search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srivilliputhur Andal temple"

    • வசந்த உற்சவம் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமேனியில் சந்தனம் பூசப்பட்டு மலர் ஆடை, மலர் கொண்டை அணிவிக்கப்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்குரிய வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த உற்சவம் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தை முன்னிட்டு தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வந்து நாடகசாலை தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    கோடைகாலம் என்பதால் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமேனியில் சந்தனம் பூசப்பட்டு மலர் ஆடை மற்றும் மலர் கொண்டை அணிவிக்கப்படுகிறது. மலர் ஆடை மற்றும் மலர் கொண்டை அணிந்து வசந்த மண்டபத்தில் காட்சி அளிக்கும் ஆண்டாள், ரெங்கமன்னாரை ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வசந்த உற்சவத்திற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தாமரை கோலம் அழிக்கப்பட்டதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். #LSPolls SrivilliputhurTemple
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புராணங்களை விளக்கக்கூடிய ஓவியங்கள் மற்றும் பல்வேறு வகையான பூக்கள் நுழைவு வாயில் மற்றும் உள் பிரகாரத்தில் வரையப்பட்டிருந்தது.

    அதில் தாமரைப்பூக்கள் பாரதிய ஜனதா கட்சியின் சின்னம் என கருதிய ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி அதனை அழிக்குமாறு கோவில் செயல் அலுவலரிடம் கூறி உள்ளார்.

    இதனைத்தொடர்ந்து கோவில் பணியாளர்கள் சுண்ணாம்பு கலவையால் தாமரை பூ சின்னத்தை அழித்தனர். அந்த இடத்தில் வேறு கோலம் வரையப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜ ஜீயர் கூறுகையில், தாமரை பூ ஓவியத்தை அழித்தது கண்டனத்துக்குரியது. தாமரை என்பது தாயாரின் அவதார பூ. கோவிலுக்குள் வந்து ஓவியங்களை அழிக்க தேர்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை. இந்த வி‌ஷயத்தில் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

    தாமரை கோலம் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் வேறு கோலம் வரையப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஓவியங்கள் அழிக்கப்பட்டது குறித்து விருதுநகர் கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சிவஞானத்திடம் கேட்டபோது, ஆண்டாள் கோவிலில் தாமரை பூ கோலம் அழிக்கப்பட்டது குறித்து விசாரித்து வருகிறோம்.

    கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்வதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் நிரந்தரமாக போடப்பட்ட பெயிண்ட் கோலத்தை அழித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    தாமரை சின்னம் தேர்தல் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் வரக்கூடும் என கோவில் நிர்வாகத்திடம் போலீஸ் டி.எஸ்.பி. அறிவுரைதான் கூறியுள்ளார். கோவில் நிர்வாகத்தினர்தான் கோலங்களை அழித்துள்ளனர். யாரும் கோவில் நிர்வாகத்திடம் வற்புறுத்தவில்லை. தாமரை பூ கோலம் அழிக்கப்பட்டதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றார். #LSPolls SrivilliputhurTemple
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பூமிப்பிராட்டியாம் ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூர நன்னாளை கொண்டாடும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர பெருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    12 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில், 9-ம் நாளான நேற்று தமிழ்நாட்டின் 2-வது பெரிய தேரான ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, அதிகாலை சாமிகளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று, தனித்தனி தோளுக்கினியான்களில் திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. தேரில் ஆண்டாள்-ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    காலை 7.20 மணிக்கு தேரோட்டத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா எம்.எல்.ஏ. வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேர் 4 ரத வீதிகளின் வழியே வந்து காலை 9.50 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்து ஆடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 2 புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு தேரினை தள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்டன.

    தேரில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள், ரெங்கமன்னார்.


    ஏராளமான பக்தர்கள் ரத வீதிகளில் திரண்டு தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தது.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    குற்றத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக நகரின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும் ‘ஹெலி கேமரா‘ மூலம் ரத வீதிகள் கண்காணிக்கப்பட்டன.

    தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். 
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் ‘ஆடிப்பூரம்‘ மிகவும் முக்கியமானதாகும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் ஆண்டாள்-ரங்க மன்னார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    8-ம் திருநாளான நேற்று ஆண்டாள் சூடிக் கொள்வதற்கான மங்கலப் பொருட்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வந்தடைந்தன.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ரேவதி நட்சத்திரத்தின் போதும், மதுரை கள்ளழகருக்கு சித்ரா பவுர்ணமியின் போதும் ஆண்டாள் சூடிக் கொடுத்த மங்கலப் பொருட்கள் அனுப்பப்பட்டு அவை சாமிகளுக்கு சாத்தப்படும். மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து வந்த மங்கலப் பொருட்கள் உற்சவருக்கு சாத்தப்பட்டு விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றன.

    9-ந் திருநாளான இன்று காலை ஆடிப்பூரத் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆசைந்தாடி வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வருகிற 16-ந் தேதி ஆண்டாள்-ரங்கமன்னார் திவ்ய தம்பதிக்கு புஷ்ப யாகத்துடன் விழா நிறைவடைகிறது.

    ஆண்டாள் கோவில் தேரோட்ட திருவிழாவையொட்டி 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆடிப்பூர விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நாகராஜன், தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
    ×