முப்பெரும் விழா

முப்பெரும் விழா நடந்தது. செயலாளர் அந்தோணிராஜ் நன்றி கூறினார்.
முப்பெரும் விழா
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் பழையபாளையம் இல்லத்துப் பிள்ளைமார் சமூகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. பழையபாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். இளைஞர் சங்க தலைவர் விக்னேஷ்திருமால் வரவேற்றார். ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ராஷியாம்ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்ரீமன் நாராயணகுரு நூலகம், மற்றும் டிஜிட்டல் தனிப்பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து பேசினார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும், எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான 2022, 23 ஆகிய 2ஆண்டுகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் கல்வி நிதி நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது.

விழாவில் இல்லத்து பிள்ளைமார் பொதுநல பண்டு தலைவர் காளிமுத்து, பழையபாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக துணை தலைவர் சரவணகண்ணன், பொருளாளர் ஆறுமுகம் என்ற துரைராஜ்,முன்னாள் செயலாளர் கணேசன், உப செயலாளர்கள் ராஜா, அய்யனார், நகர் மன்ற உறுப்பினர் ஷாலினி சரவண கண்ணன் உட்பட பலர் பேசினர். விழாவில் பழையபாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். செயலாளர் அந்தோணிராஜ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com