search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rowdy arrested"

    சென்னை செங்குன்றத்தில் ரூ.25 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரை மீட்ட போலீசார் துப்பாக்கி முனையில் 8 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இருப்பினும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் அவ்வப்போது வன்முறை செயலில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

    சென்னையை பொறுத்தவரையில் ரவுடிகளுக்கு இணையாக வழிப்பறி கொள்ளையர்களும் அட்டகாசம் செய்து வருகின்றனர். இவர்களையும் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

    ஆனால் குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போலீசார் மீது தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் நடந்தது.

    நேற்று முன்தினம் இரவு ராயப்பேட்டை பி.எம்.தர்கா பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த ரவுடிகளை பிடிக்க சென்ற போலீஸ்காரர் ஏழுமலை சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பிடிபட்ட ரவுடிகளில் ஒருவனான ஆனந்தன், என்கவுண்டரில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியானான்.

    தென்சென்னை பகுதியில் நடந்த என்கவுண்டர் பரபரப்பு அடங்கும் முன்னரே வடசென்னையில் தொழில் அதிபரை கடத்திய ரவுடிகள் 8 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    செங்குன்றம் கரிகாலன் நகர் மூவேந்தர் தெருவை சேர்ந்தவர் கணேசன் (53) லாரி அதிபரான இவர் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2-ந்தேதி திடீரென கணேசன் மாயமானார். மாலையில் வெளியில் சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை கணேசன் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் கலக்கம் அடைந்தனர்.

    நேற்று மாலை வரையில் வீடு திரும்பாததால் இது பற்றி கணேசனின் உறவினர் ராமச்சந்திரன் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் ராமச்சந்திரனுக்கு போன் செய்த கணேசன், தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அதிர்ச்சி தகவலை கூறினார்.

    இதுபற்றி போலீசில் தெரிவிக்க வேண்டாம் என்றும், பணத்தை தயார் செய்யுமாறும் கூறிவிட்டு கணேசன் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இந்த தகவல் தெரிய வந்ததும், கணேசனை பத்திரமாக மீட்கவும், கடத்தல் கும்பலை கூண்டோடு பிடிக்கவும் போலீசார் திட்டமிட்டனர். போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி வேட்டையை தொடங்கினர். வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் ஜெயராம் மேற்பார்வையில், இணை கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, துணை ஆணையர் கலைச்செல்வன் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    புழல் உதவி கமி‌ஷனர் பிரபாகரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய போலீசார் நேற்று இரவு முழுவதும் கடத்தல் கும்பலை சல்லடை போட்டு தேடினர்.

    கடத்தப்பட்ட லாரி அதிபர் கணேசனின் செல்போனை வைத்து அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். கூடுவாஞ்சேரி பகுதியில் கணேசன் காரிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

    இதனையடுத்து நேற்று இரவு 9.30 மணி அளவில் போலீசார் துப்பாக்கி முனையில் 8 ரவுடிகளை மடக்கி பிடித்தனர்.

    இந்த கடத்தலுக்கு செங்குன்றத்தை சேர்ந்த வடகரை சக்தி என்ற சக்திவேல் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவரையும் அவரது கூட்டாளிகள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திருப்போரூரை சேர்ந்த சுமன், எண்ணூர் மதன் குமார், ஆந்திர மாநிலம் நாயுடு பேட்டை மண்டபம் பகுதியை சேர்ந்த கணேஷ், குரோம்பேட்டை அசோக் குமார், செங்குன்றத்தை சேர்ந்த ராஜேஷ், சதீஷ் குமார், சிவா ஆகியோர் போலீஸ் பிடியில் சிக்கினர்.

    இவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாங்கள் கேட்கும் பணத்தை தராவிட்டால் கால் நகத்தை பிடுங்கி எறிந்து விடுவோம் என்றும் கணேசனை ரவுடிகள் மிரட்டியுள்ளனர். இதற்காக கட்டிங்பிளேயர் போன்ற ஆயுதங்களையும் காட்டி கணேசனை தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 8 ரவுடிகளும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்து காரில் ஆயுதங்களுடன் சுற்றிய 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சோமங்கலத்தை அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவன் லெனின் (28). பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் இவன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    கூட்டாளிகளுடன் காரில் சுற்றி கைவரிசை காட்டும் இவன் படப்பை பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி. ராஜேஷ் கண்ணன், மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் தனிப்படை போலீசார் லெனினையும், அவனது கூட்டாளிகளையும் பிடிக்க வலைவிரித்தனர். இதன்படி ரவுடிகள் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார் துப்பாக்கி முனையில் லெனினை கைது செய்தனர்.

    அவனது கூட்டாளிகளான கரசங்கால் பகுதியை சேர்ந்த கோபி, எறுமையூர் பழனி, குரோம்பேட்டை ரகு ஆகியோரும் பிடிபட்டனர்.

    இவர்கள் பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் ஆகியவையும், காரில் பதுக்கி வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து 4 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர். போலீஸ் பிடியில் சிக்கிய போது ரவுடி லெனின் தப்பி ஓட முயன்றான். அப்போது கால்வாயில் தவறி விழுந்த அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து லெனினை ஆஸ்பத்திரியில் அனுமதித்து போலீசார் சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் அவர் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ரவுடிகள் பயன்படுத்திய ஸ்கார்பியோ காரில் ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியின் கார் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த ஸ்டிக்கரை ரவுடிகள் பல இடங்களில் தவறாக பயன்படுத்தி உள்ளனர். அது பற்றியும் விசாரணை நடக்கிறது. போலியாக எம்.எல்.ஏ. ஸ்டிக்கரை தயாரித்து ரவுடிகள் காரில் ஒட்டி உள்ளனர். இதன் பின்னணி குறித்தும் விசாரணை நடக்கிறது.

    பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அரியாங்குப்பம்:

    அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் சந்திப்பில் நேற்று மாலை ஒரு வாலிபர் நின்று கொண்டு அவ்வழியே சென்ற பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை மடக்கிபிடித்தனர். அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் அரியாங்குப்பம் மணவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவேந்திரன் மகன் சூர்யா என்ற எலி சூர்யா (வயது 20) என்பதும், ரவுடியான இவர் மீது ஏற்கனவே பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து சூர்யாவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திண்டிவனத்தில் கைத் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்களுடன் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
    திண்டிவனத்தில் கைத் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்களுடன் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னையைச்சேர்ந்த ரவுடியை கொலை செய்யும் திட்டத்துடன் அவர்கள் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

    2 ரவுடிகள் கைது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சின்னசேகர் என்பவரது மகன் பாம்பு என்ற நாகராஜ்(30). பிரபல ரவுடியான இவர் பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அமைந்தகரையைச்சேர்ந்த பிரபல ரவுடி பல்லி என்ற ரோகனின் கூட்டாளியான சூளைமேட்டை சேர்ந்த குமரேசனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இந்த வழக்கில் அவர் தலைமறைவாக இருந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி ரோகன் தனது எதிரியான நாகராஜை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இது பற்றி அறிந்த நாகராஜூம், ரோகனை கொல்ல சமயம் பார்த்துக் கொண்டு இருந்தார். அதனால் அவரது நடவடிக்கையை கண்காணித்து வந்தார்.

    இதற்கிடையே ரோகனுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா மூடூர் கிராமத்தை சேர்ந்த காசி மகன் பொன்ராஜின்(32) மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது நாகராஜூக்கு தெரியவந்தது.

    கடந்த சில மாதங்களாக பொன்ராஜ் தனது மனைவியுடன் திண்டிவனத்தில் வசித்து வந்தார். இதனால் ரவுடி ரோகன் தனது கள்ளக்காதலியை பார்ப்பதற்காக திண்டிவனத்துக்கு அடிக்கடி வந்து சென்றார்.

    இந்த விஷயத்தை நாகராஜூக்கு பொன்ராஜ் தெரிவித்தார். இதனால் ரோகனை கொலை செய்யும் சதிதிட்டத்துடன் நாகராஜ் ஸ்ரீபெரும்புதூரில் கைத்துப்பாக்கி மற்றும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி பையில் மறைத்து வைத்துக் கொண்டு, நேற்று முன்தினம் இரவில் திண்டிவனத்திற்கு வந்தார்.

    அங்கு தனது கூட்டாளி பொன்ராஜ் உதவியுடன் ரோகனை கொலை செய்யும் திட்டத்துடன் திண்டிவனம் வ.ஊ.சி. திடல் அருகில் பதுங்கி நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து வந்த திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முதுகில் மாட்டியிருந்த பையை(பேக்) சோதனையிட்ட போது, அந்த பையினுள் அரிவாள், கத்தி, மிளகாய்பொடி பாக்கெட் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.

    அந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கு 2 ரவுடிகளையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து கைத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இதுபற்றி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திண்டிவனத்துக்கு விரைந்து வந்து கைது செய்யப்பட்ட இரு ரவுடிகளிடமும் விசாரணை நடத்தினார்.

    ரவுடிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களையும் பார்வையிட்டார். முன்கூட்டியே ரவுடிகள் கைது செய்யப்பட்டதால் அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தஞ்சையில் நேற்று இரவு தூங்கிய முதியவர் மீது செங்கல்லை போட்டு படுகொலை செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மானம்பு சாவடி மிஷின் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 70). கூலித்தொழிலாளியான இவர் தினமும் அப்பகுதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு எதிரே உள்ள கட்டிடத்தில் வந்து தூங்குவாராம்.

    இந்த நிலையில் நேற்று இரவும் சுப்பிரமணியன் அங்கு வந்து படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம கும்பல் சுப்பிரமணியன் படுத்து தூங்கி கொண்டிருந்த இடத்திற்கு அருகே உள்ள செங்கற்களால் அவர் முகம் மற்றும் கால்களில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

    இதைத் தொடர்ந்து இன்று காலை அந்த வழியாக செல்பவர்கள் சுப்பிரமணியன் முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை கொன்றவர்கள் யார்? எதற்காக கொன்றார்கள்? குடிபோதையில் நடந்த சம்பவமா? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மானம்புச் சாவடி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (40). என்பவர் தான் சுப்பிரமணியனை செங்கலால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    ராஜ்குமார் மீது ஏற்கனவே மேற்கு போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.  இந்த நிலையில் நேற்று கோர்ட்டுக்கு ஒரு வழக்கிற்கு ஆஜராக வந்த அவர் இரவு தூங்குவதற்காக  வருவாய் ஆய்வாளர் விடுதி அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு சுப்பிரமணியன் தூங்கி கொண்டிருந்தார். உடனே ராஜ்குமார் சுப்பிரமணியனை வேறு இடத்தில் சென்று படுக்குமாறு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரம் அடைந்த  ராஜ்குமார் அருகில் இருந்த செங்கலை எடுத்து சுப்பிரமணியனை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். இது தொடர்பாக ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×