search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power Impact"

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணி, பழுது காரணமாக 2 உலைகளிலும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த அணுஉலைகள் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக ஆண்டுக்கு ஒருமுறை நிறுத்தப்படும். அதன்படி முதலாவது அணுஉலை கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. இதனால் அந்த அணுஉலையில் மின் உற்பத்தி நடைபெறவில்லை.

    2-வது அணுஉலையில் மட்டும் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் அந்த அணுஉலையும் கடந்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதி பராமரிப்பு பணிக்காக திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த அணுஉலை 26-ந்தேதி முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.

    தொடக்கத்தில் 300 மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் அது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு ஒரு சில நாட்களில் ஆயிரம் மெகா வாட் மின்உற்பத்தியை எட்டியது. தொடர்ந்து 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பழுது ஏற்பட்டது.

    இதனால் அந்த அணுஉலை உடனடியாக நிறுத்தப்பட்டு பழுதை சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது. அணுமின் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது 2 அணுஉலைகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மின்தடை அபாயம் ஏற்பட்டுள்ளதால் 2-வது அணுஉலை பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஓரிரு நாளில் அது சரி செய்யப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    வல்லூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. #ThermalPowerStation

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இரண் டாவது அலகில் கொதிகலன் குழாய் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதல் மற்றும் மூன்றாம் அலகில் மட்டும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.பாதிக்கப்பட்ட பகுதியை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். #ThermalPowerStation

    வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 600 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. #ThermalPowerStation

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திபட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. இதில் ஐந்து அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகா வாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இரண்டாவது நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 600 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

    முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் 1230 மெகாவாட் மின் உற்பத்தி மட்டும் நடை பெறுகிறது. கொதிகலன் குழாய் பழுதினை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். பழுது சரி செய்யப்பட்டு அந்த அலகில் உற்பத்தி தொடங்கப்படும் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். #ThermalPowerStation

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. #ThermalPowerStation

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டுபுதுநகரில் வட சென்னை அனல் மின்நிலையம் உள்ளது. இங்கு இரண்டு நிலைகளில் மொத்தம்1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாம் நிலை இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இரண்டாம்நிலை இரண்டாவது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதில் உற்பத்தி செய்யபட்டு வந்த 600 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது.

    தற்போது இரண்டு நிலைகளில் மொத்தம் 1230 மெகாவாட் மின் உற்பத்தி மட்டும் நடைபெறுகிறது உற்பத்தி பாதிக்கபட்ட பகுதியை மின் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. #ThermalPowerStation

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் சென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு இரண்டு நிலைகளில் மொத்தம் 830 மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

    முதல் நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 கொண்ட மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாம் நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும், மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இரண்டாம் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்த அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    இரண்டு நிலைகளில் மொத்தம் 1230 மெகாவாட் மின்உற்பத்தி மட்டும் நடை பெறுகிறது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட பகுதியை ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×