search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school girl"

    • தண்ணீர் பிடிக்க சென்ற பள்ளி மாணவி மானபங்கம் செய்யப்பட்டார்
    • வாலிபர் மீது போக்சோவில் வழக்கு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி சவேரியார் பட்டினம் மேற்கு பகு–தியை சேர்ந்தவர் இஸ்தாகிர் (வயது 67). இவரது பேத்தி அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்த பால் பீட்டர் மற்றும் அவரது மனைவி நியூமன் தெரசா ஆகியோர் பொது குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப் போது அங்கு வந்த மாணவி தண்ணீர் பிடிக்க முயன்ற போது பால் பீட்டர் தடுத்துள்ளார். இதுபற்றி கேள்வி எழுப்பினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பால் பீட்டர் அந்த மாணவியிடம் தவறாக நடந்துள்ளார். மேலும் அவரது மூக்கில் கையால் குத்தி காயப்ப–டுத்தி உள்ளதாக கூறப்படு–கிறது. இதுகுறித்து மாண–வியின் தாத்தா இஸ்தாகிர் கறம்பக்குடி காவல் நிலை–யத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் கறம்பக் குடி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சாந்தி மற்றும் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை ஆகியோர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசா–ரித்து வருகின்றனர்.

    • 1 நிமிடம் 10 விநாடியில் இழுத்து சென்று இலக்கை அடைந்து வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் அபிஷியல் ரெக்கார்டு உலக சாதனை படைத்தார்.
    • ஒரு நிமிடம் 46 வினாடியில் தலைமுடியில் காரைக்கட்டி இழுத்துச் சென்று இந்தியன் ரெக்கார்டும், ஆசிய ரெக்கார்டும் வாங்கியுள்ளார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருபவர் சம்யுத்தா (வயது 12). இவர் தனது தலைமுடியில் 1410 கிலோ எடையுள்ள காரை கட்டி 110 மீட்டர் தூரத்தை, 1 நிமிடம் 10 விநாடியில் இழுத்துச் சென்று இலக்கை அடைந்து வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் அபிஷியல் ரெக்கார்டு உலக சாதனை படைத்தார்.

    அதன் ரெக்கார்டு ஆபீசர் ஷரிபா மேற்பார்வையில் இந்த உலக சாதனை நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டது. இவரது உலக சாதனை நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    சம்யுத்தா இதற்கு முன் தனது பத்தாவது வயதில் 990 கிலோ எடையுள்ள காரை 112.2 மீட்டர் தூரத்தை, ஒரு நிமிடம் 46 வினாடியில் தலைமுடியில் காரைக்கட்டி இழுத்துச் சென்று இந்தியன் ரெக்கார்டும், ஆசிய ரெக்கார்டும் வாங்கியுள்ளார்.

    இது குறித்து மாணவி சம்யுத்தா கூறும்போது, இந்த முயற்சிக்கு தனது பெற்றோர் வெங்கடேஷ் மற்றும் ஆஷா, பயிற்சியாளரான கராத்தே மாஸ்டர் இளையராஜா, உடற்கல்வி ஆசிரியர் கரோலின் மற்றும் உடற்பயிற்சியாளர் ரிச்சர்டு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முக்கிய காரணம் என்றார்.

    இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் முத்துக்கு மார் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளியில் இருந்து வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். #UPGirlMolested
    முசாபர்நகர்:

    உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில், மாணவி ஒருவர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள், அந்த மாணவியை வீட்டில் கொண்டு விடுவதாக கூறி பைக்கில் ஏற்றி வந்துள்ளனர்.

    ஆனால், வீட்டுக்குச் செல்லாமல் பாதியிலேயே வாகனங்களை நிறுத்திய அந்த வாலிபர்கள், மாணவியை கரும்புத் தோட்டத்திற்குள் தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர் மாணவியை  4 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். தன்னை காப்பாற்றும்படி மாணவி கூச்சலிட்டுள்ளார்.

    மாணவியின் அலறல் சத்தம் கேட்டதும், அப்பகுதி மக்கள் சிலர் கரும்புத் தோட்டத்திற்குள் சென்றனர். பொதுமக்கள் வருவதைப் பார்த்ததும் 4 வாலிபர்களும் தப்பி ஓடினர். அவர்களில் 2 பேரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #UPGirlMolested
    தேனி அருகே பள்ளி மாணவி மாயம் ஆனது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    தேனி:

    தேனி அருகே கண்டமனூர் எம். சுப்புலாபுரம் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் செல்வக்குமார் மகள் தயாநிதி (வயது16). ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த தயாநிதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கண்டமனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தயாநிதியை தேடி வருகின்றனர்.

    கூடலூர் கருநாக்கன் முத்தன்பட்டி அரசமரத் தெருவை சேர்ந்தவர் மாரிச்சாமி மனைவி முருகேஸ்வரி (24). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று முருகேஸ்வரி அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச்சென்றார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து முருகேஸ்வரியை தேடி வருகின்றனர்.
    ×