search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the kerala story"

    • நாடு முழுவதும் கடந்த 5-ந் தேதி 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியானது.
    • இப்படம் 4 நாட்களில் ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

    நாடு முழுவதும் கடந்த 5-ந் தேதி 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியானது. கேரளாவில் இந்து, கிறிஸ்தவ பெண்களை மூளை சலவை செய்து வெளிநாட்டுக்கு கடத்தி சென்று தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதாக இந்த படத்தின் கதை சித்தரிக்கப்பட்டு இருந்தது. இதற்கு கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. என்றாலும் எதிர்ப்பை மீறி நாடு முழுவதும் இந்த படம் திரையிடப்பட்டது.

    தமிழ் நாட்டில் பல தியேட்டர்களில் இந்த படம் வெளியானது. இதுபோல கேரளாவிலும் 30-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது. படம் வெளியான 4 நாட்களில் ரூ.50 கோடி வசூலாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த படத்திற்கு மேற்கு வங்காளம் தடை விதித்து உள்ளது.

    இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் வந்தது. இதுபற்றி படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் மும்பை போலீசில் புகார் கொடுத்தார். அதில் படக்குழுவை சேர்ந்தவருக்கு டெலிபோன் மூலம் மிரட்டல் வந்துள்ளது. வீட்டை விட்டு தனியாக வெளியே வந்தால் மீண்டும் வீடு போய் சேரமுடியாது என்று மர்ம நபர் மிரட்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மிரட்டல் வந்த நபருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    • ‘தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்துக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • இப்படத்துக்கு கேரள ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்து விட்டது.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை விதிக்க கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இப்படத்துக்கு கேரள ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்து விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், இம்மனுவை அவசரமாக விசாரிக்க கோரினார்.


    அப்போது இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதா? என்று நீதிபதிகள் கேட்டனர். படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்து விட்டதாக கபில்சிபல் தெரிவித்தார். இதையடுத்து இந்த மனுவை வருகிற 15-ந்தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேற்கு வங்காளத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    • கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.
    • இப்படத்திற்கு வரி விலக்கு அறிவிப்பதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.


    தி கேரளா ஸ்டோரி

    தி கேரளா ஸ்டோரி

    இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டு பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.


    தி கேரளா ஸ்டோரி

    தி கேரளா ஸ்டோரி

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு வெளியான 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் ஒரு பிரிவினரை அவமதிப்பது போன்று வெளியானது. அதுபோல் தான் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படமும் ஒரு பிரச்சினையை உருவாக்குவது போன்று தெரிகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.



    மத்தியப் பிரதேச அரசு கடந்த 6-ம் தேதி இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அறிவித்திருந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு வரி விலக்கு அறிவிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் அறிவித்துள்ளார். 

    • கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.
    • இப்படத்திற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.


    இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில் இன்று முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.


    இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு வெளியான 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் ஒரு பிரிவினரை அவமதிப்பது போன்று வெளியானது. அதுபோல் தான் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படமும் ஒரு பிரச்சினையை உருவாக்குவது போன்று தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மே 5-ஆம் தேதி வெளியானது.
    • இதையடுத்து தமிழகத்தில் உள்ள மால்களில் இன்று முதல் இப்படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது.

    கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்ட படம் 'தி கேரளா ஸ்டோரி'. இந்த படம் சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மே 5-ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது.


    இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில் இன்று முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை ,படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.


    இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை குஷ்பு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்துபவர்கள் எதை கண்டு அச்சம் கொள்கின்றனர் என்றே தெரியவில்லை. வெளிப்படையாக கூறப்பட்ட உண்மையா அல்லது இந்த உண்மையின் அங்கமாக பல ஆண்டுகளாக அமைதியாகவும், தெரியாமலும் இருந்ததா என்று புரியவில்லை. எதை பார்க்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானம் செய்து கொள்ளட்டும். நீங்கள் யாருக்காகவும் முடிவெடுக்க வேண்டாம். காட்சிகளை ரத்து செய்வதற்காக தமிழ்நாடு அரசு நொண்டி காரணங்களை கூறி வருகிறது. இது கட்டாயம் பார்க்கப்பட வேண்டும் என்பதை மக்களிடம் தெரிவிக்க செய்ததற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • தீவிரவாதம் எந்தவிதத்தில் வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்துள்ளார்
    • தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான படமாக இது உள்ளது.

    கோவை,

    தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் கோவை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது

    சாதி, மதம் பிரித்துப் பார்ப்பவர்களால் திராவிட மாடலை புரிந்து கொள்ள முடியாது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    எனக்கு ஒரே ஒரு சிறிய கேள்விதான். நான் தமிழ்நாட்டில் ஒரு இந்துவாக பிறந்தவள். எப்படி எதை வைத்து பிரித்துப் பார்ப்பதனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகைகளுக்கு நீங்கள் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள். பிரதமர் எல்லா மத விழாக்களுக்கும் வாழ்த்து சொல்கிறார். என்னைப் போன்ற கவர்னர்களும் எல்லாம் மத விழாக்களுக்கும் வாழ்த்துக்கள் சொல்கிறோம் எதையும் பிரித்து பார்ப்பது கிடையாது. அதனால் எப்படி பிரித்துப் பார்ப்பதால் நீங்கள் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள் எனக் கூறினால் நன்றாக இருக்கும்.

    ஒரு ஆட்சியில் அறிவிப்புகள் நிறைய வரலாம். ஆனால் அறிவிப்புகளை திரும்ப பெரும் ஆட்சியாக இது இருந்து வருகிறது. மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும்.

    தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் பார்க்கலாம் என இருக்கிறேன். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான படமாக இது உள்ளது. அதற்கு ஆதரவாக இருப்பவர்கள் இந்த படத்தை எதிரானதாக கருதலாம். தீவிரவாதத்திற்கு எதிரானது என்றால் அனைவரும் ஆதரிக்கலாம். பிரதமர் மோடி அதைப்பற்றி தான் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாதம் எந்த விதத்தில் வந்தாலும் அதிலும் குறிப்பாக பெண்கள் இளைஞர்களை குறி வைத்து வந்தால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அவர்களுக்கு ஆதரவான கருத்தை வைத்து படம் எடுத்தால் கருத்து சுதந்திரம், அப்படி இல்லை என்றால் கருத்து சுதந்திரம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்

    • கடந்த 2 நாட்களாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு எதிராக சென்னையில் போராட்டங்கள் நடைபெற்றது.
    • தி கேரளா ஸ்டோரி படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

    சென்னை:

    கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள், முஸ்லிமாக மதம் மாறி ஐ.எஸ்.ஐ. எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்ற காட்சி அமைப்புகளுடன் எடுக்கப்பட்ட 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த 5-ந்தேதி தமிழகத்தில் வெளியானது.

    இந்த படம் வெளியானால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில் தான் 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளியானது. சென்னையில் 13 தியேட்டர்களிலும், கோவையில் 3 தியேட்டர்களிலும் படம் வெளியானது.

    இதையடுத்து 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளியான தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் படம் வெளியான கடந்த 5-ந்தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் 4 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட்டால் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சி சார்பிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் படி அமைந்தகரை சந்திப்பில் உள்ள ஸ்கைவாக் வணிக வளாகத்தை முற்றுகையிட்டு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.

    இப்படி கடந்த 2 நாட்களாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு எதிராக சென்னையில் போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் தி கேரளா ஸ்டோரி படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

    இதனைத்தொடர்ந்து தியேட்டர்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் தி கேரளா ஸ்டோரி படத்தை நிறுத்தியுள்ளதாக தியேட்டர்கள் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி உள்ள தியேட்டர்கள் முன்பு முற்றுகை போராட்டங்கள் நடைபெற்றுள்ளதால் திரையரங்குகளின் பாதுகாப்பு கருதி அந்த படத்தை இன்று முதல் நிறுத்துவது என்று முடிவெடுத்துள்ளோம்.

    இந்த படம் தமிழகம் முழுவதும் வெளியாகவில்லை. சென்னையில் 13 தியேட்டர்களிலும், கோவையில் 3 தியேட்டரிலும் மட்டுமே படம் வெளியாகி இருந்தது. இந்த 2 இடங்களிலும் தியேட்டர்களில் இன்றுமுதல் படம் திரையிடப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு ஸ்ரீதர் தெரிவித்தார்.

    'தி கேரளா ஸ்டோரி' படம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக நடைபெற்ற போராட்டம் காரணமாக தியேட்டர்கள் முன்பு பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் படம் நிறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து தியேட்டர்களில் நீடித்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது.
    • தமிழகத்தில் நேற்று மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் நாளை முதல் திரையிடப்படாது என அறிவிப்பு.

    கேரள மாநில பெண்களை மையமாக வைத்து தி கேரளா ஸ்டோரி திரைப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்று கதை களம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதற்கு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் படத்தை திட்டமிட்டபடி திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.

    இதற்கு தமிழகத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இதையடுத்து திட்டமிட்டபடி தி கேரளா ஸ்டோரி படம் வெளியானது. சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது.

    சென்னை அண்ணாநகர் வி.ஆர். மால், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, விருகம்பாக்கம் ஐநாக்ஸ், வேளச்சேரி பி.வி.ஆர். உள்ளிட்ட அனைத்து தியேட்டர்களிலும் தி கேரளா ஸ்டோரி படம் வெளியானது.

    இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன.

    தமிழகத்தில் நேற்று மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் நாளை முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்ட ஒழுங்கு பிரச்சினை ,படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மத்தியபிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
    • வரி விலக்கை முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

    போபால்:

    தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மத்தியபிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அம்மாநில பா.ஜனதா முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் வரும்போது காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்கள் வந்தன.
    • தற்போது கர்நாடக தேர்தலின் போது ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளிப்படுத்தி இருக்கிறது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

    கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்ட படம் 'தி கேரளா ஸ்டோரி'. இந்த படம் சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் நேற்று வெளியானது. இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.


    தி கேரளா ஸ்டோரி

    தி கேரளா ஸ்டோரி

    இருப்பினும் நேற்று தென்மாநில எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 342 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் 2-வது நாளான இன்று 'தி கேரளா ஸ்டோரி' படத்தை தடை செய்ய கோரியும், படத்தில் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படுவதாக வரும் காட்சிகளை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.


    சீமான்

    சீமான்

    அதன்பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது, இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று தான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கிறோம். தற்போது மதமே ஆட்சி செய்யும் போக்கை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இந்தியாவில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் கொடும் போக்கு நிலவுகிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் வரும்போது காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்கள் வந்தன.


    தி கேரளா ஸ்டோரி

    தி கேரளா ஸ்டோரி

    கர்நாடக தேர்தலின் போது 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளிப்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசும்போது தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை கேட்பவர்கள் நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் ஆவார்கள் என்று பேசுகிறார். இது போன்ற கொடுமை எங்காவது உண்டா? 2024 பாராளுமன்ற தேர்தலுக்கும் ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 8 ஆயிரம் இந்துக் கோயிலை இடித்தவர், 27 தேவாலயங்களை இடித்தவர், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களை கொன்றவர், 2 ஆயிரம் பிராமணர்களை கொன்றவர் 'திப்பு' என்று ஒரு படம் தயாரிக்கப்பட்டு முன்னோட்டம் வந்துள்ளது.


    சீமான்

    சீமான்

    அந்த படம் பாராளுமன்ற தேர்தலையொட்டி வெளிவரும். அதற்கும் நாங்கள் போராட்டம் நடத்துவோம். தி கேரளா ஸ்டோரி படம் உங்கள் மகள்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற கருத்தை மையப்படுத்துகிறது. நீங்களும் உங்கள் மகள்களை இந்த படத்தை பார்க்கவிடாமல் தடுத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் 24 தியேட்டர்களில் கேரளா ஸ்டோரி படம் வெளியானது.
    • சென்னை, கோவை, சேலம், வேலூர் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

    சென்னை:

    கேரள இந்து பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்ற காட்சி அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள தி கேரளா ஸ்டோரி படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும் திட்டமிட்டபடி படம் நேற்று வெளியானது.

    இதையடுத்து படத்தை தடைசெய்யக்கோரி முஸ்லிம் அமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழகத்தில் 24 தியேட்டர்களில் கேரளா ஸ்டோரி படம் வெளியானது. சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

    இந்த நிலையில் கேரள ஸ்டோரி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தமிழகத்தில் படம் வெளியான நகரங்களில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் 4 இடங்களில் போராட்டம் நடந்தது. அண்ணாநகர் வி.ஆர்.மால், விருகம்பாக்கம் ஐநாக்ஸ் தியேட்டர், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, வேளச்சேரி பி.வி.ஆர். தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. தியேட்டர்கள் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருப்பினும் தடையை மீறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    4 இடங்களிலும் 342 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது அனுமதியின்றி கூடியதாக 151 சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைதான அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    நேற்றைய போராட்டம் முறைப்படி அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. அதே நேரத்தில் எதிர்ப்பாளர்கள் யாரும் திடீரென தியேட்டர்கள் முன்பு கூடிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு படம் வெளியாகியுள்ள தியேட்டர்களில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை, கோவை, சேலம், வேலூர் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

    • தி கேரளா ஸ்டோரி படம் பயங்கரவாத செயல்களுக்கு இளைஞர்களை மூளைச்சலவை செய்வது பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
    • விழிப்புணர்வு படத்துக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்த நிலையில் போராட்டம் நடத்துகிறார்கள்.

    சென்னை:

    தி கேரளா ஸ்டோரி படம் தொடர்பாக இந்து முன்னணி மாநகர தலைவர் இளங்கோவன் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    இந்த படம் பயங்கரவாத செயல்களுக்கு இளைஞர்களை மூளைச்சலவை செய்வது பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வு படத்துக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்த நிலையில் போராட்டம் நடத்துகிறார்கள். சீமான் தலைமையில் முற்றுகையிட போவதாக கூறி உள்ளார்கள். அவரை கைது செய்ய வேண்டும். திரையிடப்பட்டுள்ள திரையரங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×