search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamannaah"

    ‘அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன் அடுத்ததாக இயக்கவிருக்கும் திகில் கலந்த காமெடி படத்தில் தமன்னா முன்னணி கதாபாத்திரமாக நடிக்கிறார். #Tamannaah #RohinVenkatesan
    ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி, ஷிவதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அதே கண்கள்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சி.வி.குமார் இந்த படத்தை தயாரித்தார். 

    இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால், இயக்குநர் ரோகின் வெங்கடேசன் தனது அடுத்த படத்துக்கான கதையில் பொறுமை காத்தார். இறுதியில், திகில், காமெடி பாணியில் ஒரு கதையை உருவாக்கினார். தற்போது இக்கதையில் நடிக்க தமன்னா சம்மதம் தெரிவித்துள்ளார்.



    இதில், யாருக்கும் நாயகியாக தமன்னா நடிக்கவில்லை. தனிப்பட்ட ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும், தமன்னாவோடு நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுதவிர சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து தமன்னா நடித்து வருகிறார். #Tamannaah #RohinVenkatesan

    சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் - தமன்னா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துருக்கி நடைபெற்று வரும் நிலையில் சண்டைக்காட்சியில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. #Vishal
    வி‌ஷால் நடிப்பில் அடுத்ததாக ‘அயோக்கியா’ படம் வருகிற ஏப்ரல் 19-ந் திரைக்கு வர இருக்கிறது. விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் விஷாலுடன் தமன்னா இணைந்து நடிக்கிறார். 

    இதன் படப்பிடிப்பை 50 நாட்கள் துருக்கி நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்காக வி‌ஷால், தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த வாரம் துருக்கி புறப்பட்டுச் சென்றனர். அங்கு கேப்படோசியாவில் உள்ள மலைப்பகுதியில் வி‌ஷால் வில்லன்களுடன் மோதுவது போன்ற சண்டை காட்சி படமாக்கப்பட்டது.



    காரில் செல்லும் வில்லன்களை 4 சக்கரம் உள்ள வெளிநாட்டு பைக்கில் வி‌ஷால் துரத்தி செல்வது போன்ற காட்சியை படமாக்கினர். அப்போது வேகமாக சென்ற பைக் திடீரென்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பைக்கில் இருந்த வி‌ஷால் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் ‘எக்ஸ்ரே’ எடுத்து எலும்பு முறிவு இல்லை என்பதை உறுதி செய்தனர்.

    கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. #Vishal #Tamannaah #SundarC

    சுந்தர்.சி - விஷால் புதிய படத்திற்காக மீண்டும் இணைந்துள்ள நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்புக்காக விஷால், தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர் துருக்கி சென்றுள்ளனர். #Vishal #Tamannaah
    விஷால் - தமன்னா இணைந்து ஏற்கனவே கத்திச் சண்டை படத்தில் நடித்திருந்தனர். நகைச்சுவை கதாபாத்திரங்களில் வடிவேலு, சூரி ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் வரவேற்பு பெறவில்லை.

    அதைத் தொடர்ந்து இருவரும் சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், தற்போது படக்குழு துருக்கிக்கு சென்று படப்பிடிப்பை நடத்த உள்ளது.



    அங்கு 50 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது. முக்கிய காட்சிகள், சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் ஆகியவற்றை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தமன்னா மீண்டும் விஷாலுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளார்.

    அந்தப் படத்தில் தமன்னாவுக்கு வில்லத்தனமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. #Vishal #Tamannaah #SundarC

    பிரபல பாலிவுட் இயக்குநர் சஜித்கான் மீது இந்தி நடிகைகள் ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன்னிடம் அவர் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று கூறினார். #Tamannaah #SajidKhan
    இந்தி நடிகைகள் ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். நடிகர் நானா படேகர் உள்ளிட்ட பலர் இதில் சிக்கினர். பிரபல இந்தி டைரக்டர் சஜித்கான் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சலோனி சோப்ராவும், ஒரு பெண் பத்திரிகையாளரும் புகார் கூறினார்கள்.

    அவர் படத்தில் நடித்த வித்யா பாலன், பிபாஷா பாசு ஆகியோரும் அவர் மீது பாலியல் புகார் கூறினார்கள். இதைத்தொடர்ந்து அவர் இயக்கிய ஹவுஸ்புல்-4 படத்தில் நடிக்க மறுத்து அக்‌ஷய்குமார் விலகினார். இதனால் அந்த படத்தில் இருந்து சஜித்கானை நீக்கிவிட்டனர். சஜித்கான் இயக்கிய ஹிம்மத்வாலா, ஹம்ஷகல்ஸ் ஆகிய இரண்டு இந்தி படங்களில் தமன்னா நடித்து இருந்தார்.



    படப்பிடிப்பின்போது சஜித்கான் தவறாக நடந்துகொண்டாரா? என்று தமன்னாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    “சஜித்கான் இயக்கத்தில் நான் நடித்த இந்தி படங்கள் சரியாக போகவில்லை. அந்த படங்களின் படப்பிடிப்புகள் நடந்தபோது சஜித்கான் எனக்கு எந்த தொந்தரவையும் தரவில்லை. என்னிடம் அவர் தவறாகவும் நடந்து கொள்ளவில்லை. சஜித்கானுடன் பணியாற்றியபோது சவுகரியமாகவே உணர்ந்தேன். மற்ற நடிகைகள் அவர் மீது பாலியல் புகார் கூறியிருப்பது பற்றி எனக்கு தெரியாது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அனுபவங்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி எந்த சங்கடமும் ஏற்படவில்லை”

    இவ்வாறு அவர் கூறினார். #MeToo #Tamannaah #SajidKhan

    நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தமன்னாவை திருமணம் செய்ய ஆசை என்று கூறியிருக்கிறார். #Tamannaah #Shrutihaasan
    தமன்னாவும் ஸ்ருதிஹாசனும் நெருங்கிய தோழிகள் என்பது எல்லாருக்கும் தெரியும். இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசும் புகைப்படங்கள் இணையதளங்களில் அதிகமாக வந்திருக்கும். தனது தோழி தமன்னா பற்றி பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் குறிப்பிடும்போது, ‘

    தமன்னாவின் நட்பை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள். அவர் ஒரு நல்ல பெண். அவர் மட்டும் ஆணாக இருந்திருந்தால் அவருடன் டேட்டிங் சென்று இருப்பேன், ஏன் அவரை திருமணம் கூட செய்திருப்பேன்’ என்றும் கூறினார். 



    நடிகை ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சல் என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இவர்கள் திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Tamannaah #Shrutihaasan
    தமிழில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா, அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்தில் வில்லியாக நடிக்க இருக்கிறார். #Tamannaah
    கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து தமன்னா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அடுத்தடுத்து சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

    முன்னணி நாயகிகள் சிலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் தமன்னா தற்போது தெலுங்கில் தட் இஸ் மகாலட்சுமி, தமிழில் தேவி 2 என இரு படங்களில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். “2019ஆம் ஆண்டில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதே என் விருப்பமாக உள்ளது. இத்தகைய படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தமன்னா தெரிவித்துள்ளார்.



    விஷாலுடன் இணைந்து கத்திச் சண்டை படத்தில் நடித்த அவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் சேர்ந்து நடித்து வருகிறார். இதில் வில்லத்தனமான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சவாலான கதாபாத்திரத்தில் அதில் நடிக்க உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் வலுப்பெற வேண்டும் என கூறியுள்ளார்.

    தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான எப் 2 படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அவர் ஓம்கர் இயக்கத்தில் ராஜு கரி காதி 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    உதயநிதி ஜோடியாக கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ள தமன்னாவின் கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், கிசுகிசுக்கள் படிப்பது தனக்கு பிடிக்கும் என்று தமன்னா கூறியுள்ளார். #Tamannaah
    கண்ணே கலைமானே படத்தில் தமன்னாவின் வேடத்திற்கு பாராட்டுகள் குவிகின்றன. இது தமன்னாவை உற்சகாப்படுத்தி உள்ளது. இடையில் அவருக்கு படங்களே இல்லை என்ற ரீதியில் செய்திகள் வந்தன.

    இதுபற்றிய கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில் ‘நடிப்பு வாழ்க்கை முடியப் போகிறது என்று சொல்லும் ட்வீட்களையும், கிசுகிசுக்களையும் படிப்பது பிடிக்கும். என் கதை முடிந்துவிட்டது என்று சொல்லும்போது எனக்கு அதில் இருந்து அதிக உற்சாகம் கிடைக்கும்.



    ஏனென்றால் அப்போது நான் ஒரு புதுமுகம் போல உணர்வேன். அது என்னை இன்னும் அதிகமாக உழைக்க வைக்கும். நானும் உழைப்பேன். அப்படி இதற்குமுன் அப்படியான தோல்வி முகத்தில் நான் இருந்தபோது தான் ‘பாகுபலி’ வாய்ப்பு வந்தது. ஒரு நடிகையாக நடிப்பு வாழ்க்கை போதும் என்று நான் நினைக்கும்போது தான் எனது தொழில் வாழ்க்கை முடியும். எனக்குள் இருக்கும் நடிகைக்கு எப்போதும் ஓய்வு இல்லை என்று கூறி இருக்கிறார். #Tamannaah #KanneKalaimaane

    கண்ணே கலைமானே படம் ரிலீசாகி இருக்கும் நிலையில், தமன்னா அளித்த பேட்டியில், விஜய் சேதுபதி பற்றி அவர் கூறும் போது, அவர் பயங்கரமான ஆளு, இயற்கையான நடிகர் என்றார். #KanneKalaimaane #Tamannaah
    சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் கண்ணே கலைமானே வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கெண்டிருக்கிறது. இந்த நிலையில், மாலைமலர் இணையதளத்திற்கு தமன்னா அளித்த பிரத்யேக பேட்டியில் பேசியதாவது,

    சீனு ராமசாமி பற்றி?

    சீனு ராமசாமி சார் ஒரு தேசியவாதி. வேறு நாட்டு பொருட்களுக்கு பதிலாக, இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். பெண்ணியத்தை மதிப்பவர். அவருடைய படத்தில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.



    தமிழ் பையன தான் கல்யாணம் பண்ணவேன்ணு சொன்னீர்களே?

    நான் முன்னதாக அளித்த பேட்டி ஒன்றில் தவறாக அது புரிந்து கொள்ளப்பட்டது. மொழி பிரச்சனையால் அப்படி புரிந்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன். நான் அப்படி சொல்லவில்லை. ஒரு நல்ல பையன் கிடைக்க வேண்டும். தமிழோ அல்லது வேறு எந்த மொழி, சாதி, மதமாக இருந்தாலும் பரவாயில்லை. நல்லவராக இருக்க வேண்டும்.


    உடன் நடித்த நடிகர்கள் பற்றி கேட்ட போது அவர் கூறிய பதில்களாவன, 

    விஜய் சேதுபதி - இயற்கையான நடிகர். அவர் மட்டும் எப்படி இயற்கையாக இருக்கலாம். அவருடன் நடிக்க பயமாக இருக்கும். எனக்கு பிடித்த நடிகர்களுள் அவரும் ஒருவர். அவர் நடிப்பதே தெரியாது, அந்த அளவுக்கு சிறந்த நடிகர். மணிரத்னம் படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்துவிட்டேன். பயங்கரமான நடிகர்.

    கார்த்தி - கார்த்தியுடன் 3 படம் நடித்திருக்கிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புபவர். 

    விஜய் - ரொம்ப அமைதியாக இருப்பார். 

    அஜித் - குடும்ப மனிதர். படப்பிடிப்பு தளத்தில் எங்களுக்கு சமைத்து கொடுப்பார். 

    பிரபாஸ் - பாகுபலி, உண்மையான பாகுபலி. இரக்க குணமுடையவர். பலமானவர். 

    இவ்வாறு கூறினார். #KanneKalaimaane #Tamannaah #UdhayanidhiStalin #VijaySethupathi

    சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கண்ணே கலைமானே' படத்தின் விமர்சனம். #KanneKalaimaane #KanneKalaimaaneReview #UdhayanidhiStalin
    அப்பா பூ ராமு, பாட்டி வடிவுக்கரசியின் வளர்ப்பில் வளரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களது பேச்சை தட்டுவதில்லை. விவசாயம் செய்வதற்கான படிப்பை முடித்து இயற்கை விவசாயம் செய்யும் முனைப்பில் இருக்கிறார்.

    அதேபோல் கஷ்டப்படும் தனது ஊர் மக்களுக்கு வங்கியில் கடன் பெற்றுத் தந்து, அவர்களால் அதை அடைக்க முடியாவிட்டால் தானே முன்வந்து அதனை அடைக்கிறார். இந்த நிலையில், அந்த ஊரிருக்கு வங்கி அதிகாரியாக வரும் தமன்னா, ஒரே நபர் ஊரில் உள்ள  பலருக்கும் கடன் வாங்கி கொடுத்திருப்பதை பார்த்து உதயநிதி ஸ்டாலின் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்.


    உதயநிதி ஸ்டாலினுக்கு இது கோபத்தை உண்டுபண்ண, உதயநிதி தமன்னா இடையே சிறிய மோதல் ஏற்படுகிறது. பிறகு இவர்களுக்கிடையே ஒரு புரிதல் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. பின்னர் தங்களது விருப்பத்தை வீட்டில் தெரிவிக்கின்றனர். வடிவுக்கரசிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் போக, இருவரையும் சந்திக்கவோ, பேசவோ விடாதபடி செய்கிறார். 

    கடைசியில், உதயநிதி - தமன்னாவின் காதல் என்னவானது? இருவரும் இணைந்தார்களா? இவர்களது திருமணத்திற்கு வடிவுக்கரசி சம்மதித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    விவசாயியாக வரும் உதயநிதி படம் முழுக்க கமலக்கண்ணன் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டாவது பாதியில் தனது மவுனத்தின் மூலமே தனக்கு உண்டான வலியை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். விவசாயிகள் கடன், நீட் பற்றி தைரியமாக பேசியிருக்கிறார். நிமிர் படத்திற்கு பிறகு உதயநிதியிக்கு முக்கிய படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அழுத்தமான கதாபாத்திரத்தில் தனது குடும்பத்தை வழிநடத்தும் தைரியமான பெண்ணாக தமன்னா சிறப்பாக நடித்திருக்கிறார். பண்பானவராக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் தமன்னாவுக்கு பாராட்டுக்கள்.



    கோபம், காமெடி என வடிவுக்கரசி வித்தியாசமான பாட்டி வேடத்தில் வந்து கவர்ந்து செல்கிறார். பூ ராமுவுக்கு வசனங்கள் அதிகமாக இல்லை என்றாலும், பார்வையாலேயே நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். சில வசனங்களே பேசினாலும் அதில் பொதிந்து இருக்கும் உண்மைகள் நிதர்சனமானவை என்பதை உணர்த்திச் செல்கிறார். மற்றபடி வசுந்தரா, சரவணன் சக்தி, அம்பானி சங்கர், தீப்பெட்டி கணேசன், ஷாஜி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ப போதுமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வடிவுக்கரசிக்கு தகவல் கொடுக்கும் கதாபாத்திரமும் கவரும்படியாக இருக்கிறது. 



    ஒரு சாதாரண கதையில் பாசத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார் சீனு ராமசாமி. கண்ணுக்குள் புதைந்திருக்கும் ஈரத்தை தன்னுடைய காட்சிகள் மூலம் கண்ணீராக வரவைப்பதில் சீனு ராமசாமி கைதேர்ந்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. இரண்டாவது பாதியில் சென்டிமெண்ட் காட்சிகள் மூலம் ஈர்த்துவிடுகிறார். கதாபாத்திரங்களிடம் எதார்த்தமான நடிப்பை வரவைப்பதில் சீனு ராமசாமி வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். மூ. காசி விஸ்வநாதனின் நேர்த்தியான படத்தொகுப்பு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

    விவசாயிகளின் வலி, நலிவடைந்து வரும் நெசவுத் தொழிலை காப்பாற்ற வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தும் மண் சார்ந்த கதையை உருவாக்கிய சீனு ராமசாமிக்கு பாராட்டுக்கள். மிகைப்படுத்தாத வசனங்கள் இயல்பானதாக படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.



    யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் உணர்ச்சிப்பூர்வமாக கலங்க வைக்கின்றன. ஜலேந்தர் வாசனின் ஒளிப்பதிவில் இயற்கை காட்சிகள் கண்ணுக்கு இனிமையாக இருக்கிறது. அருமை.

    மொத்தத்தில் `கண்ணே கலைமானே' அன்பான படம். #KanneKalaimaane #KanneKalaimaaneReview #UdhayanidhiStalin #Tamannaah

    சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் `கண்ணே கலைமானே' படத்தின் முன்னோட்டம். #KanneKalaimaane #UdhayanidhiStalin #Tamannaah
    ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `கண்ணே கலைமானே'.

    உதயநிதி ஸ்டாலின் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், பூ ராமு, வடிவுக்கரசி, ஷாஜி சென், வசுந்தரா காஷ்யப், விடிவி கணேஷ், வெற்றிக்குமாரன், அம்பானி சங்கர், தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - யுவன் ஷங்கர் ராஜா, பாடல்கள் - வைரமுத்து, ஒளிப்பதிவு - ஜலந்தர் வாசன், படத்தொகுப்பு - மூ.காசிவிஸ்வநாதன், கலை இயக்குநர் - விஜய் தென்னரசு, ஒலி வடிவமைப்பு - டி.உதய்குமார், இணை தயாரிப்பு - எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜூன் துரை, தயாரிப்பு - உதயநிதி ஸ்டாலின், எழுத்து, இயக்கம் - சீனு ராமசாமி.



    படம் பற்றி தமன்னா பேசும் போது,

    இதில் பாரதி என்னும் வங்கி அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் கதையை கேட்ட உடனே உதயநிதியிடம் நீங்கள் இதில் நடிக்கிறீர்களா? என்று ஆச்சர்யமாக கேட்டேன். காரணம் படத்தில் அவருக்கு இணையாக எனக்கும், வடிவுக்கரசி அம்மாவுக்கும் முக்கியத்துவம் இருக்கும். இது ஒரு காதல் கதை. படம் பார்த்தேன். படத்தில் எந்த காட்சியிலுமே உதயநிதியும் தமன்னாவும் தெரியவில்லை. கமலக்கண்ணனும் பாரதியும்தான் தெரிந்தார்கள். சில காட்சிகளில் நான் அழுதுவிட்டேன். படத்திற்குள் சின்ன சின்ன அரசியலும் இருக்கிறது. உலகின் எந்த மொழியிலும் சப்டைட்டில் இல்லாமலேயே இந்த படத்தை புரிந்துகொள்வார்கள் என்றார்.

    படம் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. #KanneKalaimane #UdhayanidhiStalin #Tamannaah

    கண்ணே கலைமானே டிரைலர்:

    தமன்னா நடித்துள்ள கண்ணே கலைமானே படம் வரும் வாரம் வெளியாக இருக்கும் நிலையில், பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். #Tamannaah #KanneKalaimaane
    சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா நடித்துள்ள கண்ணே கலைமானே படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்துள்ள தமன்னா அளித்த பேட்டி:

    கண்ணே கலைமானே படம் பற்றி?

    இதில் பாரதி என்னும் வங்கி அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் கதையை கேட்ட உடனே உதயநிதியிடம் நீங்கள் இதில் நடிக்கிறீர்களா? என்று ஆச்சர்யமாக கேட்டேன். காரணம் படத்தில் அவருக்கு இணையாக எனக்கும், வடிவுக்கரசி அம்மாவுக்கும் முக்கியத்துவம் இருக்கும். இது ஒரு காதல் கதை. படம் பார்த்தேன். படத்தில் எந்த காட்சியிலுமே உதயநிதியும் தமன்னாவும் தெரியவில்லை. கமலக்கண்ணனும் பாரதியும்தான் தெரிந்தார்கள். சில காட்சிகளில் நான் அழுதுவிட்டேன். படத்திற்குள் சின்ன சின்ன அரசியலும் இருக்கிறது. உலகின் எந்த மொழியிலும் சப்டைட்டில் இல்லாமலேயே இந்த படத்தை புரிந்துகொள்வார்கள்.

    உதயநிதி?

    அவரை பார்க்கும்போது பொறாமையாக இருக்கும். எது நடந்தாலும் பார்ப்பதற்கு அப்பாவியாகவே தெரிவார்.



    இந்த படத்தில் நடித்ததற்காக கிடைத்த பாராட்டு?

    ஒரு காட்சியில் சிறப்பாக நடித்ததற்காக இயக்குனர் அல்வா கொடுத்தார். அந்த திருநெல்வேலி அல்வா எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. எனக்கு அதுவே மிகப்பெரிய பரிசு. அல்வா என்றதும் வேறு அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டாம். பாராட்டும்போது இனிப்பு கொடுக்கவேண்டும் என்பதற்காக கொடுத்தது. சீனு சார் படத்தில் நடிக்கும்போது தான் ஒரு சாதாரண குடும்ப பெண்ணுக்கு இருக்கும் பலங்கள் புரிகிறது. தர்மதுரையிலேயே அதை உணர்ந்தேன். ஆனால் பாரதி மிகவும் வித்தியாசமானவள்.

    கவர்ச்சி இல்லாமல் நடிக்கும் அனுபவம்?

    இதிலும் கவர்ச்சி இருக்கிறது. கவர்ச்சி என்றால் எல்லோரும் நினைப்பது போன்ற உடல் கவர்ச்சி அல்ல. முகத்தில் தெரியும் நடிப்பு உணர்ச்சியே கவர்ச்சி. அதிகமான குளோஸ் அப் காட்சிகள் இருக்கின்றன. எனது வேடம் மிகவும் இயல்பாக இருக்கும்.

    தமிழ் நன்றாக பேசுகிறீர்களே?

    நான் தமிழ் பெண் தானே...

    அப்போ தமிழ் பையனை திருமணம் செய்துகொள்வீர்களா?

    நிச்சயமாக. சீனு சாரிடம் பார்க்க சொல்லி இருக்கிறேன். தமிழ்நாட்டு மாப்பிள்ளைக்காக காத்திருக்கிறேன்.
    நயன்தாரா - தமன்னா இருவரும் சிரஞ்சீவியின் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் இணைந்து நடிக்கும் நிலையில், இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Nayanthara #Tamannaah
    நயன்தாரா சினிமாவில் யாருடனும் எளிதில் நட்பாகிவிட மாட்டார். முக்கியமாக சக நடிகைகள் என்றாலே அவருக்கு அலர்ஜி. எனவேதான் நயன்தாராவுக்கு நடிகைகளில் நெருக்கமான தோழி என்று யாரும் இல்லை. மோதலில் தொடங்கிய ஒரு பிரச்சினை நயன்தாராவையும், திரிஷாவையும் தோழிகளாக இணைத்தது.

    இருவரையும் இணைத்து நடிக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்தது. பின்னர் அதில் சர்ச்சை ஏற்பட்டு திரிஷா நடிக்காமல் ஒதுங்கிவிட்டார். இதனால் அந்த படம் ஆரம்பநிலையிலேயே நிற்கிறது. இதற்கிடையில் நயன்தாராவுக்கு புதிய தோழியாக கிடைத்திருக்கிறார் தமன்னா. சிரஞ்சீவி நடிக்கும், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.



    இந்த படத்தில் முக்கிய வேடத்தில் தமன்னா நடிக்கிறார். வரலாற்று பின்னணியில் உருவாகும் இதில் அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நயன்தாராவுக்கும், தமன்னாவுக்கும் நட்பு மென்மையாக தொடர்வதை அடுத்து சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் புதிய படத்தில் இந்த இரண்டு ஹீரோயின்களும் இணைந்து நடிக்க உள்ளதாக பட தரப்பிலிருந்து தகவல் கசிகிறது. சிரஞ்சீவியின் 152-வது படமாக உருவாகும் இதை கொரட்டலா சிவா இயக்க இருக்கிறார். #Nayanthara #Tamannaah

    ×