search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மந்திரம்"

    • ஆறடி உயரத்தில் கருங்கற்சிலையாக கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார்
    • அன்றைய தினம் லாபம் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை

    கோபி அருகே கூகலூர் ஆஞ்சநேயரை மகப்பேறு இல்லாதவர்களும், நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இவரை வழிபட்டு நற்பலனை பெறுகிறார்கள்.

    ஆறடி உயரத்தில் கருங்கற்சிலையாக கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார் அனுமன்.

    உடல்நலம் சரியில்லாதவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் இங்கே வந்து, வடைமாலை சாற்றி வழிபட்டால் விரைவில் நலம் பெறுவர் என்பதும் தன்னம்பிக்கையாக இருக்கிறது.

    சுற்று வட்டாரத்தில் இருக்கும் வியாபாரிகள் பலர், தினமும் கடை திறப்புக்கு முன் கடைச்சாவியை இவரது திருவடியில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.

    அப்படி செய்தால் அன்றைய தினம் லாபம் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

    • திருச்செந்தூரின் கடலோரத்தில் உள்ள 24 தீர்த்தங்களில் சேது தீர்த்தமும் ஒன்று.
    • இங்கிருந்து தான் அனுமன் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    திருச்செந்தூர் கடல் பகுதியில் இருந்து தென் இலங்கை மிக அருகாமையில் அமைந்துள்ளது.

    திருச்செந்தூரின் கடலோரத்தில் உள்ள 24 தீர்த்தங்களில் சேது தீர்த்தமும் ஒன்று.

    இங்கிருந்து தான் அனுமன் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டால் சேதுசமுத்திர திட்டம் எந்தவித இடையூறும் இல்லாமல் நிறைவேறும் என்ற கருத்து வரலாற்று ஆய்வாளர்களால் எடுத்து கூறப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரத்துக்கு அருகாமையில் அமைந்திருப்பது வட இலங்கை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் விளக்கம் ஆகும்.

    காரிய சித்தி ஆஞ்சநேயர்

    உன்னதமான இந்தப் படத்தை பூஜா மண்டபத்தில் வைத்திருந்தாலே சகல தோஷங்களும் விலகி, சத்ருபயம் நீங்கி சகல சம்பத்தும், ஐஸ்வர்யமும் உண்டாகும் என்பது சாஸ்திர விதி.

    • நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம், வெள்ளி கவசம் சாத்தப்படுகிறது.
    • நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம், வெள்ளி கவசம் சாத்தப்படுகிறது.

    முத்தங்கி, வெண்ணை காப்பு, சந்தன காப்பு அலங்காரமும், புஷ்ப அங்கி அலங்காரமும் செய்யப்படுகிறது.

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம் அணிவித்து அவரை தரிசனம் செய்தால், லட்சுமி அருள் கிடைக்கும்.

    வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு ஏற்படும்.

    சங்கடங்கள் நீங்கும்

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் அணிவித்து அவரை தரிசனம் செய்தால், மனதில் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.

    மனக்குழப்பம் தீரும். அறிவாற்றல் பெருகி மகிழ்ச்சி ஏற்படும்.

    திருமணம் கைகூடும்

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அணிவித்து அவரை தரிசனம் செய்தால், நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    அதேபோல், நீண்ட நாட்கள் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

    நோய்களைத் தீர்க்கும் வெண்ணைகாப்பு

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்து அவரை தரிசனம் செய்தால், நோய்கள் நீங்கும்.

    சந்தனக்காப்பு அலங்காரம் செய்து அவரை தரிசனம் செய்தால், லட்சுமியின் அருள் கிட்டும்.

    புஷ்ப அங்கி அலங்காரம் செய்து அவரை தரிசனம் செய்தால், மனதில் நினைத்தவை விரைவில் நிறைவேறும்.

    3 மாதங்களுக்கு மட்டுமே வெண்ணை காப்பு

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு குளிர் காலத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    எல்லா நாட்களிலும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    வடைமாலை

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் வடைமாலை சாற்றப்படுகிறது.

    பொது அபிசேகமும் நடத்தப்படுகிறது.

    அமாவாசை நாட்களில் சிறப்பு அபிசேகமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    • உம்மால் இயலாததும் உள்ளதோ சொல்வீர்.
    • ஆஞ்சநேயரே என் பிராத்தனையை நிறைவேற்றிட அருள்புரிய வேண்டும்.

    அனுமன் மந்திரம் வருமாறு:

    ஓம் ஜம் ஹரீம், ஹனுமதே ராமதூதாய

    லங்கா வித்வம்ஸனாய: அஞ்ஜனா கர்ப்ப ஸ்ம்பூதாய,

    ஸாகினீடாகினீவித்வப்ஸனாய, கிலகிய பூபூ காரினே

    விபீக்ஷணாய, ஹனுமத் தேவாய, ஓம் ஐம்

    ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம் ஹீரீம் ஹ்ரும் பட் ஸ்வாஹா

    அனுமன் மந்திரத்தின் பொருள் வருமாறு:

    செயற்கரிய செயல்புரியும் என் சுவாமியே(ஆஞ்சநேயரே), உம்மால் இயலாததும் உள்ளதோ சொல்வீர்.

    ஸ்ரீ ராமதூதரும் கருணைக் கடலும் ஆகிய ஆஞ்சநேயரே என் பிராத்தனையை நிறைவேற்றிட அருள்புரிய வேண்டும்.

    • அவ்வாறு செய்வதால் சனி, ராகு இடையூறுகளில் இருந்து மனிதர்கள் விடுபடலாம்.
    • ஆஞ்சநேயருக்கு நோய் நீக்கும் துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.

    நவக்கிரகங்களின் அங்கமாக விளங்கும் ராகுவும், சனியும் ஒரு முறை ஆஞ்சநேயரிடம் தோல்வி அடைந்து உள்ளனர்.

    அதனால், அவர்கள் ஆஞ்சநேயருக்கு கீழ் படிந்தவர்களாக உள்ளனர்.

    புவியில் சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அவர்களை திருப்திப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ராகுவுக்கான உளுந்தும், சனிக்கான எள் எண்ணையும் சேர்த்து செய்த வடைமாலையை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபாடு நடத்தலாம்.

    அவ்வாறு செய்வதால் சனி, ராகு இடையூறுகளில் இருந்து மனிதர்கள் விடுபடலாம்.

    அதன் காரணமாக ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது.

    நோய் தீர்க்கும் துளசி தீர்த்தம்

    ஆஞ்சநேயருக்கு நோய் நீக்கும் துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.

    பக்தர்களுக்கு துளசி தீர்த்தமும் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

    • சக்தி மிக்க அம்பால் அனுமார் தாக்கப்பட்டார்.
    • அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடலில் அனுமார் வெண்ணை பூசிக்கொண்டார்.

    ராமன் ராவணன் யுத்தம் நடந்தபோது ராமரையும், லட்சுமணனையும் தோளில் சுமந்து கொண்டு அனுமார் சென்றுள்ளார்.

    அப்போது ராவணன் சரமாரியாக அம்பு எய்தினார்.

    சக்தி மிக்க அம்பால் அனுமார் தாக்கப்பட்டார்.

    அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடலில் அனுமார் வெண்ணை பூசிக்கொண்டார்.

    அதுபோல, வெண்ணை விரைவில் உருகும் தன்மை கொண்டதால் அந்த வெண்ணை உருகுவதற்கு முன்னதாகவே, நாம் நினைத்த காரியம் நிறைவேறும்.

    இதனாலேயே பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்கின்றனர்.

    • அங்கே அசோகவனத்தில் சீதையை கண்டார்.
    • அனுமார் சீதைக்கு பிடித்த செம்மண்ணை அவரும் உடல் முழுவதும் பூசிக்கொண்டார்.

    ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடி அனுமார் இலங்கை சென்றார்.

    அங்கே அசோகவனத்தில் சீதையை கண்டார். ராமர் நலமாக உள்ளாரா? என்று சீதை அனுமாரிடம் கேட்க,

    அவர் எப்போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்று அனுமார் கூறியுள்ளார்.

    இதனை கேட்ட சீதை மகிழ்ச்சி அடைந்து தரையில் இருந்த செம்மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டார்.

    இதனை பார்த்த அனுமார் சீதைக்கு பிடித்த செம்மண்ணை அவரும் உடல் முழுவதும் பூசிக்கொண்டார்.

    இதனால் அவருக்கு செந்தூரகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    • நோய்கள் நீங்க தினமும் "ராம ராம" என்று 108 முறை சொல்லலாம்.
    • தினமும் 108 முறை கீழ்கண்ட ஆஞ்சநேயர் ஸ்லோகத்தை சொல்லி ஆஞ்சநேயரை வேண்டி கொள்ளலாம்.

    நோய்கள் நீங்க தினமும் "ராம ராம" என்று 108 முறை சொல்லலாம். இப்படி மனதளவில் "ராம ராம" என்று சொல்லி ராமரை வேண்டுவது விஷ்ணு சகஸ்ர நாமத்தை முழுவதும் ஒரு முறை கூறுவதற்கு சமமாகும்.

    ஆஞ்சநேயர் மந்திரம்

    வெற்றிகளை பெற தினமும் 108 முறை கீழ்கண்ட ஆஞ்சநேயர் ஸ்லோகத்தை சொல்லி ஆஞ்சநேயரை மனதில் வேண்டி கொள்ளலாம்.

    மந்திரம் வருமாறு:

    ஓம் ஆஞ்சநேய வித்மஹே

    வாயு புத்ராய தீமஹி

    தந்நோ ஹனுமந் ப்ரசோதயாத்

    • கண் மூடி தியானித்து “ராம், ராம்” என்று சொன்னாலே போதும்! அனுமானுக்கு இதை விட பிரியமானது எதுவும் இல்லை.
    • அசைவ (புலால்) உணவை முழுமையாக ஒதுக்குங்கள்.

    எந்த நேரமும் தன்னை மறந்து ஸ்ரீராம தியானத்தில் இருக்கும் அனுமானுக்கு, தன்னைத் துதிப்பதை விட தனது இறைவன் ஸ்ரீராமனைத் துதிப்பதே பிடிக்கும்.

    எனவே, அனுமானைப் பூஜித்து எவ்வளவு தடவை முடியுமோ, அவ்வளவு தடவைகள் "ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெயராம்!" என்ற மந்திரத்தை, குரு உபதேசம் பெற்று ஜெயிப்பது நல்லது.

    அனுமானை வழிபடுபவர்கள், பூஜை நேரத்திலும் இதர முக்கிய புண்ணிய தினங்களிலும் கண்டிப்பாக, பிரம்மச்சர்ய விரதம் மற்றும் புலனடக்கம் அனுஷ்டிக்க வேண்டும்.

    அசைவ (புலால்) உணவை முழுமையாக ஒதுக்குங்கள்.

    இதுவும் கண்டிப்பான நிபந்தனை! வடைமாலை மற்றும் வெற்றிலை மாலையை, காரிய சித்திக்காக அனுமானுக்கு சாற்றலாம்.

    தினசரி "ஸ்ரீராமஜெயம்" முடிந்தவரை எழுதலாம்.

    அனுமானின் வாலுக்கு, 1 மண்டலம் (48 நாட்கள்) சந்தனக் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டே வந்து இறுதி நாளில், விசேஷ பூஜை செய்து காரிய சித்தி அடையலாம்.

    கண் மூடி தியானித்து "ராம், ராம்" என்று சொன்னாலே போதும்! அனுமானுக்கு இதை விட பிரியமானது எதுவும் இல்லை.

    தியாகராஜ சுவாமிகள் 96 கோடிகள் இம்மந்திரத்தை ஜெபித்து, ஸ்ரீராமதரிசனம் பெற்றார்!

    • உடல் மற்றும் மன வலிமையை பெருக்க நினைப்பவர்கள் ஆஞ்ச நேயரை வழிபடலாம்.
    • ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம்.

    1) ஆஞ்சநேயர் என்றால் பளிங்கு போல் களங்கமற்ற மனம் உடையவன் என்று பொருள்.

    பொன் நிறமுடையவன் என்ற பொருளும் அவருக்கு உண்டு.

    அஞ்சனை மைந்தன், குண்டலங்களால் ஒளி விடும் முகத்தை உடையவன், கரங்கூப்பி வணங்கி கொண்டு இருப்பவன் என்ற பொருள்களும் உண்டு.

    2) ஆஞ்சநேயரை வழிபட்டால் மக்கள் பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றவற்றை பெறலாம்.

    3) ஆஞ்சநேயரை மனதில் நினைப்பவர்கள் இந்த பிறவியில் சர்வ காரிய சித்தி பெற்று ஆரோக்கியத்துடன் வாழ்வர்.

    மறு பிறவியில் ராமன் அருளால் முக்தியும் அடைவார்கள்.

    4) உடல் மற்றும் மன வலிமையை பெருக்க நினைப்பவர்கள் ஆஞ்ச நேயரை வழிபடலாம்.

    5) ஆஞ்சநேயரின் வாலுக்கு 48 நாட்கள் சந்தனம், குங்குமம் வைத்து வழிபட்டு வந்தால் நன்மைகள் பல அடையலாம்.

    ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஒரு ஐதிகம் உள்ளது.

    6) படிப்பில் மந்தமான குழந்தைகளை "ஸ்ரீ ராமஜெயம்" 108 முறை அல்லது 1008 முறை எழுத வைத்து

    அதை மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு அணிவித்தால் அந்த குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

    7) "ராம் ராம்" என்ற ராம நாமத்தை தியாகராஜ சுவாமிகள் 96 கோடி தடவை ஜெபித்து ஸ்ரீராமர் தரிசனம் பெற்றார்.

    8) தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும் ஆஞ்ச நேயர் ஜெயந்தியை மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் கொண்டாடுகிறார்கள்.

    மார்கழியில் மூல நட்சத்திரமும், அமாவாசையும் சேர்ந்து வராவிட்டால் அமாவாசையில் ஆஞ்ச நேயர் ஜெயந்தியை கொண்டாடலாம்.

    ஆனால் வட மாநிலங்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி வைகாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் தசமி திதியன்று கொண்டாடப்படுகிறது.

    9) ஆஞ்சநேயருக்கு "நைஷ்டிகப் பிரம்மசாரி" என்ற ஒரு பெயரும் உண்டு. அவர் பிரம்மச்சாரி என்றாலும் பெண்களும் அவரை வழிபடலாம்.

    10) ஆஞ்சநேயருக்கு "சிறிய திருவடி" என்ற சிறப்பு பெயர் உண்டு. (பெரிய திருவடி& கருடன்)

    11) சித்திரையில் ஸ்ரீராம நவமி தினத்திலும், மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் ஆஞ்ச நேயரை வழிபடலாம்.

    12) ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆஞ்சநேயரை வழிபடலாம்.

    13) ராகவேந்திர சாமிகள் பிருந்தாவன பிரவேசம் செய்வதற்கு முன்பு பஞ்சமுகியில் ஆஞ்சநேயரை தியானித்தார் என்று வரலாறு கூறுகிறது.

    14) வியாசராஜர் 732 இடங்களில் ஆஞ்சநேயர் சிலையை பிரதிஷ்டை செய்து உள்ளார்.

    15) புரந்தர தாசர் ஆஞ்சநேயர் பாடல்களை பாடி உள்ளார்.

    துளசி ராமாயணத்தில் ஆஞ்சயநேயரைப் பற்றி பாராயணம் உள்ளது.

    16) சுந்தர காண்டத்தில் ஆஞ்ச நேயரின் புகழ் பற்றி குறிப்பிப்பட்டு உள்ளது.

    17) ஆஞ்சநேயர் கடலை கடந்தது, இலங்கையில் சீதையை மீட்டது,

    போர்க்களத்தில் சுருண்டு விழுந்த லட்சுமணன் உள்ளிட்டவர்களுக்கு மூலிகை உள்ள மலையை தூக்கி வந்து மூலிகையால் அவர்களை குணப்படுத்தியது

    என்று அவர் செய்த செயல்கள் அனைத்தும் வெற்றியானது.

    அதேபோல ஆஞ்சநேயரை வழிபட்டவர்களுக்கு அனைத்து காரியங்களிலும் ஆஞ்ச நேயர் வெற்றியை கொடுப்பார்.

    18) ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம்.

    19) ஆஞ்சநேயரின் படத்தையும், ராமர் பட்டாபிஷேக படத்தையும் வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

    20) வீட்டு வாசலில் சிலர் வாஸ்து கணபதி படத்தை வைத்து இருப்பார்கள்.

    ஆனால் வீட்டு வாசலில் ஆஞ்சநேயர் படத்தை வைக்கக்கூடாது.

    • சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் உயரமான ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
    • பீகார் மாநிலம் பாட்னாவிலும், குஜராத் மாநிலம் சாரன்பூரிலும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளது.

    பஞ்சமுக ஆஞ்சநேயர்

    சேலம் உடையாப்பட்டியில் உள்ள கந்தாஸ்ரமத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் உள்ளார்.

    சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் உயரமான ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

    சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் சனியை பார்த்தவாறு லிங்கத்தை கையில் வைத்தவாறு ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

    பாதாள ஆஞ்சநேயர்

    பீகார் மாநிலம் பாட்னாவிலும், குஜராத் மாநிலம் சாரன்பூரிலும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளது.

    குஜராத் மாநிலம் சூரத்தில் தபதி நதிக்கரையில் பாதாள ஆஞ்சநேயர் உள்ளார். பள்ளத்தில் இறங்கி சென்று தான் ஆஞ்சநேயரை தரிசிக்க முடியும்.

    விஜயவாடாவில் நரசிம்மர் மற்றும்ஆஞ்சநேயர்

    ஆந்திர மாநிலம் விஜயவாடா பஸ் நிலையத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் மங்களபுரி என்ற ஊர் உள்ளது.

    இங்கு மலை மேல் நரசிம்மர் கோவில் உள்ளது. நரசிம்மருக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் உள்ளார்.

    நரசிம்மருக்கு வாயில் பானகம் ஊற்றினால் அந்த பானகம் கீழே வந்து அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.

    தங்க ஆஞ்சநேயர்

    பெங்களூர் லட்சுமி லே அவுட் பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் கோபுரம் தங்கத் தகடுகளால் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆஞ்ச நேயருக்கு கிரேனில் ஏறி தான் பூசாரி அபிஷேகம் செய்வார்.

    • பீமனாலேயே அக்குரங்கின் வாலினை அப்புறப்படுத்த இயலவில்லை.
    • தேரில் பறக்கவிடப்பட்டிருந்த கொடியில் அனுமனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.

    ராமயணத்தைப் போல மகாபாரதத்தில் அனுமன் முக்கிய கதைப்பாத்திரம் இல்லை.

    ஆனால் பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கு ஒரு வகையில் அண்ணன் உறவு வருகிறது.

    பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும்போது, காட்டு வழியே பீமன் பயணிக்கும்போது, அங்கே வயோதிக குரங்கு ஒன்று படுத்துக்கொண்டிருக்க,

    அதன் வாலோ நீண்டு பீமன் நடந்து செல்லும் பாதையை அடைத்துக் கொண்டிருந்தது.

    பீமன் அதன் வாலை தள்ளி வைத்து விட்டு செல்லலாம் என எண்ணி, வாலைத் தூக்க யத்தனித்தான்.

    ஆனால் சிறந்த பலசாலி எனப்பெயர் பெற்ற பீமனாலேயே அக்குரங்கின் வாலினை அப்புறப்படுத்த இயலவில்லை.

    பின்னர் பீமன், அது சாதரணக் குரங்கில்லை என உணர்ந்து, அக்குரங்கிடம் மிகுந்த மரியாதையுடன் யாரென வினவிட, அனுமன் தான் யாரென்பதை பீமன் அறியச் செய்கிறார்.

    குருசேத்திரப் போரில், அர்ஜூனனின் தேரில் பறக்கவிடப்பட்டிருந்த கொடியில் அனுமனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.

    இது மானசீகமாக தேரின் பலத்தினைக் கூட்டியதாகச் சொல்வார்கள்.

    கண்ணன் போர்க்களத்தில் பகவத் கீதையினை அர்ஜூனனுக்கு உபதேசித்தபோது, அனுமனும் கொடி வழியாக கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

    போர் நிறைவடைந்தபின், அர்ஜூனனும், கண்ணனும் தேரில் இருந்து கீழே இறங்கியபின், கண்ணன் அனுமனிடம் இதுவரை தேரின் கொடியாக இருந்தமைக்கு நன்றி சொல்லிட,

    உடனே அனுமன் தன் உருவினைக் காட்டி, கண்ணனை வணங்கி விட்டு, கொடியில் இருந்து மறைந்து விடுகிறார்.

    அனுமன் மறைந்தவுடனேயே, தேர் எரிந்து சாம்பலாகி விடுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அர்ஜூனனைப் பார்த்து கண்ணன்,

    "அர்ஜூனா, இதுவரை போரினில், இத்தேரின் மேல் வீசப்பட்ட அனைத்து கொடிய பாணங்களையும் தாங்கி நின்றது என்றால், அதற்கு நானும் அனுமனும் இத்தேரினில் இருந்ததுவே காரணம்.

    இல்லாவிட்டால், இத்தேர் எப்போதோ அப்பாணங்களின் சக்தியினால் எரிந்து போயிருக்கும்" என்றார்.

    ×