search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் பிடிக்க சென்ற பள்ளி மாணவி மானபங்கம்
    X

    தண்ணீர் பிடிக்க சென்ற பள்ளி மாணவி மானபங்கம்

    • தண்ணீர் பிடிக்க சென்ற பள்ளி மாணவி மானபங்கம் செய்யப்பட்டார்
    • வாலிபர் மீது போக்சோவில் வழக்கு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி சவேரியார் பட்டினம் மேற்கு பகு–தியை சேர்ந்தவர் இஸ்தாகிர் (வயது 67). இவரது பேத்தி அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்த பால் பீட்டர் மற்றும் அவரது மனைவி நியூமன் தெரசா ஆகியோர் பொது குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப் போது அங்கு வந்த மாணவி தண்ணீர் பிடிக்க முயன்ற போது பால் பீட்டர் தடுத்துள்ளார். இதுபற்றி கேள்வி எழுப்பினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பால் பீட்டர் அந்த மாணவியிடம் தவறாக நடந்துள்ளார். மேலும் அவரது மூக்கில் கையால் குத்தி காயப்ப–டுத்தி உள்ளதாக கூறப்படு–கிறது. இதுகுறித்து மாண–வியின் தாத்தா இஸ்தாகிர் கறம்பக்குடி காவல் நிலை–யத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் கறம்பக் குடி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சாந்தி மற்றும் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை ஆகியோர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசா–ரித்து வருகின்றனர்.

    Next Story
    ×