என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முப்பெரும் விழா
ராஜபாளையம்
ராஜபாளையம் பழையபாளையம் இல்லத்துப் பிள்ளைமார் சமூகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. பழையபாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். இளைஞர் சங்க தலைவர் விக்னேஷ்திருமால் வரவேற்றார். ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ராஷியாம்ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்ரீமன் நாராயணகுரு நூலகம், மற்றும் டிஜிட்டல் தனிப்பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து பேசினார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும், எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான 2022, 23 ஆகிய 2ஆண்டுகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் கல்வி நிதி நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது.
விழாவில் இல்லத்து பிள்ளைமார் பொதுநல பண்டு தலைவர் காளிமுத்து, பழையபாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக துணை தலைவர் சரவணகண்ணன், பொருளாளர் ஆறுமுகம் என்ற துரைராஜ்,முன்னாள் செயலாளர் கணேசன், உப செயலாளர்கள் ராஜா, அய்யனார், நகர் மன்ற உறுப்பினர் ஷாலினி சரவண கண்ணன் உட்பட பலர் பேசினர். விழாவில் பழையபாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். செயலாளர் அந்தோணிராஜ் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்