search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road maintenance"

    • வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாக புகார்
    • ரோட்டில் தேங்கிய ஜல்லி கற்கள், மணல் திட்டு அகற்றம்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலை, தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஏலகிரி மலையில் முருகன் கோவில் அருகில் உள்ள வளைவுகளில் அவ்வப்போது சிறு ஜல்லி கற்கள், மணல்கள் மழைக் காலங்களில் பரவி காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.

    இந்த நிலையில் திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் மணிசுந்தரம், உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் உத்தரவின்பேரில் சாலை ஆய்வாளர் வெங்கடேசன் சாலை பணியாளர்களைக் கொண்டு மழையினால் ஏற்பட்ட ஜல்லி கற்களையும், மணல் பரப்பினையும் அகற்றினர்.

    • இந்த சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள், வர்த்தக சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
    • புல்டோசர் எந்திரம் மூலம் மெகா பள்ளங்களை சரி செய்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி - சென்னை சாலை, பண்ருட்டி -கும்பகோணம் சாலைகுண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. இந்த சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள், வர்த்தக சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால்அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர் லாரி வெங்கடேசன் தனது சொந்த செலவில் டிப்பர் லாரிகளில் ஜல்லி, தார் ஆகியவை எடுத்து வந்து புல்டோசர் எந்திரம் மூலம் மெகா பள்ளங்களை சரி செய்தார். இவரது முயற்சியை பொது மக்கள் பாராட்டினர்

    சாலைகளை பராமரிக்க அதிகபட்சமாக அடையாறு மண்டலத்திற்கு 78 லட்சமும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு 68 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி மூலம் 5270.36 கி.மீட்டர் நீளமுடைய 34640 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 3932.13 கி.மீ நீளமுடைய 23,221 எண்ணிக்கையிலான தார் சாலைகளும், 1270.83 கி.மீ நீளமுடைய 11,039 எண்ணிக்கையிலான சிமெண்ட் கான்கிரீட் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகராட்சி சாலைகள் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சார இணைப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிக்காகவும் சாலைகள் அவ்வப்போது பல இடங்களில் பள்ளம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும், உட்புற சாலைகளில் வேகத்தடை அமைப்பது, மங்கிபோன தெர்மோ பிளாஸ்டிக் கோடுகள் புதுப்பித்தல், வழிகாட்டு பலகைகள் அமைப்பது போன்ற போக்குவரத்து அபிவிருத்தி பணிகள் தேவைக்கேற்ப அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டியநிலை உள்ளது.

    சென்னை மாநகராட்சி

    அதுமட்டுமன்றி, மழை மற்றும் இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது பெரும் பள்ளங்களும் ஏற்படுகிறது. இதனை பராமரிக்க அல்லது புதுப்பிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒப்பந்ததாரர்கள் நியமித்து ஒரு வருட காலத்திற்கு அவ்வப்போது தேவைக்கேற்ப பணிகளை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி 2021-2022-ம் ஆண்டிற்காக மொத்தம் 7 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் உட்புற சாலைகளை ஒட்டும் பணி மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள 6 கோடியே 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், மேலும் 9 சாலைகள் மைய தடுப்பு மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு பணிக்காக ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    அதிகபட்சமாக, அடையாறு மண்டலத்திற்கு 78 லட்சமும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு 68 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



    ×