search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ram"

    ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நா.முத்துக்குமார் இல்லாமல் கஷ்டப்பட்டோம் என்று கூறினார். #Peranbu
    ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - பேபி சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்களும், பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு சென்னையில் நேற்று நடந்தது. 

    இதில் இயக்குநர் ராம், மம்முட்டி, அஞ்சலி, ஆண்ட்ரியா, சித்தார்த், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார். வெற்றிமாறன், மிஷ்கின், கரு.பழனியப்பன், அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மேடைக்கு வந்த போது ரசிகர்கள் யுவனிடம் சில கேள்விகளை கேட்டனர். அதற்கு யுவன் அளித்த பதில்களாவது, 

    கே:- சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் கடந்தும் யுவனுக்கான அங்கீகாரம், பெரிய விருது கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது?

    ப:- அதைப்பற்றி வருத்தப்பட தேவையில்லை என்று ரசிகர்களை கைகாட்டி இதைவிட பெரிய அங்கீகாரம் எதுவுமே இல்லை என்றார். இதற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும், விருது கிடைக்க வேண்டும் என்று எதையும் செய்யவில்லை. அந்த எண்ணமும் கிடையாது. மக்கள் மனதில் பதிந்தால் போதும். 



    கே:- நா.முத்துக்குமார் இல்லாமல் நீங்கள் இணையும் முதல் படம் இது, எப்படி உணர்கிறீர்கள்?

    ப:- இந்த படத்திற்காக இசையமைக்கும் போதே எங்கே அவர் என்று எங்களை யோசிக்க வைத்தார். சில பாடல்கள் எழுதும் போது இதற்கு முத்து இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தோம். அவர் எங்கேயும் போகவில்லை, அவருடைய வரிகள் இங்கேதான் இருக்கிறது. ராம் பேசும் போது, முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. அந்த இடம் அப்படியே இருக்கும். 

    இந்த படத்தை மம்முட்டி ஒத்துக்கொண்டதற்கு நன்றி. உங்களது இடத்தில் இருந்து இந்த மாதிரியான ஒரு படத்திற்கு அங்கீகாரம் கொடுத்ததில் மகிழ்ச்சி. இதுவரை பண்ணாத முயற்சியை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறோம். இவ்வாறு யுவன் பேசினார். #PeranbuAudioLaunch #Mammootty #Anjali

    ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அமீர், பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் இவர்களை தாண்டி, அனைத்து இயக்குநர்களுக்கும் இனிமேல் ராம் தான் குரு என்றார். #Peranbu
    ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - பேபி சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்களும், பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு சென்னையில் நேற்று நடந்தது. 

    இதில் இயக்குநர் ராம், மம்முட்டி, அஞ்சலி, ஆண்ட்ரியா, சித்தார்த், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார். வெற்றிமாறன், மிஷ்கின், கரு.பழனியப்பன், அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமீர் பேசும் போது,

    ஒரு திரைப்படத்திற்கு பெயர் வைக்கும்போது, இயக்குநருடைய குணாதிசயம் வெளியே வரும். எல்லா இயக்குநர்களும் தங்குளுடைய கதைகளை முடிவு செய்த பிறகு தலைப்பை யோசிப்பார்கள். பொதுவாக எல்லா இயக்குநர்களின் படங்களிலும் அவர்களுடைய குணாதிசயம் அல்லது அவர்கள் எதை நோக்கி போகிறார்கள் என்பது அந்த படத்தின் தலைப்பில் இருந்து வரும். உதாரணமாக மிஷ்கின் பிசாசு என்று வைத்திருக்கிறார் அல்லவா, அதுபோல தான். அதை அவரே ஒத்துக் கொள்வார். 



    பேரன்பு என்ற தலைப்பை வைக்கும் போதே ஒரு மனிதனுக்குள் இவ்வுளவு பெரிய ஒரு சிந்தனை எப்படி இருக்கமுடியும். நாம் எல்லோருமே கடந்து போயிருப்போம். நாம் அனைவரும் மாற்றுத்திறனாளி ஒருவரை பார்ப்போம். பார்த்துவிட்டு கடந்து போய்விடுவோம். அந்த மாற்றுத்திறனாளியின் பார்வையில் உலகத்தை பார்க்கும் பார்வை, அந்த பெண்ணின் பெற்றோர் இந்த சமூகத்தில் எப்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பார்வை தான் ராமின் பேரன்பு. 

    இந்த படத்தை பற்றி நிறைய பேசிவிட்டார்கள். அவ்வுளவு பேச வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இவையெல்லாமே ஒரு அனுபவம் தான். அடுத்தவர்களுக்கு இந்த படம் ஒரு ரெபரன்ஸாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்தில் தனது பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும் காட்சி ஒன்று உள்ளது. இந்திய சினிமாவில் அதுபோன்ற ஒரு காட்சியை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் இவர்களை தாண்டி, அனைத்து இயக்குநர்களுக்கும் இனிமேல் ராம் தான் குரு. எல்லாவற்றிலும் இந்த படம் முன்மாதிரியாக இருக்கும். நாம் பல இடங்களை புகைப்படத்தில் பார்த்திருப்போம். அதை ஒருநாள் நேரில் பார்க்கும் போது ஏற்படும் உணர்வு தான் பேரன்பு படம். #PeranbuAudioLaunch #Mammootty #Anjali

    ராமாயணத்தில் சீதையை ராமர் கடத்தியதாகவும், லட்சுமணன் ராமருக்கு உபதேசம் செய்ததாகவும் குஜராத் பாடப்புத்தகத்தில் வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. #Ramayana #Gujarat #SchoolBook
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில், ஆங்கில வழியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் சமஸ்கிருதத்தை விருப்பப்பாடமாக தேர்வு செய்து படித்து வருகிறார்கள்.

    பிளஸ்-2 சமஸ்கிருத பாட புத்தகத்தில் ‘சமஸ்கிருதமும், இலக்கியமும்’ என்கிற பாடம் வருகிறது. இதில் ராமாயணம் பற்றிய தொடக்க உரை இடம் பெற்றிருக்கிறது.

    அதில் சீதையை ராமர் கடத்தியதாகவும், லட்சுமணன் ராமருக்கு உபதேசம் செய்ததாகவும் கூறப்பட்டு இருந்தது. இதனை படித்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுபற்றி மாநில அரசின் பாடநூல் நிறுவன செயல் தலைவர் நிதின் பெதானி விளக்கம் அளிக்கையில் “மொழி பெயர்ப்பின் போது கவனக்குறைவின் காரணமாக ஏற்பட்ட பிழை இது. ‘கைவிடப்பட்ட’ என்ற வார்த்தை ஆங்கிலத்தில் ‘கடத்தப்பட்ட’ என தவறாக மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. இந்த பாடத்தை பயிற்றுவிக்கும் போது, குறிப்பிட்ட அந்த வார்த்தையை திருத்தி பயிற்றுவிக்கும்படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது” என்றார்.

    இருப்பினும் ஒரு வார்த்தையை மாற்றியதால் ராமாயணத்தின் அடிப்படையே தவறாகி விட்டதாக ஆன்மிகவாதிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.  #Ramayana #Gujarat #SchoolBook 
    ×