என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 170099"

    பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்ப் மின்நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கப்பட்டுள்ளது
    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை பொறுத்து லோயர்கேம்ப் நீர்மின்நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படும். இங்கு தலா 42 மெகாவாட் மின்உற்பத்தி திறன்கொண்ட 4 ஜெனரேட்டர்கள் உள்ளன. கடந்த மார்ச் 19-ந்தேதி அணையில் இருந்து விவசாயத்திற்கு திறக்கப்பட்டு வந்த நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 100 கனஅடிநீர் திறக்கப்பட்டது.

    இதனால் மின்உற்பத்தியும் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. நேற்று முதல் அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்கு 200 கனஅடியும், குடிநீருக்காக 100 கனஅடியும் என மொத்தம் 300 கனஅடி வெளியேற்றப்பட்டது.

    இதனால் ஒரு ஜெனரேட்டரில் 27 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. நீர்திறப்பு அதிகரிக்கும் போது மின்உற்பத்தியும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இன்று காலை நிலவரப்படி முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 132.30 அடியாக உள்ளது. வரத்து 40 கனஅடி, திறப்பு 300 கனஅடி. இருப்பு 5235 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39 அடி, வரத்து 7 கனஅடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 92.51 அடி, திறப்பு 6 கனஅடி.
    நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்உற்பத்தி 1,989 மெகாவாட்டாக குறைந்தது.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இங்கு 4 அனல் மின்நிலையங்கள் உள்ளன. இவற்றின் மொத்த மின்உற்பத்தி திறன் 2,990 மெகா வாட் ஆகும்.

    இதில் முதல் அனல் மின்நிலையத்தின் மின்உற்பத்தி திறன் 600 மெகா வாட் ஆகவும், 1-வது அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் மின்உற்பத்தி திறன் 420 மெகாவாட் ஆகும். 2-வது அனல் மின்நிலையத்தின் மின்உற்பத்தி திறன் 1,470 ஆகவும், 2-வது அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் உற்பத்தி திறன் 500 மெகாவாட்டாகவும் உள்ளது.

    தற்போது 2-வது அனல் மின்நிலைய விரிவாக்கத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அங்கு மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மற்ற 3 அனல் மின்நிலையங்களில் 1 யூனிட்டில் மட்டும் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அந்த யூனிட்டில் மட்டும் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற யூனிட்டுகளில் தொடர்ந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி முதலாவது அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி 411 மெகா வாட்டாக உள்ளது. முதலாவது அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் 210 மெகா வாட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2-வது அனல் மின்நிலையத்தில் 1,368 மெகா வாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. வழக்கமாக என்.எல்.சி.யில் உள்ள அனல் மின் நிலையங்களில் 2,990 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும். ஆனால் தற்போது இந்த 3 அனல் மின் நிலையங்களிலும் சேர்த்து மின் உற்பத்தி 1,989 மெகா வாட்டாக குறைந்துள்ளது.
    ×