search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threatened to kill"

    • இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • என்னை விட்டு வேறு யாரையாவது திருமணம் செய்தால் உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஓம்சக்திநகர் 7-வது தெருவை சேர்ந்தவர் சுந்தராஜன் (50).இவரது மகள் உமாபதி, செய்யது அம்மாள் மேல் நிலைப்பள்ளியில் 11-வது வகுப்பு 2019-2020 கல்வி ஆண்டில் படித்த போது, ராமநாதபுரம் இந்திரா நகர் அமரன் (20) காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்தார்.

    கடந்த 4-ந் தேதி உமாபதியும், அவரது சகோதரி உமாமகேஸ்வரியும் ஜவுளி கடைக்கு சென்று விட்டு வீட்டருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அமரன் உமாபதியை வழிமறித்து தகாத வார்த்தையால் பேசி கையை பிடித்து இழுத்தார். என்னை விட்டு வேறு யாரையாவது திருமணம் செய்தால் உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் தந்தை சுந்தராஜன் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் அமரனை கைது செய்தார்.

    • ராசிபுரம் ஊராட்சியில் கொலை மிரட்டல் விடுவதாக விவசாயி மீது ஊராட்சி தலைவர் பழனிவேல் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது சந்திரசேகரபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக பழனிவேல் என்பவர் இருந்து வருகிறார். அதே ஊராட்சி பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிவேல் என்பவர் வீட்டுக்கு தனிநபர் குடிநீர் இணைப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதனால் தற்போது குடிநீர் இணைப்பு தர இயலாது என ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் கூறினார்.

    இந்த நிலையில் விவசாயி பழனிவேல் வயது (39), அவரது அண்ணன் சந்திரசேகரன் (42) இருவரும் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேலை ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தவரை கொலை மிரட்டல் விடுத்த லாரி உரிமையாளருக்கு வலைவீச்சு.
    • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தங்கவேலை தேடி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட பரமத்தியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லட்சுமி. இவர் கடந்த மே மாதம் 6-ந் தேதி கபிலர் மலை அருகே வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அந்த வழியாக அனுமதியின்றி கிராவல்மண் ஏற்றிவந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்த தங்கவேல் (வயது48) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தங்கவேல் கபிலர்மலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் லட்சுமியின் வீட்டிற்கு சென்று எனது லாரியை எப்படி பறிமுதல் செய்யலாம் என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து ‌வருவாய் ஆய்வாளர் லட்சுமி ஜேடர்பாளையம் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தங்கவேலை தேடி வருகின்றனர்.

    குடும்ப தகராறில் மனைவி மற்றும் மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் பாண்டி ரோட்டை சேர்ந்தவர் கோபால் (வயது 27), ஆட்டோ டிரைவர். இவருக்கும் மயிலம் செந்தூர்சாலையை சேர்ந்த நவநீதம் மகள் தனலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண்குழந்தை உள்ளன.

    இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன்பின்பு கோபாலுக்கு பாதிரா புலியூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்பு அந்த பெண்ணுடன் அவர் கோவைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார்.

    இதை அறிந்த தனலட்சுமி மயிலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கோவை சென்று கோபாலையும் அந்த பெண்ணையும் மீட்டு அழைத்து வந்தனர். அதன்பின்பு போலீசார் கோபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.

    சிறிது நாட்கள் கழித்து மீண்டும் கோபாலுக்கும், தனலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த தனலட்சுமி 2 குழந்தைகளுடன் தனது தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றதால் கோபால் ஆத்திரம் அடைந்தார். அவர் அடிக்கடி மாமியார்வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு தகராறு செய்து வந்தார்.

    நேற்று மாலையும் கோபால் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்புமாறு நவநீதிடம் கூறினார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கோபால் மாமியார் நவநீதத்தை தாக்கினார். இதை தட்டிக்கேட்ட தனலட்சுமியையும் கோபால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார். பின்பு கோபாலும் அவரது உறவினர் மணிகண்டன் (26) என்பவரும் சேர்ந்து போனில் தனலட்சுமியையும், நவநீதத்தையும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து மயிலம் போலீசில் தனலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கோபாலை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட மணிகண்டனை தேடி வருகின்றனர்.

    ×