search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iron theft arrest"

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒரு டன் இரும்பு கம்பி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வாயலுர் பகுதியில் வட சென்னை அனல்மின் நிலையத்தின் நான்காவது நிலை விரிவாக்க பனி நடைபெற்று வருகிறது.

    கடந்த 19-ந் தேதி இங்கிருந்த பழைய இரும்பு கம்பி திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து மானேஜர் பவிதரன் காட்டூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருவெள்ளவாயலில் பழைய இரும்பு கடையில், இரும்பு கம்பியை மினிலாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

    போலீசார் விசாரணை செய்தபோது அவை வட சென்னை அனல் மின் நிலையத்தில் திருடப்பட்டவை என்பது தெரிந்தது.

    இதையடுத்து பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த கரிமுல்லா, நந்தியம் பாக்கத்தை சேர்ந்த திலிப்பன்டித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 1 டன் கம்பி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×