என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » shruti haasan
நீங்கள் தேடியது "Shruti Haasan"
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதி ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.
`லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
#Laabam 1st Schedule Successfully Wrapped Up, We thanking Wholeheartedly Madurai-Rajapallayam-Kuttralam Makkals for the genuine support 🥰 Gearing up for the 2nd schedule 💪@VijaySethuOffl@shrutihaasan@Aaru_Dir@immancomposer#SpJahananathan@proyuvraaj@sathishofflpic.twitter.com/olCVYsMG1s
— 7Cs Entertaintment (@7CsPvtPte) May 13, 2019
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ராஜபாளையத்தில் துவங்கிய நிலையில் மதுரை, குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
நடிகை ஸ்ருதிஹாசனுக்கும் லண்டனை சேர்ந்த மைக்கேலுக்கும் இடையேயான காதல் முறிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #ShrutiHaasan
தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ஸ்ருதிஹாசன். இவருக்கும், லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல்லுக்கும் காதல் மலர்ந்தது. லண்டனில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சந்தித்து காதல் வயப்பட்டனர்.
இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர். மைக்கேலை இந்தியாவுக்கு அழைத்து வந்து தந்தை கமல்ஹாசன், தாய் சரிகா ஆகியோரிடம் ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தினார். திருமண நிகழ்ச்சியொன்றில் மைக்கேல் பட்டு வேட்டியும் ஸ்ருதிஹாசன் பட்டு சேலையும் அணிந்து கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி நெருக்கத்தை உறுதிப்படுத்தின.
ஸ்ருதிஹாசன் சில வருடங்களாக புதிய படங்களில் நடிக்கவில்லை. எனவே இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் - மைக்கேல் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த மைக்கேல் புகைப்படங்களை நீக்கி மீண்டும் புதிய அத்தியாயத்தை தொடங்குவதாக பதிவிட்டுள்ளார். மைக்கேலும் டுவிட்டரில் காதல் முறிந்ததை உறுதிப்படுத்தி உள்ளார். நாங்கள் தனித்தனி பாதையில் பயணிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தற்போது பவர் படத்தின் மூலம் கேங்ஸ்டராக களமிறங்க இருக்கிறார். #ShrutiHaasan #Power
ஸ்ருதிஹாசன் சிங்கம்-3 படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி விட்டு விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடிக்கிறார். துப்பாக்கி, அஞ்சான் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இந்தி நடிகர் வித்யூத் ஜம்வால் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.
முதன் முறையாக நடிகை ஸ்ருதி ஹாசனும் வித்யூத் ஜம்வாலும் இணையும் இந்த இந்தி படத்திற்கு பவர் என தலைப்பிடப்பட்டுள்ளது. மகேஷ் மஞ்சரேக்கர் இப்படத்தை இயக்குகிறார். முழுக்க மும்பையை மையப்படுத்திய தாதா கதையாக உருவாகிவரும் இப்படத்தில், வித்யூத் ஜம்வால் தலைமறைவு தாதாவாக இருக்கும் தன் அப்பாவின் இடத்தைக் கைப்பற்றப் போராடும் தாதாவாக நடிக்கிறார்.
அவரது ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாசனும் படத்தில் கேங்க்ஸ்டராக நடிக்கிறார். 1972ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் கிளாசிக் படமான காட்பாதர் திரைப்படத்திற்கு சமர்ப்பணமாக உருவாகிவரும் இப்படம் வரும் ஜூலை 12ந்தேதி ரிலீசாக இருக்கிறது.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்திற்கு லாபம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #LaabamShootKickStarts
நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.
`லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
It's cloud nine moment for us! Extremely happy to be associated with a team of amazing powerhouses @VijaySethuOffl@shrutihaasan. Get ready for a gripping, unconventional and untold story from Director #SPJhananathan#LaabamShootKickStarts 😊😊😊 pic.twitter.com/iJrSB0zzSS
— 7Cs Entertaintment (@7CsPvtPte) April 22, 2019
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையோடு இன்று ராஜபாளையத்தில் துவங்கியது. அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
`புறம்போக்கு' படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் - விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LaabamShootKickStarts #VijaySethupathi #ShrutiHaasan
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ருதி ஹாசன், சிறு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். #ShrutiHaasan
ஸ்ருதி ஹாசன் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பில் நுழைய முடிவு செய்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் லண்டன் காதலன் மைக்கேல் கோர்சேலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடுவார் என்று கூட பரபரப்பு எழுந்தது. ஆனால் அந்த செய்தியை மறுத்துள்ளார். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போது நினைக்கிறேனோ அப்போது திருமணம் செய்துகொள்வேன் என திருமணம் பற்றிய முடிவை தெரிவித்திருக்கிறார்.
ஸ்ருதிக்கு மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணமிருப்பதால் புதுப்படங்களை ஒப்புக்கொள்ள விருக்கிறார். விரைவில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளேன். எனது தந்தை கமல்ஹாசன் கட்சியில் சேர்வீர்களா என்கிறார்கள். அரசியலில் எனக்கு இப்போதைக்கு ஆர்வம் இல்லை. ஆனால் எனது தந்தை மக்கள் வாழ்வு வளம் பெறுவதற்காக தனது கடினமான உழைப்பை தொடர்ந்து தருவார்’ என்றார்.
எனது அப்பா என்பதால் ஓட்டு இல்லை என்று கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். #Kamalhaasan #ShrutiHaasan
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தொடங்கி முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார். அவரது மகளான நடிகை ஸ்ருதி ஹாசன் தனது டுவிட்டர் பதிவில், “உங்களை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது அப்பா. மேம்பட்ட எதிர்காலத்துக்காக, சமுதாயத்துக்காக உங்களிடம் ஒரு பார்வை இருக்கிறது.
அதை உங்கள் முயற்சி, ஆர்வம், உண்மை மூலமாக கண்டுள்ளீர்கள். உங்களுக்கும், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த அனைவருக்கும், உங்கள் டார்ச்லைட் மூலம் ஒரு பிரகாசமான எதிர்காலம் வர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்த பதிவுக்கு டுவிட்டரில் ஸ்ருதிஹாசனை பின்தொடர்பவர் ஒருவர், “எனது ஓட்டு உங்களுக்குத் தான் எப்படி சொல்லலாம். உறவு என்பதைத் தாண்டி, எந்த வேட்பாளர் சரியானவர் என தேர்வு செய்ய வேண்டும். அது உங்களுடைய அப்பாவாக இருந்தாலும்” என்று கேள்வி எழுப்பினார்.
Precisely he has my vote not because he’s my father but because he works toward change https://t.co/GWLodmxpSP
— shruti haasan (@shrutihaasan) April 13, 2019
அதற்கு ஸ்ருதிஹாசன் பதிலளிக்கும் விதமாக, “சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவர் எனது அப்பா என்பதால் ஓட்டு இல்லை. அவர் மாற்றத்துக்காக வேலை செய்கிறார் என்பதாலேயே என் வாக்கு” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார். #Shrutihaasan #Kamalhaasan
ஸ்ருதிஹாசன் 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் விலகி இருக்கிறார். இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-
“நான் இங்கிலாந்தில் ஒரு இசை ஆல்பம் தயார் செய்யும் வேலையில் இருக்கிறேன். பாடலை நானே எழுதுகிறேன். சினிமாவில்தான் நடிக்கவில்லையே தவிர ஓய்வு எடுக்கவில்லை. இசை பணிகள் முடிந்ததும் மீண்டும் நடிப்பேன். தமிழ் படமொன்றில் நடிக்க இருக்கிறேன்.
இந்தி படமொன்றுக்கும் ஒப்பந்தமாகி உள்ளேன். 10 வருடங்கள் நடித்து விட்டேன். கதாநாயகி போட்டியில் பின் தங்கிவிடுவேன் என்ற பயம் இல்லை. இசை ஆல்பம் வேலைகளை ஆரம்பித்ததால் நடிப்பதை தள்ளி வைத்து இருக்கிறேன்.
எனது தந்தை கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகு எனக்கும் அந்த பக்கம் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இதுவரை நம்மை சுற்றி நடப்பதை கவனிக்காமல் காலம் போய்விட்டது. இப்போது ஆழமாக எல்லாம் பார்க்கிறேன். நாடாளுமன்றம் என்றால் என்ன? ராஜ்யசபை எல்லாம் தெரிந்துகொள்கிறேன். அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன். ஆனால் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு எனக்கு அனுபவமும், முதிர்ச்சியும் இல்லை. ஆனால் எனது தந்தை மாதிரி ஆட்கள் அரசியலுக்கு வருவது மிகவும் தேவை. அவருக்கு சமூக பிரச்சினைகளில் நல்ல தெளிவு இருக்கிறது. இளைஞர்கள், பெரியவர்களாக இருந்தாலும் சரி ஒரு புதிய மாற்றத்துக்காக ஓட்டுப்போட வேண்டும் என்பது எனது கருத்து.
இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சுருதி ஹாசன் சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நிலையில், தனது நீண்ட நாள் எண்ணம் பலித்துவிட்டதாக கூறியுள்ளார். #ShrutiHaasan
நடிகை சுருதிஹாசன் தமிழில், சிங்கம் 3 படத்தில் நடித்த பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனாலும் இணையதளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.
சமீபத்தில் அவர் ஏதோ ஒரு விஷயத்தை மறைத்து மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்தார். ‘என்னைப் பொறுத்தவரை அது நடந்துவிட்டது. என்ன நடக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தேனோ கடைசியாக உண்மையாகி விட்டது. தற்போதைக்கு நான் சந்தோஷமாக இருக்கிறேன். எல்லா நலன்களையும் இறைவன் எனக்கு அருளி இருக்கிறான்’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவில் சுருதி எதைப்பற்றி கூறுகிறார் என்பது பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. அவரே அதற்கு விடை கூறினால் தான் சுருதியின் சந்தோஷத்திற்கான காரணம் தெரியவரும். #ShrutiHaasan
வேலூர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மாணவர்கள் கேள்விக்கு பதிலளித்த சுருதிஹாசன் தான் சந்தித்ததில் மிகவும் பண்பான நடிகர் அஜித் தான் என்று கூறினார். #ShrutiHaasan #AjithKumar
வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ‘ரிவேரா 2019’ என்ற கலைநிகழ்ச்சியின் நிறைவு விழாவிற்கு வருகை தந்த நடிகை சுருதிஹாசன், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு மிக பொறுமையாக பதில் கூறினார். தனக்கு மிகவும் பிடித்த படம் ‘மகாநதி’ என்றும், சிறந்த நடிகர் ‘கமல்ஹாசன்’ என்றும் கூறினார். மேலும் தான் நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆகிய பணிகளில் ஈடுபடுவதைக் காட்டிலும் ‘என்டர்டெயினராக’ இருப்பதையே பெரிதும் விரும்புவதாக அவர் கூறினார்.
‘நீங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய படங்களில் நடிக்கும்போது, எந்த படஉலகம் உங்களுக்கு சிறந்ததாகவும், இலகுவாகவும் இருக்கிறது?’ என்று மாணவர்கள் கேட்டதற்கு, தனக்கு ‘தெலுங்கு, தமிழ், இந்தி என எந்தத் துறையாக இருந்தாலும் எந்த படமாக இருந்தாலும், நடிப்பதை தான் விரும்பிச் செய்வதாகத் தெரிவித்தார். பின்பு நடிகர் அஜித் பற்றி கேட்டதற்கு, ‘தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் என்றும், நான் சந்தித்ததில் மிகவும் பண்பான நடிகர் அவர்தான்’ என்றும் கூறினார். #ShrutiHaasan #AjithKumar
உலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்கள் நடத்திய லண்டன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய சுருதிஹாசனின் இசை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. #ShrutiHaasan #ShrutiHaasanLiveinLondon
நடிகர் கமல்ஹாசன் மகள் சுருதிஹாசன். நடிகை, பாடகி, தயாரிப்பாளர், இசை அமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். தனது 6 வயதில் இசைப் பயணத்தை தொடங்கினார். தற்போது இசைப் பயணத்தின் மீது மீண்டும் கவனத்தை திருப்பி உள்ளார்.
இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களை கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் எனும் இடத்திலும் சமீபத்தில் இசைக்கச்சேரி நடத்தி பாடினார்.
இந்த வருடம் வெளிவர இருக்கும் அவரது சில பாடல்களை அவர் இந்நிகழ்ச்சியில் பாடினார்.
உலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்களான பாப் டைலான், எல்டான் ஜான், அட்லே, எட்ஸீரன் போன்றோர் இந்த இடத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர். இப்புகழ் பெற்ற அரங்கு 1954-ல் ஒரு காபி ஹவுஸ் ஆக தொடங்கப்பட்டது.
‘தி நெட்’ என்ற பெயரில் லண்டனில் உள்ள இடத்தில் கடந்த வருடம் செப்டம்பரில் நடந்த ஸ்ருதி ஹாசனின் இசை நிகழ்ச்சி சிறப்பான விமர்சனங்களை பெற்றது.
நியூயார்க்கில் உள்ள மேடிஷன் அவென்யூவில் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி நடந்த தி இந்தியன்டே பாரடே எனும் உலகின் மிகப்பெரிய சுதந்திர தின கூட்டத்தில் இவர் முழங்கிய வந்தே மாதரம் என்ற முழக்கம் அனைவரின் பாராட்டை பெற்றது. சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி இருக்கும் இவரது இசை நிகழ்ச்சி வீடியோக்களை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். #ShrutiHaasan #ShrutiHaasanLiveinLondon
நடிகை சுருதி ஹாசனும், மைக்கேல் கார்சலும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், என்னை சிரிக்க வைப்பவன் நீ, இந்த உலகிலேயே அதுதான் மிகவும் முக்கியமானது என்று சுருதி கூறியுள்ளார். #ShrutiHaasan #MichaelCorsale
கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான சுருதிஹாசனும், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கார்சலும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்கின்றனர்.
ஆதவ் கண்ணதாசன் - வினோதினி சுரேஷ் திருமண நிகழ்வில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். இத்தாலியரான மைக்கேல் கார்சல் பட்டு வேட்டி, சட்டையுடனும், சுருதிஹாசன் பட்டுப்புடவையிலும் திருமணத்துக்கு வந்தனர். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டபோதும் ஒன்றாக கலந்துகொண்டனர்.
இந்த 2 நிகழ்ச்சிகளிலும் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். எனவே இருவரும் திருமணம் செய்துகொள்வது உறுதி. கமலும் சம்மதித்துவிட்டார் என்ற செய்திகள் வந்தன. இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக்கேல் கார்சலுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சுருதிஹாசன், ‘’என்னைச் சிரிக்க வைப்பவன் நீ. இந்த உலகிலேயே அதுதான் மிகவும் முக்கியமானது’’ என்று தெரிவித்துள்ளார். #ShrutiHaasan #MichaelCorsale
நயன்தாரா மற்றும் திரிஷாவை தொடர்ந்து பிரபலமான நடிகை ஒருவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #VijaySethupathi
தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தற்போது ‘96’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.
மேலும், நயன்தாராவுடன் ‘நானும் ரவுடிதான்’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தார். சமந்தாவுடன் இணைந்து ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக, பிரபல நடிகையுடன் சேர்ந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X