search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை ராயல் கிங்ஸ்"

    • டி.என்.பி.எல். தொடரின் தொடர் நாயகன் விருது அஜிதேஷ் வென்றார்.
    • ஆட்ட நாயகன் விருது கோவை அணியின் ஜத்வேத் சுப்ரமணியம் வென்றார்.

    நெல்லை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. சுரேஷ் குமார், அதீக் ரஹ்மான், முகேஷ் அரை சதமடித்தனர். அடுத்து ஆடிய நெல்லை அணி 101 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், டி.என்.பி.எல். தொடரின் தொடர் நாயகன் விருது மற்றும் ஆரஞ்சு கேப் விருதை நெல்லை அணியின் அஜிதேஷ் குருசாமி வென்றார்.

    பர்பிள் கேப் விருது 17 விக்கெட்டுகள் வீழ்த்திய கோவை அணி கேப்டன் ஷாருக் கானுக்கு அளிக்கப்பட்டது.

    ஆட்ட நாயகன் விருது 4 விக்கெட் வீழ்த்திய கோவை அணியின் ஜத்வேத் சுப்ரமணியம் வென்றார்.

    • முதலில் ஆடிய கோவை அணி 205 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய நெல்லை 101 ரன்னில் ஆல் அவுட்டானது.

    நெல்லை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நெல்லையில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.

    தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் குமார் 57 ரன்களில் அவுட் ஆனார். முகேஷுடன் இணைந்த அதீக் ரஹ்மானும் அதிரடியாக ஆடினார். இருவரும் அரை சதம் அடித்தனர். அதீக் ரஹ்மான் 50 ரன்னில் அவுட்டானார். முகேஷ் 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    நெல்லை சார்பில் சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. கோவை அணியின் துல்லிய பந்துவீச்சில் நெல்லை அணி சிக்கியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தது.

    இறுதியில், நெல்லை அணி 101 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.

    கோவை கிங்ஸ் சார்பில் ஜத்வேத் சுப்ரமணியம் 4 விக்கெட்டும், ஷாருக் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய நெல்லை 159 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய திண்டுக்கல் 160 ரன்களை எடுத்து வென்றது.

    7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் நடந்து வருகிறது.

    நெல்லையில் டிஎன்பிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நெல்லை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அருண் கார்த்திக் 39 ரன் எடுத்தார். ஹரீஷ் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி பொறுப்புடன் ஆடியது. விமல் குமார், ஷிவம் சிங் இருவரும் அரை சதமடித்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்த நிலையில் ஷிவம் சிங் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 62 ரன் எடுத்த நிலையில் விமல் குமார் ரன் அவுட்டானார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி 3 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது திண்டுக்கல் அணி பெறும் 5-வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளது.

    • நெல்லை அணி மதுரையை 6 விக்கெட் வித்தியாசத்திலும், கோவையை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
    • சேலம் அணி முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் 52 ரன்னில் தோற்றது

    திண்டுக்கல்:

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்றுடன் 12 ஆட்டங்கள் முடிந்துள்ளன. திண்டுக்கல் டிராகன்ஸ் 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. கோவை கிங்ஸ் 3 வெற்றி, 1 தோல்வி யுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. ரன்ரேட் அடிப்படையில் திண்டுக்கல் முன்னிலையில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும், நெல்லை ராயல் கிங்ஸ் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் உள்ளன. சேலம் ஸ்பார் டன்ஸ் 1 வெற்றி, 1 தோல்வி யுடனும், திருப்பூர் தமிழன்ஸ் 1 வெற்றி, 2 தோல்வியுடனும் தலா 2 புள்ளிகள் பெற்று உள்ளன.

    பால்சி திருச்சி 3 ஆட்டத்திலும், மதுரை பாந்தர்ஸ் 2 ஆட்டத்திலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறவில்லை. டி.என்.பி.எல். போட்டியின் 13-வது `லீக்' ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லை அணி மதுரையை 6 விக்கெட் வித்தியாசத்திலும், கோவையை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. திருப்பூர் அணியுடன் 7 விக்கெட்டில் தோற்றது. அந்த அணி சேலத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    சேலம் அணி முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் 52 ரன்னில் தோற்றது. 2-வது போட்டியில் திருச்சியை 5 விக்கெட்டில் வீழ்த்தியது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    • 18.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி 124 ரன்களில் சுருண்டது.
    • திருப்பூர் தமிழன்ஸ் அணியை சேர்ந்த அதிகபட்சமாக துஷார் ரகேஜா 49 ரன்கள் எடுத்தார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல்லில் நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி திருப்பூர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சோனு யாதவ் (35), குருஸ்வாமி அஜிதேஷ் (20) தவிர மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட் ஆகினர். 18.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி 124 ரன்களில் சுருண்டது.

    திருப்பூர் அணி தரப்பில் புவனேஸ்வரன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    கணேசன் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக துஷார் ரகேஜா 49 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ராதாகிருஷ்ணன் 34 ரன்களும், ராஜேந்திரன் விவேக் 21 ரன்களும், கணேஷ் 3 ரன்களும் எடுத்தனர்.

    இந்நிலையில், 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு எளிதில் 128 ரன்கள் எடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றனர்.

    • நெல்லை அணியில் அதிகபட்சமாக சோனு யாதவ் 35 ரன்கள் எடுத்தார்.
    • திருப்பூர் அணி தரப்பில் புவனேஸ்வரன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல்லில் நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி திருப்பூர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சோனு யாதவ் (35), குருஸ்வாமி அஜிதேஷ் (20) தவிர மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட் ஆகினர். 18.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி 124 ரன்களில் சுருண்டது. திருப்பூர் அணி தரப்பில் புவனேஸ்வரன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கணேசன் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய கோவை அணி 181 ரன்களை குவித்தது.
    • தொடர்ந்து ஆடிய நெல்லை அணி 182 ரன்களை எடுத்து வென்றது.

    கோவை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் விளாசினார். சுரேஷ் குமார் 33 ரன்கள் சேர்த்தனர்.

    நெல்லை அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் டக் அவுட்டானார்.

    2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரீ நிரஞ்சன், அஜிதேஷ் குருசாமி 76 ரன்கள் சேர்த்தனர். ஸ்ரீ நிரஞ்சன் 25 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் 3 ரன்னிலும், சோனு யாதவ் 20 ரன்னிலும், அருண்குமார் 3 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அஜிதேஷ் குருசாமி தனி ஆளாகப் போராடி சதமடித்தார். அவர் 112 ரன்னில் ரன் அவுட்டானார்.

    இறுதியில், நெல்லை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது.

    • சாய் சுதர்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் விளாசினார்.
    • நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    கோவை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கோவையில் நடைபெறும் ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் விளாசினார். சுரேஷ் குமார் 33 ரன்கள், ராம் அரவிந்த் 18 ரன்கள் சேர்த்தனர். நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது. 

    • சோனு யாதவை ரூ.15.20 லட்சத்துக்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
    • 12.80 லட்சத்துக்கு ஹரிஷ் குமாரை சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் விலைக்கு வாங்கியது.


    சென்னை:

    டிஎன்பிஎல் போட்டியில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

    அதில் விஜய் சங்கர் 10.25 லட்சம், வாஷிங்டன் சுந்தர் ரூ.6.75 லட்சம், நடராஜன் 6.25 லட்சம், சந்தீப் வாரியர் ரூ.8.5 லட்சம், சிவி வருண் ரூ.6.75 லட்சம் என ஏலம் போனார்கள்.

    இதனையடுத்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதில் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக தேர்வாகி உள்ள சோனு யாதவை நெல்லை ராயல் கிங்ஸ் அணி ரூ.15.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தனர்.

    அப்போது வரை அதுவே அதிக தொகைக்கு ஏலம் போனதாக இருந்தது. இந்நிலையில் சஞ்சய் யாதவை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 17.60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் இதுவரை நடந்த ஏலத்தில் அதிக தொகையாக இது இருந்துள்ளது. முன்னதாக ஹரிஷ் குமாரை 12.80 லட்சத்துக்கும் அபராஜித்தை ரூ.10 லட்சத்துக்கும் பிரதோஷ் 5 லட்சத்துக்கும் அதே அணி விலைக்கு வாங்கியது.

    • அதிக தொகையாக பாபா அப்ரஜித் ரூ.10 லட்சத்துக்கும் விஜய் சங்கர் ரூ.10.25 லட்சத்துக்கும் ஏலம் போயிருந்தனர்.
    • இதுவரை நடந்த ஏலத்தில் சோனு யாதவ் அதிக தொகைக்கு ஏலம் போனார்.

    சென்னை:

    டிஎன்பிஎல் போட்டியில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

    அதில் விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் அணியும் வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மூன்றாவது வீரராக நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி ஏலம் எடுத்தது. சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது. சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.

    இதனை தொடர்ந்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடைபெற்றது. ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக தேர்வாகி உள்ள சோனு யாதவை நெல்லை ராயல் கிங்ஸ் அணி அதிக தொகைக்கு ஏலம் எடுத்தது. அவர் ரூ.15.20 லட்சத்துக்கு ஏலம் போனார்.

    இதுவரை எடுக்கப்பட்ட ஏலத்தில் சோனு யாதவ் அதிக தொகைக்கு ஏலம் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய நெல்லை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய கோவை அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கோவையில் இன்று நடந்த 2-வது தகுதிச்சுற்றில் நெல்லை ராயல் கிங்சும், லைகா கோவை கிங்சும் மோதின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய சஞ்சய் யாதவ் 26 பந்தில் 7 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்தார். பாபா அபராஜித் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். அஜிதேஷ் அதிரடி காட்டி 38 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. சாய் சுதர்சன் 33 பந்தில் 53 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடி அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 24 பந்தில் 5 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 58 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், கோவை அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    • முதலில் ஆடிய கோவை அணி 177 ரன்களை எடுத்தது.
    • விக்கெட் கீப்பர் சுரேஷ்குமார் அதிரடியாக ஆடி 75 ரன்களை குவித்தார்.

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

    இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் கோவை, நெல்லை அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்களை எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் சுரேஷ்குமார் அதிரடியாக ஆடி 48 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 75 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜு 48 ரன்னில் அவுட்டாகி அரை சதத்தை நழுவவிட்டார். கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 18 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 178 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சூர்யபிரகாஷ் 45 ரன்னும், பாபா அபராஜித் 37 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து இறங்கிய சஞ்சய் யாதவ் மீண்டும் அதிரடியில் மிரட்டி அரை சதம் அடித்து 54 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், நெல்லை அணி 9 விக்கெட்டுக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கோவை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    ×