search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thalapathy 63"

    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. #Thalapathy63 #Vijay #ThalapathyVijay
    விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

    தற்போது இதன் படப்பிடிப்பு காசிமேடு கடற்கரை பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு நள்ளிரவில் நடந்தபோதிலும் அங்கு விஜய் மற்றும் நயன்தாராவை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு வருகிறார்கள். அங்கு காத்து நின்ற ரசிகர்கள் முன்னால் வந்து விஜய் கையசைத்தார். இதன் வீடியோ வைரலாகி வருகிறது.



    இந்நிலையில், தற்போது இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை சன் டிவி நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதிபடுத்தி உள்ளது.
    படப்பிடிப்பு முடிந்து விஜய் வீட்டிற்கு செல்லும் வழியில், அவரை பின் தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ் கூறியிருக்கிறார். #Vijay #Thalapathy63
    ‘சர்கார்’ படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருக்கு 63-வது படம். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, ஆனந்த்ராஜ் ஆகியோரும் உள்ளனர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

    சென்னையில் 2 மாதமாக பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். தினமும் விஜய்யை காண படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஏராளமான ரசிகர்கள் கூடுகிறார்கள். மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பின் போது வெளியே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர்.

    படப்பிடிப்பை முடித்து விட்டு புறப்படும் போது ரசிகர்களை பார்த்து விஜய் கையசைப்பதும் பதிலுக்கு அவர்கள் ஆரவாரம் செய்வதும் தினமும் நடந்தது. அதன்பிறகு காட்டாங்கொளத்தூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்பு நடந்தது. அங்கும் ரசிகர்கள் கூடினார்கள்.



    படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் காரில் வீட்டுக்கு புறப்பட்டபோது ஏராளமான ரசிகர்கள் மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து தலைவா தலைவா என்று குரல் எழுப்பியபடி சென்றனர். இதனால் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடக்கூடாது என்று கார் கண்ணாடியை இறக்கி பின்தொடர்ந்து வரவேண்டாம், பத்திரமாக திரும்பி செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    ரசிகர்களுக்கு அவர் அறிவுரை சொல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தில் பிரபல அரசியல்வாதி இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Thalapathy63 #Vijay #ThalapathyVijay
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பின்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய்யின் அறிமுக பாடலையும் படக்குழு படமாக்கியது.

    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், சூப்பர் சிங்கர் ஜூனியரில் மிகவும் பிரபலமான கபீஸ் பூவையார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது இவர்களோடு பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    பிரபல அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத், ‘எல்கேஜி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் ‘தளபதி 63’ படத்தில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Nayanthara
    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. #Thalapathy63 #Vijay #Thalapathy63 #Nayanthara
    மெர்சல், தெறி படத்தை தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி இணைந்திருக்கிறது. ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    சமீபத்தில் பென்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 100 குழந்தைகளுடன் விஜய்யின் அறிமுக பாடலையும் படக்குழு படமாக்கியது.

    அடுத்த படியாக விஜய் - நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்க இருக்கிறார்கள். இதற்காக படக்குழுவினருடன் மார்ச் இரண்டாவது வாரத்தில் நயன்தாரா இணைய இருக்கிறார். 



    இப்படத்தில் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் சூப்பர் சிங்கர் ஜூனியரில் புகழ் கபீஸ் பூவையார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 

    ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஒருவர் இணைந்திருக்கிறார். #Thalpathy63 #Vijay #ThalapathyVijay
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பென்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 100 குழந்தைகளுடன் விஜய்யின் அறிமுக பாடலையும் படக்குழு படமாக்கியது.

    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியரில் மிகவும் பிரபலமான கபீஸ் பூவையார் இணைந்திருக்கிறார். இப்படத்தில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு கானா பாடல் பாடும் வாய்ப்பும் கபீஸ் பூவையாருக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.



    ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Nayanthara
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 63’ படத்தில் பிரபல நடிகரின் மகள் நடிக்க இருக்கிறார். #Vijay #Thalapathy63 #ThalapathyVijay
    தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) சார்பில் சென்னையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பிரியா அட்லி விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இயக்குனர் அட்லி, நடிகர் ரோபோ ஷங்கர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    விழாவில் திரைத்துறையில் பல ஆண்டுகளாக கடை நிலை ஊழியர்களாக பணியாற்றி வரும் நலிந்த ஊழியர்களுக்கு உதவித் தொகையும் பொங்கல் பரிசு பைகளையும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குனர் அட்லி, பிரியா அட்லி, நடிகர் ரோபோ ஷங்கர் ஆகியோர் வழங்கி கவுரவப்படுத்தினர்.

    பொங்கல் விழாவில் இயக்குனர் அட்லி பேசியது, ‘பத்திரிகையாளர்கள் இணைந்து இப்படி ஒரு விழாவை நடத்துவது ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது. குறிப்பாக சொல்வதென்றால் இந்த விழாவில் சினிமாவில் கடை நிலை ஊழியர்களை அழைத்து கவுரவம் செய்வது மிக சிறப்பு. அந்த நிகழ்வில் என்னை அழைத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது’ என்றார்.



    நடிகர் ரோபோ ஷங்கர் பேசும்போது, ‘பத்திரிகையாளர்கள் ஒன்றாக இணைந்து இது போன்ற விழாவை நடத்துவது ரொம்ப சிறப்பு. இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திரைத்துறையில் கடை நிலை ஊழியர்களாக பல ஆண்டுகள் பணியாற்றி வருபவர்களை அழைத்து கவுரவம் செய்திருப்பது.

    நாங்க ஷூட்டிங் 9 மணிக்கு என்றால் ஸ்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் போய் மேக்கப் போட்டு ரெடியானா போதும். ஆனா புரொடக்‌ஷன்ல இருப்பவர்கள் அதிகாலையிலயே ஸ்பாட்டுக்கு வந்து வேலைய ஆரம்பிச்சிடனும். ஏன்னா நடிக்கிறவங்க வந்ததும் காபி இருக்கான்னு கேட்ட அது ரெடியா இருக்கும். அதே மாதிரி ஷூட்டிங் ராத்திரி எத்தனை மணிக்கு முடிஞ்சாலும் எல்லாத்தையும் சுத்தம் பண்ணி கொண்டு போய் சேர்க்க நடு ராத்திரி ஆகிடும். மறு நாள் அதிகாலை மறுபடியும் ஷூட்டிங் ஸ்பாட் வரணும். இடைப்பட்ட சில மணி நேரம் தான் அவங்க தூங்கும் நேரம்.

    இது போல உள்ளவர்களை அழைத்து கவுரவித்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்துக்கு நன்றி. இந்த நல்ல விழாவில் ஒரு நல்ல தகவல் இயக்குனர் அட்லி அவர்கள் அனுமதியோடு சொல்றேன்.



    தளபதி விஜய் படத்தில் நடிக்கப் போறவங்க தேர்வு நடந்து வருது. 
    அதில் என் மகள் நடிக்க தேர்வாகி இருக்கிறார். முன்னாடியே பல வாய்ப்புகள் வந்த போது படிப்பு முக்கியம் என்று தவிர்த்தேன். 
    ஆனால் அட்லி - விஜய் கூட்டணியில் நடிக்க வாய்ப்பு வந்தால் விட முடியுமா. அதனால எப்ப தேதி கேப்பார்னு காத்திருக்கிறேன்’ என்றார்.

    சிறப்பு விருந்தினர்களுக்கு சங்க தலைவர் கவிதா நினைவு பரிசு வழங்கினார். சங்க செயலாளர் கோடங்கி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, முடிவில் சங்க செயற்குழு உறுப்பினர் சஞ்சய் நன்றி கூறினார்.
    அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கும் விஜய், இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சியாளர் மூலம் புதிய முயற்சி ஒன்றை எடுத்து வருகிறார். #Vijay #Vijay63
    நடிகர் விஜய், ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    விளையாட்டு தொடர்பான இந்த படத்தில் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். எனவே, பிரத்யேக பயிற்சியாளர் மூலம் அவரது உடல் அமைப்பு மாற்றப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். 



    கலை இயக்குநர் முத்துராஜ், படத்துக்கான செட் வேலைகளைத் தொடங்கிவிட்டார். வரும் 20ம் தேதி பூஜை போடப்பட்டு, 21ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. ‘மெர்சல்’, ‘சர்கார்’ வரிசையில், இதுவும் தீபாவளிக்கு ரிலீசாகிறது.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 63’ படத்தின் முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. #Thalapathy63 #Vijay #ThalapathyVijay
    தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் இப்படம் விளையாட்டை மையமாகக் கொண்ட படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். 

    இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 63’ என்று அழைத்து வருகிறார்கள். இப்படத்தின் முன்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 



    இந்த படத்தின் பூஜை ஜனவரி 20ம் தேதியும், படப்பிடிப்பு ஜனவரி 21ம் தேதியும் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. #Thalapathy63 #Vijay #ThalapathyVijay
    ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற முதல்வன் படத்தின் இரண்டாவது பாகத்தை விஜய்யை வைத்து இயக்கப் போவதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். #Mudhalvan2 #Shankar #Vijay
    வெற்றி பெறும் படங்களில் இரண்டாம் பாகங்களை எடுப்பதில் தமிழ் சினிமா இயக்குநர்கள் மும்முரமாக இருக்கின்றனர். ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2-ம் பாகம் வெளியானது. இப்போது இந்தியன் 2-ம் பாகத்திலும் நடிக்க தயாராகிறார். தேவர் மகனின் அடுத்த பாகமும் தயாராக உள்ளது.

    சூர்யாவின் சிங்கம் படத்தின் 3 பாகங்கள் வெளியாகின. விக்ரம் நடித்த சாமி படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. தனி ஒருவன் 2, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்கள் உருவாகுகின்றன.

    இந்த நிலையில், அர்ஜுன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வன் படத்தில் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராகி ஊழலை ஒழிப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.



    முதல்வன் படம் வெளியாகி 19 வருடங்கள் முடிந்துள்ள நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்தியன்-2 படத்தை முடித்ததும் முதல்வன்-2 பட வேலைகளை ஷங்கர் தொடங்குவார் என்று தெரிகிறது.

    டி.வி. நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஷங்கரிடம் முதல்வன்-2 படத்தை எடுத்தால் கதாநாயகன் யார்? என்று நடிகை சுருதிஹாசன் கேள்வி எழுப்பினார். அதற்கு “ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் விரும்பினால் அவர்களை வைத்து எடுப்பேன். அவர்கள் இல்லையென்றால் விஜய்யை தேர்வு செய்வேன்” என்று ஷங்கர் பதில் அளித்தார். ரஜினி, கமல் அரசியலுக்கு வந்துள்ளதால் விஜய்க்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    விஜய் தரப்பில் இதுகுறித்து கேட்ட போது, அவர் தற்போது தளபதி 63 படத்தில் பிசியாக இருக்கிறார். அந்த படத்தை முடித்த பிறகே அடுத்த படம் குறித்து முடிவு எடுப்பார் என்று தெரிவித்தனர். #Mudhalvan2 #Shankar #Vijay #Thalapathy63

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 63 படத்தில் அவருடன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #Vijay63 #Thalapathy63 #Vijay #Nayanthara
    சென்னை:

    தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் - அட்லி மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணையவிருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

    ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் என படக்குழுவினர் இன்று தெரிவித்துள்ளனர். #Vijay63 #Thalapathy63 #Vijay #Nayanthara
    சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் ‘தளபதி 63’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Thalapathy63
    விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்க இருக்கிறார் என்றும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் அதை உறுதி செய்திருக்கிறார்கள்.



    ஏ.ஜி.எஸ். தயாரிக்கும் ‘தளபதி 63’ படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் இப்படத்தில் மற்ற நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.
    விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில், விஜய்யின் அடுத்த படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. #Vijay #Thalapathy63
    விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், விஜய்யின் அடுத்த படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் அடுத்த படத்தை ‘தெறி’, ‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்பட்டத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டும் ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது.



    மெர்சல் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் இதில் பணியாற்ற இருக்கிறார்கள். மேலும் இந்த படத்திற்கு ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற தலைப்பும் வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. 
    ×