search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நடராஜர் கோவில் பிரசாதம்
    X

    நடராஜர் கோவில் பிரசாதம்

    • சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜருக்கு பிரசாதமாக கற்கண்டு சாதம் படைக்கப்படுகிறது.
    • சித்சபையில் உள்ள நடராஜமூர்த்தியின் வலது பக்கசுவரில் உள்ள மந்திரசக்தியாக உள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜருக்கு பிரசாதமாக கற்கண்டு சாதம் படைக்கப்படுகிறது.

    கற்கண்டு, நெய், முந்திரியில் செய்யப்படும் இச்சாதம் மிகவும் ருசியாக இருக்கும்.

    அதுபோன்று சம்பா சாதம், எண்ணை கொஸ்து மற்றொரு பிரசாதமாக படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இவையல்லாமல் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவாதிரைக்களி நடராஜருக்கு படைத்து விநியோகிக்கப்படும்.

    சித்சபையில் உள்ள நடராஜமூர்த்தியின் வலது பக்கசுவரில் உள்ள மந்திரசக்தியாக உள்ளது.

    இது இறைவனின் 3 நிலைகளில் ஒன்றான அருவ நிலையைக் குறிக்கும்.

    இத்தலம் பஞ்சபூதங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்குவதால் இறைவனை மந்திர வடிவமாக யந்திரமாக நிறுவியுள்ளனர்.

    இங்குள்ள யந்திரத்தை திருவரும் பலச்சக்கரம் என்றும் சிவசக்தி சம்மேளனச் சக்கரம் என்றும் குறிப்பிடுவார்கள்.

    இதற்கு ஆண்டுக்கு ஒருமுறை புணுகு சாத்துவார்கள்.

    இதன்மீது தங்க வில்வ மாலை தொங்கவிடப்பட்டுள்ளது.

    இதன் மீது தொங்கும் திரை வெளிப்புறம் கருப்பும், உட்புறம் சிவப்பும் கொண்டதாக உள்ளது.

    மறைப்பு சக்தியே அருட்சக்தியாக மாறி உதவும் என்பதை விளக்குகிறது.

    Next Story
    ×