என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thermal Power Station"
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த வாயலுர் பகுதியில் வட சென்னை அனல்மின் நிலையத்தின் நான்காவது நிலை விரிவாக்க பனி நடைபெற்று வருகிறது.
கடந்த 19-ந் தேதி இங்கிருந்த பழைய இரும்பு கம்பி திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மானேஜர் பவிதரன் காட்டூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருவெள்ளவாயலில் பழைய இரும்பு கடையில், இரும்பு கம்பியை மினிலாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.
போலீசார் விசாரணை செய்தபோது அவை வட சென்னை அனல் மின் நிலையத்தில் திருடப்பட்டவை என்பது தெரிந்தது.
இதையடுத்து பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த கரிமுல்லா, நந்தியம் பாக்கத்தை சேர்ந்த திலிப்பன்டித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 1 டன் கம்பி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் முதல் அனல் மின்நிலையம், முதல் அனல் மின்நிலைய விரி வாக்கம், 2-வது அனல் மின் நிலையம், மற்றும் 2-வது அனல் மின் நிலைய விரிவாக்கம் என 4 அனல் மின் நிலையங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த 4 அனல் மின் நிலையங்களிலும் சேர்த்து 2990 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. தற்போது இவற்றில் இருந்து 1480 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 1510 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது.
இது தவிர 2 யூனிட்டுகள் கொண்ட சூரிய மின்சக்தி திட்டங்களும் செயல்படு கின்றன. இவை தலா 10 மெகாவாட் மற்றும் 130 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. இவற்றில் இருந்து தற்போது 4.3 மெகாவாட் மற்றும் 46.6 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
பொதுவாக மழை காலங்களில் நிலக்கரிகளில் ஈரப்பதம் கூடுதலாக இருக்கும். தற்போது மழை அடிக்கடி பெய்து வருவதால் இந்த நிலக்கரிகளில் ஈரப்பதம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இதனால் என்.எல்.சி. அனல் மின் நிலையத்துக்கு கூடுதல் நிலக்கரி அனுப்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சாதாரண நாட்களைவிட மழை காலங்களில் மின் உற்பத்தி சற்று குறை வாகவே இருக்கும். மேலும் 2-வது அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் தற்போது மின் உற்பத்திக்கான பரா மரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. இதனால் தற்சமயம் இந்த 2-வது அனல் மின்நிலையம் விரிவாக்கத்தில் இருந்து மின் உற்பத்தி தொடங்கவில்லை. இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். அதன்பிறகு மின் உற்பத்தி தொடங்கும்.
சூரிய மின்சக்தி திட்டத் தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்களில் மின் உற்பத்தி சற்று குறைவாக இருக்கும். ஏனென்றால் இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதே காரணமாகும். மேலும் ஜனவரி முதல் ஆகஸ்டு வரை உள்ள மாதங்களில் வெயில் அதிகமாக இருப்பதால் இந்த சூரிய மின்சக்தி திட்டத்தில் மின் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
இந்த காரணங்களால் தான் நெய்வேலி என்.எல்.சி. அனல்மின்நிலையத்தில் தற்சமயம் வழக்கதைவிட சற்று குறைவாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது குறித்து என்.எல்.சி. அதிகாரிகள் கூறும்போது, நிலக்கரிகளில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நிலக்கரியின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பகுதிகளான முதல் சுரங்கம், 2-வது சுரங்கம் மற்றும் சுரங்கம் 1 ஏ ஆகியவற்றில் இருந்து கன்வயர் பெல்ட் மூலம் அனல்மின் நிலையத்துக்கு கூடுதல் நிலக்கரி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் நிலைமை சீராகி அதிக அளவு மின் உற்பத்தி செய்யப்படும் என்றனர். #neyvelinlc
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் சென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு இரண்டு நிலைகளில் மொத்தம் 830 மின்உற்பத்தி செய்யப்படுகிறது.
முதல் நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 கொண்ட மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாம் நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும், மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இரண்டாம் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்த அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இரண்டு நிலைகளில் மொத்தம் 1230 மெகாவாட் மின்உற்பத்தி மட்டும் நடை பெறுகிறது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட பகுதியை ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்