமித் சாத்விக், முரளி விஜய் அதிரடியாக ஆடினர்.

    அணியின் எண்ணிக்கை 57 ஆக இருக்கும்போது முரளி விஜய் 34 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து அமித் சாத்விக் 26 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய நிதிஷ் ராஜகோபால் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து இறங்கிய ஆதித்ய கணேஷ் 15 ரன்னிலும், அட்னன் கான் 13 ரன்னிலும், ஆண்டனி தாஸ் 13 ரன்னிலும் அவுட்டாகினர்.

    கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய சரவணகுமார் 17 ரன்னும், மதிவண்ணன் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 158 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.

    • திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தனர்.
    • அதிரடியாக ஆடிய ஹரி நிஷாந்த் 36 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 60 ரன்கள் குவித்தார்.

    நெல்லை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது. பொறுப்புடன் ஆடிய முகிலேஷ் 25 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். சுரேஷ் குமார் 37 ரன்னும், கங்கா ஸ்ரீதர் ராஜு 33 ரன்னும், ஷிஜித் 30 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 189 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். அணியின் எண்ணிக்கை 100 ஆக இருந்தபோது ஹரி நிஷாந்த் 60 ரன்னில் அவுட்டானார். விஷால் வைத்யா 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய விவேக் 10 பந்தில் 3 சிக்சர் உள்பட 22 ரன் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை எடுத்து முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பிரதீப் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    • லைகா கோவை கிங்ஸ் பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தது.
    • அதிரடியாக ஆடிய முகிலேஷ் 25 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 49 ரன்னில் வெளியேறினார்.

    நெல்லை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கங்கா ஸ்ரீதர் ராஜு, சுரேஷ் குமார் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

    அணியின் எண்ணிக்கை 67 ஆக இருக்கும்போது சுரேஷ் குமார் 37 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து கங்கா ஸ்ரீதர் ராஜு 33 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து இறங்கிய ஷிஜித் சந்திரன், முகிலேஷ் அதிரடியாக ஆடினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது. ஷிஜித் 30 ரன்னில் அவுட்டானார்.

    முகிலேஷ் 25 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 49 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 189 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.

    ×