search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.பி"

    • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவரிடம் எஸ்.பி. விசாரணை செய்தார்.
    • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவரிடம் எஸ்.பி. விசாரணை செய்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவா் ரவி. இவரிடம் புதன்சந்தையைச் சோ்ந்த பெண் ஒருவா் கடந்த திங்கள்கிழமை கைப்பேசியில் பேசினாா். அந்தப் பெண் பாலியல் ரீதியில் பேசியபோதும் அதைக் கேட்ட ரவி, காவலா் என்ற முறையில் அந்தப் பெண்ணைக் கண்டிக்காமல், அவருக்கு துணைபோகும் விதத்தில் பேசியுள்ளாா்.

    இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி, சம்பந்தப்பட்ட தனிப்பிரிவு காவலா் ரவியை அழைத்து நேரில் விசாரணை நடத்தினாா். இச்சம்பவம் தொடா்பாக எஸ்.பி.யிடம் கேட்டபோது, ஆடியோவில் பேசிய பெண் யாா்? அவா் எதற்காக பேசினாா்? தனிப்பிரிவு காவலருக்கும், அவருக்கும் தொடா்பு என்ன குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.  

    ×