search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Three grand festival"

    • பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் தெள்ளார், ஊராட்சி ஒன்றியம் சி.ம.புதூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம், வாசிப்பு இயக்க திட்டம் தொடக்க விழா, மற்றும் புதிய நூலக திறப்பு விழா, ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

    விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நம்பெருமாள், தலைமை தாங்கினார். வட்டார வள மேற்பார்வையாளர் ஜெயசீலன், ஆசிரியர் பயிற்சிநர் தமிழ் நேசன், குருவள மைய தலைமை ஆசிரியர் மணி, ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தெள்ளார், வட்டார கல்வி அலுவலர் ரங்கநாதன், கலந்து கொண்டு. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 22-23-ம் ஆண்டிற்கான விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க, தெரியாத, அனைவருக்கும் எழுத்தும், எண்ணறிதல், வாக்காளர் உரிமை, சுற்றுச்சூழல் அறிதல், பணம் இல்ல பரிமாற்றம், இணைய வழி கல்வி, ஆகியவை குறித்து விழிப்புணர்வு துண்டு பதாகைகளை ஏந்தியவாறு மாணவ-மாணவிகள், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர்.

    விழாவில் பள்ளி ஆசிரியர்கள் பச்சையப்பன், சரவணன், பள்ளி மேலாண்மை கல்வியாளர் சந்திரசேகரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிரிஜா, கணினி ஆசிரியர் சுரேஷ், புதிய பாரத எழுத்தறிவு திட்ட பொறுப்பாளர் இந்துமதி, வாசிப்புத்திறன் இயக்க பொறுப்பாளர் விஜய் லட்சுமி, வந்தவாசி கிருஷ்ண கோச்சிங் சென்டர் சீனிவாசன், மற்றும் ஊர் பெரியவர்கள், பெற்றோர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் கம்பன் கழகத்தின் சார்பில் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் 9-ம் ஆண்டு கம்பன் விழா, நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா, விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியை முத்தமிழ் சுவை சுற்ற நிறுவனர் புலவர் பதுமனார் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கம்பன் கழக தலைவரும், கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளருமான கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை உறுப்பினர்கள் வி.ராமு என்.எஸ்.குமரகுரு, சி. கண்ணன், வீரய்யபத்தர், பாபுஜனார்த்தனம், பைரோஸ் அகமது, டி.என்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கம்பன் கழக நிறுவனரும், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜே.கே.என்.பழனி வரவேற்புரை நிகழ்த்தினார். கம்பன் கழக செயலாளரும் வழக்கறிஞருமான கே.எம். பூபதி மங்கல சிறப்புரையாற்றினார். சங்கத்தின் இணைச் செயலாளர் தமிழ் திருமால் தொடக்க உரையாற்றினார்.

    விழாவில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கம்பன் கழக இணைச் செயலாளர் தமிழ் திருமாலிற்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    தொடர்ந்து திருப்பத்தூர் கம்பன் கழக அமைப்பாளர் பொன்செல்வகுமார், கிருஷ்ணகிரி கம்பன் கழகத் தலைவர் ரவீந்தர் ஆகியோருக்கு கம்பர் மாமனி விருதும், மூத்த வழக்கறிஞர் சு.சம்பத்குமாருக்கு கவிமாமணி விருதும், அரசு சித்த மருத்துவர் தில்லைவாணனுக்கு சித்த மருத்துவமாணி விருதுகளை அம்பலால் வர்த்தக குழுமத்தின் தலைவர் கே.ஜவரிலால் ஜெயின், அபிராமி கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.என்.ஜோதிகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.

    முன்னாள் அமைச்சர் முனைவர் வைகைச் செல்வன் கம்பன் செய்த பாயிரம் நெஞ்சில் நிற்கும் ஆயிரம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

    நிகழ்ச்சியில் வேலூர் ஆவின் தலைவர் த.வேலழகன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆர்.மூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர் ஆர்.மூர்த்தி, நகர் மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, கூட்டுறவு வங்கி தலைவர் டி.சிவா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கம்பன் கழக பொருளாளர் கே.இ.எம்.சிவக்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை கம்பன் கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா. சம்பத்குமார் தொகுத்து வழங்கினார்.

    • முப்பெரும் விழா நடந்தது.
    • செயலாளர் அந்தோணிராஜ் நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பழையபாளையம் இல்லத்துப் பிள்ளைமார் சமூகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. பழையபாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். இளைஞர் சங்க தலைவர் விக்னேஷ்திருமால் வரவேற்றார். ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ராஷியாம்ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்ரீமன் நாராயணகுரு நூலகம், மற்றும் டிஜிட்டல் தனிப்பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து பேசினார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும், எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான 2022, 23 ஆகிய 2ஆண்டுகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் கல்வி நிதி நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது.

    விழாவில் இல்லத்து பிள்ளைமார் பொதுநல பண்டு தலைவர் காளிமுத்து, பழையபாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக துணை தலைவர் சரவணகண்ணன், பொருளாளர் ஆறுமுகம் என்ற துரைராஜ்,முன்னாள் செயலாளர் கணேசன், உப செயலாளர்கள் ராஜா, அய்யனார், நகர் மன்ற உறுப்பினர் ஷாலினி சரவண கண்ணன் உட்பட பலர் பேசினர். விழாவில் பழையபாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். செயலாளர் அந்தோணிராஜ் நன்றி கூறினார்.

    • இந்தியாவின் நம்பர் 1 முதல-அமைச்சராக திகழ்ந்து வருகிறார்.
    • மத்திய அரசின் நெருக்கடியால் தான் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரயில் நிலையம் முன்பு தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு தெருமுனை கூட்டம் நடந்தது.

    இதற்கு தஞ்சை மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் தலைமை தாங்கினார்.

    தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மாநில வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா, முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், சட்ட திருத்த குழு உறுப்பினர் இறைவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது, உலக நாடுகள் போற்றும் வகையில் சிறப்பான முறையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார்.

    இதனால் இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சராக திகழ்ந்து வருகிறார்.

    ஆட்சிக்கு வந்த 14 மாதங்களில் கொடுத்துள்ள வாக்குறுதிகளில் பெரும்பாலானாவற்றை நிறைவேற்றி உள்ளார்.

    மத்திய அரசின் நெருக்கடியால் தான் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு தான்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதாவால் மத்திய அரசின் உதய் திட்டம் எதிர்க்கப்பட்டது.

    ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு சிறிது காலம் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உதய் திட்டத்தில் கையெழுத்து இட்டார்.

    அதன் காரணமாகவும், மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவும் தான் தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு 8 ஆண்டுகளை கடந்தும் சொல்லிக் கொள்ளும் படி எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்றார்.

    இதேபோல் தலைமை கழக பேச்சாளர்கள் வரகூர் காமராஜ், கலைமணி பாரதி, தஞ்சை காமராஜ் ஆகியோரும் சிறப்புரை ஆற்றினர்.

    இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜித்து, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்லக்கண்ணு, அருளானந்தசாமி, உலகநாதன், முருகானந்தம், சிவசங்கரன், கௌதமன், முரசொலி, செல்வகுமார், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், மாநகர நிர்வாகிகள், பகுதி செயலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கோட்டை பகுதி செயலாளர் மேத்தா நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தஞ்சை மாநகர செயலாளரும் மேயருமான சண். ராமநாதன் செய்திருந்தார்.

    • செப்டம்பர் 15 -ந்தேதி முப்பெரும் விழா
    • அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    செப்டம்பர் 15 -ந்தேதி முப்பெரும் விழா, அண்ணாவின் பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்த நாள், திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள் ஆகியவை கொண்டாடப்படுகிறது.

    சமுதாய நலன் காக்க, சமதர்மம் நிலைக்க, உயர்ந்தோர், தாழ்ந்தோர் எனும் நிலைமாற, அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் வழியில் கழகம் காத்த பெருந்தகை முத்தமிழ் அறிஞர் கலைஞர் கழகம் எனும் ஆலமரம் போல் பகுதறிவுச் சோலையாக பூத்து குலுங்கும் சூழலை உருவாக்கிட கடந்து வந்த பாதைகளில் சந்தித்த சோதனைகள், வேதனைகள் கழக வரலாற்றை தொகுத்து, இன்றைய தலைமுறை அறிய திராவிட பாசறை கூட்டங்கள் தமிழகம் எங்கும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க திராவிட கருத்துகள் பதிய, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றும் அரும்பணி என்றும் திராவிடம் மறையாது. மறைக்கப்படாது.

    விதைத்தது வீரு கொண்டு எழும்.எனவே திராவிட மாடல் ஆட்சி காணும் கழக தலைவர் எண்ணமும் செயலும் எதிர்கால தி.மு.க.விற்கான களங்கரை விளக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் போற்றும் தலைவர் தி.மு.கழகத்தின் முதுபெருந்தலைவர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15 அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாள் 17 அன்றும் கொண்டாடி பட்டி தொட்டியெங்கும் திராவிட மாடல் ஆட்சியின் மகத்துவத்தை மக்கள் அறிய உறுதி ஏற்று கொண்டாடுவோம்.

    நலதிட்ட உதவிகள் பல செய்து மக்கள் நல முதல்வர் என திகழ்ந்து புதுமை பெண் திட்டம் மூலம் பெண்கள் சமுதாயத்தின் எதிர்காலத்தை பொற்காலமாய் மாற்றும் உயரிய தலைவர் வழி நின்று முப்பெரும் விழாவை இருவண்ணகொடி உயர்த்தி பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் திருஉருவ சிலைகளுக்கு மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடிட வேண்டுகிறேன்.

    எனவே மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய, செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, இலக்கிய அணி, தொண்டரணி, வழக்கறிஞரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து நிகழ்ச்சியில் பங்கேற்று அண்ணா பெரியார் பிறந்தநாள் திமுக தோன்றிய நாள் ஆகிய விழாக்களை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள வெள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று ஆசிரியர் தினம், தெரசா மற்றும் வ.உ.சி பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபாகலைவாணன் தலைமை தாங்கினார்.

    ஓய்வு தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திகேயனிடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் தமிழரசி வரவேற்று பேசினார்.

    மாணவ மாணவிகளுக்கு சிறார் நூலக புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் சந்தவாசல் கூட்டுறவு சங்க தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பிரபு நன்றி கூறினார்.

    • தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற ஆசிரியை ஜெ.புஷ்பா எம்கோ ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
    • ஆசிரியர்கள் எவ்வித மன உளைச்சலுமின்றி, குழந்தைகளுக்கு நல்ல முறையில் கற்பிப்பதற்கு, அரசாணை 101,108 ஆகியவற்றை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும் என்றார்.

    வாழப்பாடி:

    வாழப்பாடியில் தமிழக ஆசிரியர் கூட்டணி முப்பெ ரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, வட்டாரத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் காசிலிங்கம் வரவேற்றார். மகளிரணிச் செயலாளர் நித்யா உறுதிமொழி வாசித்தார். முன்னாள் பொதுச் செயலாளர் கோ.முருகேசன் முப்பெரும் விழா குறித்து விளக்கவுரையாற்றினார்.

    ஐபெட்டோ அமைப்பின் அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் நம்பிராஜ், பொதுச் செயலாளர் வின்சென்ட்பால்ராஜ், பொருளாளர் சந்திர சேகர், வாழப்பாடி பேரூராட்சி தலைவர் கவிதா சக்கரவர்த்தி, இலக்கியப்பேரவை செயலர் சிவ.எம்கோ, கவிஞர். பெரியார்மன்னன், முனைவர்.ஜவஹர் ஆகியோர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் ஷபிராபானு, ஓய்வு பெற்ற ஆசிரியை குணசுந்தரி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விருது பெற்ற ஆசிரியர்கள் செந்தில்குமார், மீனா, தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற ஆசிரியை ஜெ.புஷ்பா எம்கோ ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    இவ்விழாவில், வா.அண்ணாமலை பேசுகை யில், 'தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஆசிரியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆசிரியர்களின் பணிச்சுமையும், உயரதி காரிகளின் கெடுபிடிகளும் அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள் எவ்வித மன உளைச்சலுமின்றி, குழந்தைகளுக்கு நல்ல முறையில் கற்பிப்பதற்கு, அரசாணை 101,108 ஆகியவற்றை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும் என்றார். இந்த விழாவில், வாழப்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள் சாந்தக்குமாரி சரவணன், குமார், பேளூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் எல்ஐசி ராஜா, வட்டார கல்வி அலுவலர்கள் முனியப்பன், பிரபுகுமார், ஞானசேகரன், அன்பழகன், அரிமா சங்கத் தலைவர் மருத்துவர் செந்தில்குமார், தொழிலதிபர் சிற்றரசு, இலக்கியப்பேரவை நிர்வாகிகள் செந்தில்குமார், முனிரத்தினம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் அமுதா நன்றி கூறினார்.

    ×