என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Siva"
- சிவத்தலங்களில் பாடல் பெற்ற முதல் தலம் இந்த தலம்தான்.
- இதன்மூலம் இந்த தலமே தமிழ்நாட்டின் முதல் சிவாலயம் என்பதை உறுதிபடுத்துகிறது.
தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான சிவாலயங்கள் இருக்கின்றன.
இவற்றில் 276 தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பை பெற்றவை.
இந்த பழம்பெரும் சிவத்தலங்களில் மகத்துவமும் தனித்துவமும் நிறைந்தது உத்தரகோசமங்கை எனும் திருத்தலமாகும்.
இந்த திருத்தலம் ராமநாதபுரத்துக்கு மிக, மிக அருகில் உள்ளது.
சிவத்தலங்களில் பாடல் பெற்ற முதல் தலம் இந்த தலம்தான்.
இதன்மூலம் இந்த தலமே தமிழ்நாட்டின் முதல் சிவாலயம் என்பதை உறுதிபடுத்துகிறது.
சமயக்குறவர்களில் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் தம் வாழ்நாளில் பெரும்பகுதியை இத்தலத்தில் கழித்தார்.
அவர் தன் பாடலில், "சிவன் உண்பதும், உறங்குவதும் உத்தரகோசமங்கை தலத்தில்தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தை பார்வதி தேவிக்கு சிவபெருமான் இத்தலத்தில் வைத்துதான் ரகசியமாக சொல்லி கொடுத்தார் என்பார்கள்.
அதுபோல பார்வதிக்கு நாட்டியக்கலையை ஈசன் இங்கு ரகசியமாக சொல்லிக் கொடுத்தார் என்பார்கள்.
'மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது' என்பார்கள்.
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோவில் இது என்று கூறப்படுகிறது.
ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது என்பதில் இருந்தே, இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.
சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். அதனால் இந்த ஊருக்கு "உத்தரகோசமங்கை" என்ற பெயர் தோன்றியது என்று சொல்கிறார்கள்.
அதாவது உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை.
மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது என்கிறார்கள்.
ஆனால் இத்தல பெயர் விளக்கத்துக்கு வேறொன்றும் சொல்லப்படுகிறது. உத்திரம் என்றால் உபதேசம்.
கோசம் என்றால் ரகசியம். மங்கை என்றால் பார்வதி என்று பொருள்.
பார்வதிதேவிக்கு ஈசன் ரகசியமாக வேதத்தை உபதேசம் செய்த இடம் என்ற அர்த்தத்தில் இத்தலம் உத்தரகோச மங்கை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது என்கிறார்கள்.
இத்தல மூலவர் 'மங்களநாதர்' சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.
அந்த இலந்தை மரமே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக விளங்குகிறது.
மங்கள நாதரின் உடனுறை அம்பிகையின் திருநாமம் மங்களேஸ்வரி என்பதாகும்.
மாணிக்கவாசகர் இத் தலத்தில் சிவலிங்க வடிவிலும், நின்ற கோலத்திலும் காட்சி தருகிறார்.
'நீத்தல் விண்ணப்பம்' என்னும் திருவாசகப் பகுதி இத்தலத்தில் பாடப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார் மாணிக்கவாசகர்.
உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி.
இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.
பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள்.
அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள்.
மேலும் ராவணன் மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.
- ஈசன் ஆடிய திருநடனத்தை ஈசன் கண்டுகளித்த இடம்தான் ஆதிசிதம்பரம் என்ற உத்திரகோச மங்கையாகும்.
- அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது சித்திரை பவுர்ணமி நிலவைப் போன்று பளிச்சிட்டது.
ஒரு தடவை திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணு திடீரென மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கினார்.
அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது சித்திரை பவுர்ணமி நிலவைப் போன்று பளிச்சிட்டது.
பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று சிவன் கேட்டார்.
அதற்கு மகாவிஷ்ணு உத்தரகோசமங்கை திருவாதிரை நாளன்று ஆடிய தங்களுடைய திருத்தாண்டவமே எனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார்.
இதைக்கேட்டதும் திருமாலையே மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த அந்த நாட்டியத்தை, தான் ஆடிய நாட்டியத்தை தானே பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆசை சிவபெருமானுக்கு ஏற்பட்டது.
எனவே ஈசன் பாதி மார்புக்குமேல் மனிதராகவும், மார்புக்குக் கீழ் பாதி பாம்பாகவும் மாறி பதஞ்சலி முனிவர் ஆனார்.
ஈசன் ஆடிய திருநடனத்தை ஈசன் கண்டுகளித்த இடம்தான் ஆதிசிதம்பரம் என்ற உத்திரகோச மங்கையாகும்.
சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார். அவற்றுள் 18 நடனங்கள் ஈசன் தனியாக ஆடியதாகும். ஈஸ்வரியுடன் ஆடியது 36, விஷ்ணுவுடன் ஆடியது 9, முருகப்பெருமானுக்காக ஆடியது 3, தேவர்களுக்காக ஆடியது 42ம் ஆகும்.
- இந்த மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியன வரும்.
- இந்தத் திருவாதிரை நட்சத்திரமே சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும்.
மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கான மாதம்.
இந்த மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியன வரும்.
இதில் ஆருத்ரா தரிசனம் எனப்படும் திருவாதிரைத் திருவிழா அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பாக நடைபெறும்.
அதிலும் குறிப்பாக சிதம்பரத்தில் இந்தத் திருவிழா பிரம்மோற்சவமாக நடைபெறும்.
ஆருத்ரா என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயர்.
தமிழில் ஆதிரை, அல்லது திருவாதிரை என்று அழைக்கப்படும் நட்சத்திரமே சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என்று அழைக்கப்படுகிறது.
'ஆருத்ரா' என்ற சொல்லுக்கு 'ஈரமான', 'இளகிய', 'புத்தம் புதிய', 'பசுமையான' என்ற பல அர்த்தங்கள் உண்டு என்கிறார்கள்.
இந்தத் திருவாதிரை நட்சத்திரமே சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும்.
அந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள்.
அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விரத நாள்.
இந்த நாளில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.
இந்நாளில் நாம் காணும் சிதம்பரம் நடராஜரின் அற்புதமான நடனத் திருக் காட்சியே ஆருத்ரா தரிசனம் என்று போற்றப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் பெண்கள் விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதை மையமாகக் கொண்டு பெண்கள் சிலர் திருவாதிரை விரதம் எடுத்து தங்கள் தாலியினை மாற்றிக் கொண்டு சிவபெருமானை வழிபட்டு தங்களின் கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வர்.
- சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜருக்கு பிரசாதமாக கற்கண்டு சாதம் படைக்கப்படுகிறது.
- சித்சபையில் உள்ள நடராஜமூர்த்தியின் வலது பக்கசுவரில் உள்ள மந்திரசக்தியாக உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜருக்கு பிரசாதமாக கற்கண்டு சாதம் படைக்கப்படுகிறது.
கற்கண்டு, நெய், முந்திரியில் செய்யப்படும் இச்சாதம் மிகவும் ருசியாக இருக்கும்.
அதுபோன்று சம்பா சாதம், எண்ணை கொஸ்து மற்றொரு பிரசாதமாக படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவையல்லாமல் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவாதிரைக்களி நடராஜருக்கு படைத்து விநியோகிக்கப்படும்.
சித்சபையில் உள்ள நடராஜமூர்த்தியின் வலது பக்கசுவரில் உள்ள மந்திரசக்தியாக உள்ளது.
இது இறைவனின் 3 நிலைகளில் ஒன்றான அருவ நிலையைக் குறிக்கும்.
இத்தலம் பஞ்சபூதங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்குவதால் இறைவனை மந்திர வடிவமாக யந்திரமாக நிறுவியுள்ளனர்.
இங்குள்ள யந்திரத்தை திருவரும் பலச்சக்கரம் என்றும் சிவசக்தி சம்மேளனச் சக்கரம் என்றும் குறிப்பிடுவார்கள்.
இதற்கு ஆண்டுக்கு ஒருமுறை புணுகு சாத்துவார்கள்.
இதன்மீது தங்க வில்வ மாலை தொங்கவிடப்பட்டுள்ளது.
இதன் மீது தொங்கும் திரை வெளிப்புறம் கருப்பும், உட்புறம் சிவப்பும் கொண்டதாக உள்ளது.
மறைப்பு சக்தியே அருட்சக்தியாக மாறி உதவும் என்பதை விளக்குகிறது.
- நேராக சிவனை தரிசித்து, அம்பாளை தரிசித்து விட்டு வெளியேறுதல் முழுமையான தல தரிசனம் ஆகாது.
- இத்தல நாயகன் நடராஜன் ஆடல் வல்லானாய் இருப்பதால் கூத்தன் கோவில் என்ற திருநாமமும் உண்டு.
கோவில்களில் உள்ள அனைத்துச் சன்னதிகளையும் தரிசித்து, பின்னர் அம்பாளை தரிசித்து, கடைசியாகத்தான் மூலவர் சிவனை தரிசிக்க வேண்டும்.
நேராக சிவனை தரிசித்து, அம்பாளை தரிசித்து விட்டு வெளியேறுதல் முழுமையான தல தரிசனம் ஆகாது.
எனவே இத்திரு கோவில்களில் உள்ள நவகிரக சன்னதி, பதஞ்சலி சன்னதி, கம்பத்து இளையனார் சன்னதி ஆகிய சன்னதிகளை வணங்க வேண்டும்.
திருக்கோவில் சிறப்பு தங்களது பக்தியால் அறுபத்து மூவர் என்று சிறப்பு பெற்றவர்களுள், முக்கியமானவர்கள் நால்வர்.
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரே அந்நால்வர்-என்பது சிவனடியார்களுக்குத் தெரிந்ததுதான்.
இவர்கள் நால்வரும் இத்திருத்தல நாயகன் திருமூல நாதர் மீதும், உமையாம்பிகை மீதும் தேவாரப் பாடல்கள் பாடியுள்ளனர்.
இத்தல நாயகன் நடராஜன் ஆடல் வல்லானாய் இருப்பதால் கூத்தன் கோவில் என்ற திருநாமமும் உண்டு.
தில்லை மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் தில்லை கூத்தன் கோவில் என்றும் அழைக்கப்படும்.
சித் என்ற ஞானத்தையும், அம்பரம் என்ற ஆகாயத்தையும் குறிப்பதால் சிதம்பரம்.
அதனால் சிதம்பரம் தில்லை கூத்தன் கோவில் என்றே அழைக்கப்படுகிறது.
சிதம்பரம் என்ற பெயரே வழக்கில் இருந்தாலும் புலிக்கால் முனிவர் வியாக்கிரபாதர் பூசை செய்த காலத்தில் புலியூர் என்றும் இதுவே பூலோகக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
- விநாயகர் சிந்தனை கூர்மையைக் கொடுத்து இறைவன் பால் பக்தியை அதிகரிக்கச் செய்பவர்.
- எனவே அவர் பொள்ளாப்பிள்ளையார் எனக் கூறுவதே சரியானது.
சிவன் கோவில் என்றாலே விநாயகரை வணங்கி கோவிலின் உள்ளே செல்வது வழக்கம்.
விநாயகர் சிந்தனை கூர்மையைக் கொடுத்து இறைவன் பால் பக்தியை அதிகரிக்கச் செய்பவர்.
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட விநாயகர் பல திருப்பெயர்கள் தாங்கி சிதம்பரம் கோவிலில் காணக்கிடைக்கிறார்.
முக்குறுணி விநாயகர், திருமுறை காட்டிய விநாயகர், பொல்லாப் பிள்ளையார், வல்லப கணபதி, மோகன கணபதி, கற்பக விநாயகர், நர்த்தன விநாயகர், திருமூல விநாயகர் ஆகியோர் தனிச் சன்னதி கொண்டு அவர்கள் திருநாமத்திற்கு ஏற்ப பலன்களை வழங்குகிறார் என்பது நம்பிக்கை.
சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறை சுவடிகள் இருப்பதை இங்குள்ள பொல்லாப் பிள்ளையார் காட்டிக் கொடுத்ததாகக் கூறுவர்.
பொல்லாப் பிள்ளையார் என்பது மிகப் பொல்லாதவன் என்ற அர்த்தத்தை தராது. பொள்ளா என்றால் உளியால் பொள்ளப்படாதவர், சுயம்பு என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.
எனவே அவர் பொள்ளாப்பிள்ளையார் எனக் கூறுவதே சரியானது.
அத்திருப்பெயர் மருவி பொல்லாப் பிள்ளையார் ஆகிவிட்டது.
- சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர்.
- சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும்.
பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த விஷ்ணு, சிவனின் தாருகாவனத்து சிவத் தாண்டவத்தை நினைத்து ஒருநாள் மகிழ்ந்திருந்தார்.
விஷ்ணுவின் மகிழ்ச்சியை கவனித்த ஆதிசேஷன் என்னவென்று விசாரிக்க, அந்த அற்புதத்தை விஷ்ணு விவரிக்க, அதைக்கேட்ட, ஆதிசேஷனுக்கும் அந்த நடனத்தை காண ஆவல் ஏற்பட்டு, இடுப்புக்கு மேலான உடல் மனிதனாகவும், இடுப்புக்கு கீழான உடல் பாம்பாகவும் மாறி, பதஞ்சலி என்ற பெயர் கொண்டு பூலோகம் வந்து கடும் தவம் செய்தார்.
தவத்தை மெச்சிய சிவன், பதஞ்சலி உன்னைப் போன்றே வியாக்ரபாதனும் என் ஆடலைக் காண ஆவல் கொண்டுள்ளான்.
நீங்கள் இருவரும் தில்லைவனம் என்ற சிதம்பரத்திற்கு வாருங்கள் அங்கே உங்கள் ஆவல் நிறைவேறும் என்றுக்கூறி மறைந்தார்.
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நான்னாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார்.
அந்த ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதனும் சிலையாக வடித்தனர்.
கைலாயத்தில் இருப்பதாலும், கங்கை, சந்திரனை சடாமுடியில் சூடி இருப்பதால் சிவப்பெருமான் குளிர்ச்சி பிரியர்.
அதனால்தான் அவரை குளிர்விக்க 32 பொருட்களால் அபிசேகம் செய்விப்பர்.
அடர்பனிக்காலமான மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் மேலும் அவரை குளிர்விக்கும் பொருட்டு அதிகாலையிலேயே எல்லா சிவன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும்.
சிவன் ஆடிய நடனங்கள் மொத்தமும் 108.
இதில் அவர் தனியாய் நடனம் புரிந்தது மொத்தமும் 48.
ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன.
மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன.
இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை.
மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும்.
ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
இதில் முக்கியமானதுதான் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆடிய, ஆனந்த தாண்டவ நடனம்.
இந்த ஆனந்த தாண்டவ தரிசனத்தை காண்பது பெரும் பேறாகும்.
சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர்.
அதனாலதான், சிதம்பரத்தை தரிசித்தா முக்தின்னு சொல்றாங்க.
அதுக்காக, கோவிலுக்கு போய் சும்மா நின்னு கும்பிட்டு வரக்கூடாது, உள்ளன்போடு, கிட்டத்தட்ட, நம்மோட ஆன்மாவை பார்வதி தேவியாக்கி இறைவனை வழிப்படனும்.
அப்பொழுதுதான் முக்தி கிடைக்கும்.
இந்நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூசி சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்கனும்.
காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையை பார்க்கணும்.
சுவாமிக்கு திருவாதிரை களியோடு, ஏழு வகை கறிகாய்களை சமைத்து நிவேதானம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கணும்.
ஆருத்ரா தரிசன நாளன்று பகலில் சாப்பிடக்கூடாது.
சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும்.
இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.
இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று செய்யலாம்.
இப்படி ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்கிறது பெரிய புராணம்.
- சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’.
- இந்த படத்தின் பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் புதிய அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
கங்குவா போஸ்டர்
அதன்படி, 'கங்குவா' படத்தில் பாபி தியோலின் 'உதிரன்' கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. பாபி தியோல் சமீபத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'அனிமல்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ruthless. Powerful. Unforgettable?️
— Studio Green (@StudioGreen2) January 27, 2024
Happy Birthday to our #Udhiran, #BobbyDeol sir✨ #Kanguva ? #HBDBobbyDeol @thedeol@Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @GnanavelrajaKe @UV_Creations @KvnProductions @PenMovies @NehaGnanavel @saregamasouth pic.twitter.com/wMms4HzOqP
- சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’.
- இப்படத்தினை சிவா இயக்கியுள்ளார்.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
கங்குவா போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, கங்குவாவின் வலிமைமிக்க 'உதிரன்' நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. கையில் ரத்தத்தில் நனைந்த தங்க காசுகள் உள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
The mighty #Udhiran of Kanguva will be revealed tomorrow at 11 am?
— Studio Green (@StudioGreen2) January 26, 2024
Stay Thrilled! #Kanguva ?@Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @GnanavelrajaKe @UV_Creations @KvnProductions @NehaGnanavel @saregamasouth pic.twitter.com/gJuNNQpGrl
- சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் நடிகர் சூர்யா 'கங்குவா' திரைப்படத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்ததாக அறிவித்திருந்தார்.
கங்குவா போஸ்டர்
இதைத்தொடர்ந்து 'கங்குவா' படத்தின் புதிய போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் சூர்யா இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- கங்குவா படம் பல மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.
- கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் "கங்குவா" படம் பத்து மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இதில் நடிகர் சூர்யா, திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் 3டி முறையில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கங்குவா படத்தில் தனக்கான காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்டு விட்டதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் அக்கவுன்டில் படப்பிடிப்பு குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், "கங்குவா படத்திற்காக எனது கடைசி ஷாட்டில் நடித்து முடித்தேன். படக்குழுவினர் அனைவரிடமும் நல்ல எண்ணங்களே நிரம்பி இருந்தது. இது ஒன்றின் நிறைவு, ஆனால் பலவற்றுக்கான துவக்கமும் கூட. இயக்குனர் சிவா மற்றும் குழுவினருக்கு எனது நன்றிகள்."
"கங்குவா மிகப்பெரிய படம், அது எனக்கு மிகவும் விசேஷமானது. இதை நீங்கள் பெரிய திரையில் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியவில்லை," என குறிப்பிட்டுள்ளார்.
My last shot done for kanguva! An entire unit filled with positivity! It's a finishing of one and beginning of many..! Thank you dearest @directorsiva and team for all the memories! #Kanguva is huge n special can't wait for you all to see it on screen! #Family #Missing pic.twitter.com/C7WmX2B2In
— Suriya Sivakumar (@Suriya_offl) January 10, 2024
- எதிர்க்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
- ரூ.1 ¾ லட்சத்திற்கான காசோலையையும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா அந்தந்த கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
புதுச்சேரி:
வில்லியனூர ஜி.என்.பாளையம் பேட் ஸ்ரீ குழந்தைமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனையொட்டி கோவிலில் திருப்பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. எதிர்க்கட்சி தலைவருமான சிவா திருப்பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வில்லியனூர் தொகுதியில் உள்ள கொம்பாக்கம் குப்பம்பேட் மாரியம்மன் கோவில், ஓட்டம் பாளையம் முனீஸ்வரர் கோவில், முத்துப்பிள்ளை பாளையம் ஸ்ரீ கழுத்து முத்துமாரியம்மன் கோவில், எஸ்.எஸ்நகர் தேசபக்தி முத்து மாரியம்மன் கோவில் ஒரு கால பூஜைக்கு அரசின் இந்து அறநிலையத்துறை மூலம் தலா ரூ.20 ஆயிரம் விதம் 4 கோவில்களுக்கு ரூ.80 ஆயிரம் காசோலையும், உத்திரவாகினிபேட் பெரிய பாளையத்தம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.1 ¾ லட்சத்திற்கான காசோலையையும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா அந்தந்த கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, தர்மராஜன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்