என் மலர்
நீங்கள் தேடியது "speedboat"
- குடும்பத்துடன் இத்தாலியின் அமல்ஃபி கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தார்
- இந்த மோதலில் ஏட்ரியன் படகிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டார்
ப்ளூம்ஸ்பரி பப்ளிஷிங் என்பது இங்கிலாந்தின் கேம்டன் பகுதியை மையமாக கொண்டு செயல்படும் ஒரு உலகளாவிய பதிப்பக நிறுவனம்.
இந்நிறுவனம் கதை மற்றும் கதை அல்லாத புத்தகங்களை பதிப்பிட்டு வெளியிடுவதில் உலக புகழ் பெற்றதாகும். இந்நிறுவனத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகளில் பதிப்பக கிளைகள் உண்டு.
இதன் ஒரு பதிப்பக அலுவலகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கிறது.
அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை நிர்வகித்து வந்தவர் இதன் தலைமை நிர்வாக அதிகாரி ஏட்ரியன் வாகன் எனும் 45 வயது பெண்மணி.
இவர் இத்தாலியின் அமல்ஃபி கடற்கரையில் தனது கணவர், 12 மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகளுடன் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு அவர் குடும்பத்தினருடன் ஒரு வாடகை வேகப்படகில் கடலில் பயணித்தார்.
அப்போது சற்று தொலைவில் ஒரு பெரிய படகு சுமார் 80 சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
திடீரென ஏட்ரியன் சென்ற படகு கட்டுப்பாட்டை இழந்து அந்த பெரிய படகின் மீது மோதியது.
இதில் ஏட்ரியன் படகிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டார். அப்போது பெரிய படகின் புரொபெல்லர் மீது மோதி அவர் படுகாயமடைந்தார்.
உடனடியாக கடலிலிருந்து அவர் மீட்கப்பட்டார். அவசரகால சிகிச்சை குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அவர்கள் வந்து பரிசோதித்து பார்த்த போது ஏட்ரியன் உயிரிழந்திருந்தார்.
இந்த மோதலில் ஏட்ரியனின் கணவர் மைக் வைட்டிற்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தைகளுக்கு காயங்கள் ஏதுமில்லை என்றாலும் இந்த கோர விபத்தை நேரில் கண்டதால் அவர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இத்தாலியின் புலனாய்வு துறையினர் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஏட்ரியன் உயிரிழப்பிற்கு ப்ளூம்ஸ்பரி பதிப்பகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
- கடற்படையின் விரைவுப்படகு கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
- விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை கடற்கரையில் படகு விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், சம்பந்தப்பட்ட கடற்படையின் படகு ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா அருகே நேற்று கடற்படையின் விரைவுப்படகு கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பாக இந்திய கடற்படை அறிக்கையின்படி, எலிஃபெண்டா தீவுகளில் இருந்து 110 பயணிகளை இந்தியா கேட்வேக்கு ஏற்றிச் சென்ற வேகப் படகு, கடலில் என்ஜின் சோதனையின் கீழ், இயங்கி வந்த கடற்படை விரைவுப் படகு இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இறந்தவர்களில் கடற்படை படகில் இருந்த இருவர் உட்பட 12 பொதுமக்கள் மற்றும் இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். படகில் இருந்த 99 பேர் மீட்கப்பட்டனர்.
மேலும், மாயமானவர்களை மீட்பதற்காக அப்பகுதியில் 11 கடற்படை படகுகள், மரைன் போலீசாரின் 3 படகுகள் மற்றும் கடலோர காவல்படையின் ஒரு படகு ஆகியவை தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த சகினாகாவைச் சேர்ந்த நதரம் சவுத்ரி என்கிற விபத்தில் உயிர் பிழைத்த நபரின் புகாரின் அடிப்படையில் கொலாபா போலீசார் கடற்படை படகின் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






