search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPL 2022"

    • சேப்பாக் அணியின் சாய் கிஷோர் வெறும் 2 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
    • சேப்பாக் அணி சார்பில் சசிதேவ் அதிகமாக 45 ரன்களை எடுத்தார்.

    சேலம்:

    சேலத்தில் இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி முதலில் ஆடிய சேப்பாக் அணி 9 விக்கெட்டுக்கு 133 ரன்களை எடுத்தது. சசிதேவ் அதிரடியாக ஆடி 45 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ராதாகிருஷ்ணன் 24 ரன்னும், சாய் கிஷோர் 19 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 134 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. சேப்பாக் அணி வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் திருப்பூர் அணி விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    குறிப்பாக, சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 3 மெய்டன் எடுத்து, வெறும் 2 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில் திருப்பூர் அணி 73 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் சேப்பாக் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • இந்த ஆட்டத்தில் வென்றால் பிளேஆப் சுற்று வாய்ப்பை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உறுதி செய்துவிடும்.
    • சேப்பாக் அணி சார்பில் சசிதேவ் அதிகமாக 45 ரன்களை எடுத்தார்.

    சேலம்:

    சேலத்தில் இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் டக் அவுட்டானார். கேப்டன் கவுசிக் காந்தி 2 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ராதாகிருஷ்ணன் 24 ரன்னும், சாய் கிஷோர் 19 ரன்னும் ராஜகோபால் சதீஷ் 5 ரன்னும், சோனு யாதவ் 12 ரன்னும், ஹரீஷ்குமார் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இறுதியில், சேப்பாக் அணி 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்தது. சசிதேவ் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 45 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 134 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.

    • சேலம் அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர் கோபிநாத் 24 ரன்கள் சேர்த்தார்.
    • திருச்சி அணியின் ஸ்கோர் 26 ஆக இருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடின. முதலில் ஆடிய சேலம் அணி 19.5 ஓவர்களில் 87 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கோபிநாத் 24 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து 88 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை விட்டபோதும் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் தொடர்ந்து போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஆட்டம் கைவிடப்பட்டது.

    இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 3 விக்கெட் கைப்பற்றிய ரஹில் ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    சேலம் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

    • சேலம் அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர் கோபிநாத் 24 ரன்கள் சேர்த்தார்.
    • திருச்சி அணி தரப்பில் ரஹில் ஷா 3 விக்கெட் கைப்பற்றினார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்த சேலம் அணி, அதன்பின்னர் சற்று நிதானமாக ஆடியது. துவக்க வீரர் கோபிநாத் பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்டார். அவர் 5 பவுண்டரி உள்பட 24 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இதனால் சேலம் அணி 19.5 ஓவர்களில் 87 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

    திருச்சி தரப்பில் ரஹில் ஷா 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அதீக் ரஹ்மான் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 88 ரன்கள் என்ற எளிய இலக்குடன் திருச்சி அணி பேட்டிங் செய்கிறது. 

    • திருப்பூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.
    • இரண்டாவதாக ஆடிய மதுரை அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மான் பாஃப்னா ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்த்தார். அரவிந்த் 19 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, திருப்பூர் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 45 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்த மதுரை அணி, அதன்பின்னர் சரிவில் இருந்து மீள முடியவில்லை.

    இறுதியில், மதுரை அணி 76 ரன்களில் சுருண்டது. இதனால் திருப்பூர் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • முதலில் ஆடிய கோவை அணி 170 ரன்களை எடுத்தது.
    • சேப்பாக் அணியில் நாராயணன் ஜெகதீசன் 75 ரன்களை குவித்தார்.

    6-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் அடுத்தகட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க ஆட்டக்காரரான அஷ்வின் வெங்கட்ராமன் 6 ரன்னில் அவுட்டானார். சுரேஷ்குமார் 22 பந்தில் 1 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 32 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 25 ரன், ஷிஜித் சந்திரன் 17 ரன், முகிலேஷ் 2 ரன் எடுத்து வெளியேறினர். செல்வகுமார் டக் அவுட்டானார். அபிஷேக் தன்வார் 28 ரன்னில் அவுட்டானார். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடினார். அரை சதமடித்த அவர் 51 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்தது. இதையடுத்து, களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்ததுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் கேப்டன் கவுசிக் காந்தி 9 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ராதா கிருஷ்ணன் 8 ரன்னுடனும், சசிதேவ் 1 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் சாய் கிஷோர் - நாராயணன் ஜெகதீசன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிபட்சமாக நாராயணன் ஜெகதீசன் 51 பந்துகளில் 75 ரன்களை குவித்தார். சாய் கிஷோர் 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். 

    • முதலில் ஆடிய கோவை அணி 170 ரன்களை எடுத்தது.
    • கேப்டன் ஷாருக் கான் 28 பந்தில் 51 ரன்களை குவித்தார்.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் அடுத்தகட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

    அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான அஷ்வின் வெங்கட்ராமன் 6 ரன்னில் அவுட்டானார். சுரேஷ்குமார் 22 பந்தில் 1 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 32 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    சாய் சுதர்சன் 25 ரன், ஷிஜித் சந்திரன் 17 ரன், முகிலேஷ் 2 ரன் எடுத்து வெளியேறினர். செல்வகுமார் டக் அவுட்டானார். அபிஷேக் தன்வார் 28 ரன்னில் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடினார். அரை சதமடித்த அவர் 51 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 171 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.

    • சேலம் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.
    • மதுரை அணி சார்பில் சிலம்பரசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    6-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் அடுத்த கட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் சேலம் அணியை மதுரை அணி எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அருண் கார்த்திக் 13 ரன்னிலும், ராஜ்குமார் 29 ரன்னிலும், விக்னேஷ் அய்யர் 16 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கேப்டன் சதுர்வேதியுடன், விக்கெட் கீப்பர் ஈஸ்வரன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினர்.

    ஈஸ்வரன் 27 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்தார். சதுர்வேதி 34 ரன்னில் வெளியேறினார். இறுதியில், மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 166 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து விளையாடிய சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.

    அந்த அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கோபிநாத் 15 ரன்களிலும் அபிஷேக் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டேரில் பெராரியோ 19 ரன்கள், கேப்டன் முருகன் அஸ்வின் 10 ரன்கள், ஜாஃபர் ஜமால் 13 ரன்களில் அவுட்டாகினர். அதிகபட்சமாக பிரனவ் குமார் 25 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. மதுரை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ரகுபதி சிலம்பரசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் ராக்கி மற்றும் சரவணன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். சன்னி சந்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    • டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    • 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சதுர்வேதி, விக்கெட் கீப்பர் ஈஸ்வரன் ஆகியோர் 59 ரன்கள் சேர்த்தனர்.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் அடுத்த கட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது.

    இன்று நடைபெறும் போட்டியில் சேலம் அணியை மதுரை அணி எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அருண் கார்த்திக் 13 ரன்னிலும், ராஜ்குமார் 29 ரன்னிலும், விக்னேஷ் அய்யர் 16 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய கேப்டன் சதுர்வேதியுடன், விக்கெட் கீப்பர் ஈஸ்வரன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினர். ஈஸ்வரன் 27 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்தார். சதுர்வேதி 34 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 166 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய திருச்சி அணி 135 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வார் 3 விக்கெட்டு வீழ்த்தினார்.

    கோவை:

    கோவையில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருச்சி 135 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முரளி விஜய் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 61 ரன்னில் வெளியேறினார்.

    கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வார் 3 விக்கெட்டும், ஷாருக் கான், திவாகர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, கோவை அணி 136 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமார் 15 ரன்னில் அவுட்டானார். கங்கா ஸ்ரீதர் ராஜு, சாய் சுதர்சன் தலா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷிஜித் சந்திரன் 17 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், கோவை அணி 17 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷாருக் கான் 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    • திருச்சி அணியின் முரளி விஜய் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது.

    இந்நிலையில், 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று கோவையில் அடுத்த கட்ட லீக் போட்டிகள் தொடங்குகின்றன. இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் 18 ரன்னில் அவுட்டானார். நிதிஷ் ராஜகோபால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். சந்தோஷ் ஷிவ் 28 ரன்னில் வெளியேறினார். நிரஞ்சன் 17 ரன்னிலும், ஆகாஷ் சும்ரா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் முரளி விஜய் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 61 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், திருச்சி அணி 135 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, கோவை அணி 136 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

    கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வார் 3 விக்கெட்டும், ஷாருக் கான், திவாகர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய திருப்பூர் அணி 117 ரன்கள் எடுத்தது.
    • நெல்லை அணியின் பாபா அபராஜித் அரை சதம் அடித்தார்.

    கோவை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கோயம்புத்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நெல்லை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மான் பாப்னா 37 ரன்கள் எடுத்தார்.

    நெல்லை சார்பில் ஈஸ்வரன் 3 விக்கெட், ஹரீஷ் 2 வ்க்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஹரிஷ் 7 ரன்னிலும், சூர்யபிரகாஷ் 28 ரன்னிலும் அவுட்டாகினர். சஞ்சய் யாதவ் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பாபா அபராஜித் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 63 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், நெல்லை அணி 15.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ×