search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rice crops"

    • சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.
    • சாகுபடி செய்த விவசாயிகள் கொள்முதல், குறைந்து விடுமோ என்ற கவலையில் உள்ளனர்.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடி செய்து அறுவடைக்கு தயிராக இருந்த நெல் மணிகள் மழையால் தரையில் சாய்ந்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்தில் 52 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.

    ராயபுரம், காளாஞ்சிமேடு, கடம்பூர், பரப்பனாமேடு, சித்தமல்லி மேல்பாதி, பூவனூர், அனுமந்தபுரம், பெரம்பூர், காளாச்சேரி, ராயபுரம், மேலபூவனூர், காணூர், அனுமந்தபுரம், தேவங்குடி, ரிஷியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நிலத்தடி நீரினை பயன்படுத்தி முன் கூட்டியே குறுவை சாகுபடிக்கு தொடங்கினர்.

    இவ்வாறு முன்கூட்டியே சாகுபடி செய்த நெல் பயிர்கள் தற்போது அறுவடைக்கு வரும் நிலையில் நெல் மணிகள் பழுத்து வருகிறது. இந்நிலையில் நீடாமங்கலம் பகுதியில் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் மழையில் தரையில் சாய்ந்துள்ளது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் கொள்முதல், குறைந்து விடுமோ என்ற கவலையில் உள்ளனர். வயல்களில் தேங்கிய மழை நீரை வடித்தெடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • பல கிராமங்களில் முன்பட்ட குறுவை நெற்பயிற்கதிர் வந்து விளைந்து இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
    • விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய கணினி வழியாக பதிவு செய்ய வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் வட்டாரத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி கல்லணை தொடங்கி ஆழ்துளை கிணறு வசதி உள்ள கிராமங்களில் நடைபெற்றது. பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் மட்டும் ஏறக்குறைய 5000 ஏக்கர் பரப்பில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள முன்பட்ட குறுவை பயிர் சில கிராமங்களில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. பல கிராமங்களில் முன் பட்ட குறுவை நெற்பயிற் கதிர் வந்து விளைந்து இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

    அறுவடை தொடங்கி யுள்ள சில கிராமங்களிலும், தொடங்க உள்ள கிராமங்களிலும் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்கு எந்த ஏற்பாடுகளையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செய்யவில்லை. அறுவடை தொடங்கியுள்ள கிராம விவசாயிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை அணுகிய போது உடனடியாக திறக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குறை கூறுகின்றனர்.

    விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய கணினி வழியில் வழியாக பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வந்து அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அறுவடை நடைபெறுவதற்கு முன்னதாகவே அதிகாரிகள் கள ஆய்வு செய்து கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இந்த பகுதியில் நேரடியாக கள ஆய்வு செய்து கொள்முதல் நிலையங்கள் திறக்க ஆவனசெய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் நெற்பயிரில் பாக்டீரியா இலைகருகல் நோய் அதிகம் காணப்படுகிறது.
    • வயல் ஆய்வின்போது தென்திருப்பேரை, சுற்றுவட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் நெற்பயிரில் பாக்டீரியா இலைகருகல் நோய் அதிகம் காணப்படுகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த தென்திருப்பேரை சுற்றுவட்டார நெல் வயல் பகுதிகளில் வேளாண்மை அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கூட்டாய்வு செய்தனர்.

    வேளாண் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், வேளாண் துணை இயக்குனர் பழனி வேலாயுதம், வேளாண்மை உதவி இயக்குனர்கள் அல்லிராணி, கண்ணன், வேளாண்மை அலுவலர்கள் திருச்செல்வன், கார்த்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரி நோயியல் துறை உதவி பேராசிரியர் ரஜினி மாலா கலந்து கொண்டு இலைகருகல் நோயினை வயலாய்வு செய்து நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். விவசாயிகள் இலைகருகல் நோய் தென்படும் போது ஒரு ஏக்கருக்கு காப்பர் ஹைட்ராக்சைடு 77 டபுள்யு.பி. 500 கிராம் என்ற அளவில் ஒட்டுப்பசை கலந்து தெளிக்கலாம்.மேலும் இம்மருந்தினை வேறு ஏதேனும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களுடன் கலந்து தெளிக்க கூடாது என தெரிவித்தார். வயல் ஆய்வின்போது தென்திருப்பேரை, சுற்றுவட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் நீலகண்ட பிள்ளை, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் ஏசுதாசன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சூசை மாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர்.


    ×