search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sp"

    காங்கிரஸ் கூட்டணிக்காக காத்திருக்க முடியாது, 4 மாநில தேர்தலை பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்துள்ளோம் என உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பரபப்பு பேட்டியளித்துள்ளார். #AkhileshYadav
    லக்னோ :

    மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில்  நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஸ் யாதவ் முன்னர் தெரிவித்திருந்தார்.

    ஆனால், இந்த 4 மாநிலங்களுடன் சேர்த்து தெலங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி , சமாஜ்வாதி கட்சியுடன் இன்னும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.

    இதனால், அதிருப்தியடைந்துள்ள அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கூட்டணிக்காக இனியும் காத்திருக்க முடியாது, 4 மாநில தேர்தலை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்திருப்பதாக இன்று பரபப்பு பேட்டியளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது :-

    தேர்தல் ஆணையம் நான்கு மாநில தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது, இன்னும் எத்தனை காலம் காங்கிரஸ் கூட்டணிக்காக நாங்கள் காத்திருக்க முடியும். வேட்புமனு தாக்கல் செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டுமா ?

    ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலை ஹிரா சிங் மார்க்கத்தின் கோத்வானா கண்ட்ரந்த்ரா கட்சியுடன் ஏற்கெனவே கூட்டணி அமைத்துள்ளோம். பகுஜன் சமாஜ் கட்சியுடன் கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    நிச்சயம் நல்ல முடிவெடுத்து 4 மாநில தேர்தலை பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க உள்ளோம். இதற்காக 2019-ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்த்தலில் காங்கிரஸ் உடன்  மெகா கூட்டணி இல்லை என்று அர்த்தம் இல்லை.

    சமாஜ்வாதி கட்சி எந்த கட்சியையும் அவமதிக்காது, பொதுத்தேர்தல் சமயத்தில் உத்திரப்பிரதேசத்தில் மெகா கூட்டணி அமைப்பது பற்றி அப்போது முடிவு செய்யப்படும்.

    மேலும், தேர்தல்களில் வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு பயன்படுத்த வேண்டும். அதற்காக சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தும் என தெரிவித்துள்ளார்.

    4 மாநில சட்டமன்ற தேர்தலிம் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என மாயாவதி ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், அகிலேஷ் யாதவும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது முக்கியத்திருப்பமாக பார்க்கப்படுகிறது. #AkhileshYadav
    பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியமைத்தால் எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் தெருக்களில் பக்கோடா விற்கும் நிலை ஏற்படும் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார். #AkhileshYadav
    லக்னோ :

    அடுத்து வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் பெரும்பானமையான தொகுதிகளில் வெற்றி பெறும் முயற்சியில் ஆளும் பாஜக ஈடுபட்டுள்ளது. இதற்காக ஆளும் பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை கட்டவிழ்த்து வருகிறது. அதற்கு பதிலடி தரும் விதமாக சமாஜ்வாதி கட்சியினர் பாஜகவிற்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள எடாவா மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த சைக்கில் பேரணி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார்.   அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடுத்த தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தால், எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் தெருக்களில் பக்கோடா விற்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

    பாஜவினர் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சுருத்தல்களை விடுத்து வருகின்றனர். அதில் இருந்து  ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சைக்கில் பேரணி நடத்தப்படுகிறது.

    வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் அதோடு நாட்டில் ஜனநாயகத்தின் கதை முடிந்துவிடும். உத்திரப்பிரதேச மக்கள் மிகவும் விழிப்புடன் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு பல்வேறு சதிகளை செய்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய பாஜகவிற்கு 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #AkhileshYadav
    பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியமைத்தால் எதிர்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் தெருக்களில் பக்கோடா விற்கும் நிலை ஏற்படும் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார். #AkhileshYadav
    லக்னோ :

    அடுத்து வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் பெரும்பானமையான தொகுதிகளில் வெற்றி பெறும் முயற்சியில் ஆளும் பாஜக ஈடுபட்டுள்ளது. இதற்காக பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை கட்டவிழ்த்து வருகிறது. அதற்கு பதிலடி தரும் விதமாக சமாஜ்வாதி கட்சியினர் பாஜகவிற்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள எடாவா மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த சைக்கில் பேரணி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார்.   அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடுத்த தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தால், எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் தெருக்களில் பக்கோடா விற்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

    பாஜவினர் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர். அதில் இருந்து  ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சைக்கில் பேரணி நடத்தப்படுகிறது.

    வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் அதோடு நாட்டில் ஜனநாயகத்தின் கதை முடிந்துவிடும். உத்தரப்பிரதேச மக்கள் மிகவும் விழிப்புடன் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு பல்வேறு சதிகளை செய்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய பாஜகவிற்கு 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #AkhileshYadav
    பெண்களுக்கெதிரான குற்ற வழக்குகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கூடுதல் ஏ.டி.எஸ்.பி.க்கள் டி.எஸ்.பி.க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறை அல்லாத இதர பிரிவுகளை சேர்ந்த சமூக நலத்துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு மருத்துவமனை அதிகாரிகள். சிறைத்துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட அளவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும், சாலை விபத்துக்கள் நடைபெறாமல் எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும், அறிவுரை வழங்கப்பட்டது. பெண்களுக்கெதிரான குற்ற வழக்குகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

    காணாமல் போன சிறுவர், சிறுமியர்களை விரைந்து கண்டுபிடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள பிடி கட்டளைகளை நிறைவேற்ற தணிகுழு அமைக்க வேண்டும். பற்றியும், ஒவ்வொரு கிராமத் திலும் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களை உரிய மரியாதையுடன் வரவேற்று அவர்களது கோரிக்கைகளை பரிசீலித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு சூப்பிரண்டு பர்வேஷ்குமார் உத்தரவிட்டார். #tamilnews
    ×