search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு
    X

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. #ThermalPowerStation

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் சென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு இரண்டு நிலைகளில் மொத்தம் 830 மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

    முதல் நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 கொண்ட மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாம் நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும், மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இரண்டாம் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்த அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    இரண்டு நிலைகளில் மொத்தம் 1230 மெகாவாட் மின்உற்பத்தி மட்டும் நடை பெறுகிறது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட பகுதியை ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×