search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neyveli NLC"

    • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு 79.2 சதவிகித பங்குகள் உள்ளன.
    • தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிற நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை பா.ஜ.க. அரசு விற்கக் கூடாது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆதரவோடு, அன்றைய முதலமைச்சர், காமராஜரால் தொடங்கப்பட்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நிலக்கரி உற்பத்தி, மின்சார உற்பத்தி என தொழில் வளர்ச்சியில் பெரும் பங்கு ஆற்றி வருகிறது.

    தற்போது 25,000 தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகிறார்கள். அதில் உற்பத்தியாகிற மின்சாரத்தில் தமிழ்நாட்டிற்கு 70 சதவிகிதம் வழங்கப்படுகிறது. பா.ஜ.க. அரசின் லாபம் ஈட்டும் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக நெய்வேலி நிலக்கரி நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தனது 7 சதவிகித பங்குகளை விற்று ரூபாய் 2,000 கோடி முதல் ரூபாய் 2200 கோடி வரை மார்ச் 7-ல் இருந்து 11-ந்தேதிக்குள் நிதி திரட்ட அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

    குறைந்தபட்ச பங்குகளின் விலையாக ரூபாய் 212 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. விற்பனைக்கு வழங்கவுள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கை 6 கோடியே 93 லட்சத்து 31 ஆயிரத்து 830. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு 79.2 சதவிகித பங்குகள் உள்ளன.

    நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது 93.5 சதவிகித பங்குகள் இருந்தன. அது தற்போது 79.2 சதவிகித பங்குகளாக குறைந்து வருகின்றன.


    கடந்த டிசம்பர் காலாண்டில் ஒருங்கிணைக்கப்பட்ட லாபமாக ரூபாய் 250 கோடி பெற்றுள்ளதாக பதிவுகள் கூறுகின்றன. நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் ரூபாய் 30,901 கோடியாக உள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் பங்குகளை பா.ஜ.க. அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். பா.ஜ.க. அரசு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு விற்பனைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிற நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை பா.ஜ.க. அரசு விற்கக் கூடாது. அப்படி விற்குமேயானால், அந்த பங்குகளை தமிழக அரசு வாங்குவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்.

    என்.எல்.சி நிறுவன தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், தமிழக அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையை பொருட்படுத்தாமல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 7 சதவிகித பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும் வகையிலும் பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் உடனடியாக கடிதம் எழுத வேண்டும்.

    இதன்மூலம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு தாரை வார்ப்பது தடுத்து நிறுத்த முடியும். இக்கோரிக்கையை தமிழக முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 3-வது சுரங்கம் அமைப்பதற்காக எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 3-வது சுரங்கம் அமைப்பதற்காக கம்மாபுரம் மற்றும் புவனகிரி பகுதியில் உள்ள கிராமங்களின் நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கம்மாபுரம், சிறுவரப்பூர், க.புத்தூர், ஓட்டிமேடு, சாத்தப்பாடி, பெருந்துரை, பெருவரப்பூர், விளக்கப்பாடி, தர்மநல்லூர், ஊ.அகரம், கோபாலபுரம், சு.கீரனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அந்த அந்த கிராமங்களில் ஆங்காங்கே என்.எல்.சி நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு 3-வது சுரங்க விரிவாக்கம் திட்டத்துக்கு 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். நெல், கரும்பு, வாழை, பூ, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பயிர்கள் விளையும் பூமியை பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    கடந்த காலங்களில் என்.எல்.சி. காலாவதியான சட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலம், வீடு உட்பட அனைத்தும் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடும், வேலை வாய்ப்பும் கொடுக்காமல் ஏமாற்றி வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை வன்மையாக கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விருத்தாசலம் போலீசார் விவசாயிகளை சமாதானப்படுத்தினார்கள்.

    பின்னர் விவசாயிகள் சப்-கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்உற்பத்தி 1,989 மெகாவாட்டாக குறைந்தது.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இங்கு 4 அனல் மின்நிலையங்கள் உள்ளன. இவற்றின் மொத்த மின்உற்பத்தி திறன் 2,990 மெகா வாட் ஆகும்.

    இதில் முதல் அனல் மின்நிலையத்தின் மின்உற்பத்தி திறன் 600 மெகா வாட் ஆகவும், 1-வது அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் மின்உற்பத்தி திறன் 420 மெகாவாட் ஆகும். 2-வது அனல் மின்நிலையத்தின் மின்உற்பத்தி திறன் 1,470 ஆகவும், 2-வது அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் உற்பத்தி திறன் 500 மெகாவாட்டாகவும் உள்ளது.

    தற்போது 2-வது அனல் மின்நிலைய விரிவாக்கத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அங்கு மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மற்ற 3 அனல் மின்நிலையங்களில் 1 யூனிட்டில் மட்டும் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அந்த யூனிட்டில் மட்டும் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற யூனிட்டுகளில் தொடர்ந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி முதலாவது அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி 411 மெகா வாட்டாக உள்ளது. முதலாவது அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் 210 மெகா வாட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2-வது அனல் மின்நிலையத்தில் 1,368 மெகா வாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. வழக்கமாக என்.எல்.சி.யில் உள்ள அனல் மின் நிலையங்களில் 2,990 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும். ஆனால் தற்போது இந்த 3 அனல் மின் நிலையங்களிலும் சேர்த்து மின் உற்பத்தி 1,989 மெகா வாட்டாக குறைந்துள்ளது.
    நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் தற்சமயம் வழக்கதைவிட சற்று குறைவாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது. #neyvelinlc

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் முதல் அனல் மின்நிலையம், முதல் அனல் மின்நிலைய விரி வாக்கம், 2-வது அனல் மின் நிலையம், மற்றும் 2-வது அனல் மின் நிலைய விரிவாக்கம் என 4 அனல் மின் நிலையங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த 4 அனல் மின் நிலையங்களிலும் சேர்த்து 2990 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. தற்போது இவற்றில் இருந்து 1480 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 1510 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது.

    இது தவிர 2 யூனிட்டுகள் கொண்ட சூரிய மின்சக்தி திட்டங்களும் செயல்படு கின்றன. இவை தலா 10 மெகாவாட் மற்றும் 130 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. இவற்றில் இருந்து தற்போது 4.3 மெகாவாட் மற்றும் 46.6 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    பொதுவாக மழை காலங்களில் நிலக்கரிகளில் ஈரப்பதம் கூடுதலாக இருக்கும். தற்போது மழை அடிக்கடி பெய்து வருவதால் இந்த நிலக்கரிகளில் ஈரப்பதம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இதனால் என்.எல்.சி. அனல் மின் நிலையத்துக்கு கூடுதல் நிலக்கரி அனுப்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    சாதாரண நாட்களைவிட மழை காலங்களில் மின் உற்பத்தி சற்று குறை வாகவே இருக்கும். மேலும் 2-வது அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் தற்போது மின் உற்பத்திக்கான பரா மரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. இதனால் தற்சமயம் இந்த 2-வது அனல் மின்நிலையம் விரிவாக்கத்தில் இருந்து மின் உற்பத்தி தொடங்கவில்லை. இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். அதன்பிறகு மின் உற்பத்தி தொடங்கும்.

    சூரிய மின்சக்தி திட்டத் தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்களில் மின் உற்பத்தி சற்று குறைவாக இருக்கும். ஏனென்றால் இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதே காரணமாகும். மேலும் ஜனவரி முதல் ஆகஸ்டு வரை உள்ள மாதங்களில் வெயில் அதிகமாக இருப்பதால் இந்த சூரிய மின்சக்தி திட்டத்தில் மின் உற்பத்தி அதிகமாக இருக்கும்.

    இந்த காரணங்களால் தான் நெய்வேலி என்.எல்.சி. அனல்மின்நிலையத்தில் தற்சமயம் வழக்கதைவிட சற்று குறைவாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இது குறித்து என்.எல்.சி. அதிகாரிகள் கூறும்போது, நிலக்கரிகளில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நிலக்கரியின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பகுதிகளான முதல் சுரங்கம், 2-வது சுரங்கம் மற்றும் சுரங்கம் 1 ஏ ஆகியவற்றில் இருந்து கன்வயர் பெல்ட் மூலம் அனல்மின் நிலையத்துக்கு கூடுதல் நிலக்கரி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் நிலைமை சீராகி அதிக அளவு மின் உற்பத்தி செய்யப்படும் என்றனர். #neyvelinlc 

    ×