search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "putin"

    • கிளர்ச்சியில் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.
    • வாக்னர் படையை சேர்ந்த வீரர்கள் விரும்பினால் ரஷிய ராணுவத்தில் இணைந்து கொள்ளலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு செல்லலாம்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீதான போரில் ரஷிய ராணுவத்துக்கு அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு உதவியது.

    ரஷியாவின் கூலிப்படை என்று அழைக்கப்படும் வாக்னர் குழு, உக்ரைன் படையினருக்கு எதிராக சண்டையிட்டு சில நகரங்களை கைப்பற்றியது.

    இதற்கிடையே ரஷிய ராணுவ தலைமைக்கும், அரசுக்கும் எதிராக வாக்னர் குழு திரும்பியது. தங்களது படை மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் ரஷியாவில் கிளர்ச்சியை ஏற்படுத்த போவதாகவும் வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் அறிவித்தார்.

    இதையடுத்து அப்படையின் 25 ஆயிரம் வீரர்கள் தலைநகர் மாஸ்கோவை நோக்கி சென்றனர்.

    இதையடுத்து வாக்னர் குழுவுக்குரிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன்பின் பெலாரஸ் நாட்டு அதிபரின் சமரசத்தை ஏற்றுக்கொண்ட வாக்னர் குழு தலைவர், கிளர்ச்சியை கைவிட்டதாக அறிவித்தார். இதனால் வாக்னர் படை வீரர்கள் பின்வாங்கி திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிளர்ச்சியில் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. ரஷியாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவானால் தோல்வியில்தான் முடியும். ரஷியர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாக வேண்டும் என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.

    கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற சிலர், உக்ரைன் அரசாங்கம் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கைகளில் விளையாடி இருக்கிறார்கள். துரோகிகளான அவர்கள் நீதி முன்பு கொண்டு வரப்படுவார்கள்.

    வாக்னர் படையை வீழ்த்த உறுதுணையாக இருந்த ரஷிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஷியரில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க முடிவு செய்த வாக்னர் போராளிகள் மற்றும் தளபதிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    நாட்டு மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ரஷியாவின் எதிரிகள் தவறாக கணக்கிட்டுள்ளனர். வாக்னர் படையை சேர்ந்த வீரர்கள் விரும்பினால் ரஷிய ராணுவத்தில் இணைந்து கொள்ளலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு செல்லலாம்.

    அவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ, பெலாரஸ் நாட்டுக்கு இடம் பெயரவோ அல்லது குடும்பத்துடன் திரும்ப செல்லவோ அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதின் தனது உரையில் வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷினின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

    • வாக்னர் போராளிகள் விரும்பினால் பெலாரஸுக்கு இடம்பெயர அனுமதி.
    • கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

    ரஷிய- உக்ரைன் போரில் ஒரு திருப்பமாக ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி, அதன் தலைவருக்கும் ரஷிய அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது.

    இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-

    ரஷியாவில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க இறங்கிய வாக்னர் கூலிப்படை போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு நன்றி.

    வாக்னர் போராளிகள் விரும்பினால் பெலாரஸுக்கு இடம்பெயர அனுமதிப்பதாகவோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ அல்லது அவர்களது குடும்பங்களுக்குத் திரும்பவோ அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

    • ரஷியாவில் தற்போது நடைபெற்ற வரும் சூழ்நிலை குறித்து ஆலோசனை
    • நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குமாறு ஜெலன்ஸ்கி கேட்டுள்ளார்

    உக்ரைன்- ரஷியா இடையே கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. தற்போது உக்ரைன் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்மூலம் சில கிராமங்களை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

    இதற்கிடையே வாக்னர் கூலிப்படை திடீரென ரஷியாவிற்கு எதிராக திரும்பியது. எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்ல இருப்பதாகவும் அறிவித்தது.

    இதனால் ரஷியாவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஒரு பக்கம் உக்ரைனுக்கு எதிராக போரிட வேண்டும். மறுபுறம் துரோகியை ஒடுக்க வேண்டும். இதனால் புதின் வாக்னர் படை வீரர்களை கண்டதும் சுட உத்தரவிட்டார். இந்த நிலையில்தான் ரஷியாவின் மிகவும் நெருங்கிய நாடான பெலாரஸ் மத்தியஸ்தராக செயல்பட்டு, புரிகோசினிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

    அப்போது புரிகோசின் பெலாரஸ் செல்ல வேண்டும். வாக்னர் படை மீதான கிரிமினல் வழக்குகளை ரஷியா திரும்ப பெற வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால் வாக்னர் படை மாஸ்கோ நோக்கி செல்வதில் இருந்து பின்வாங்கியது.

    இந்த பரபரப்பான சூழ்நிலை நடந்து கொண்டிருந்த வேலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறுகையில் ''நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பேசினேன். நேர்மறை மற்றும் உத்வேகம் அளிக்கும் உரையாடல் நடைபெற்றது. உக்ரைன்- ரஷியா இடையிலான போர் மற்றும் தற்போது ரஷியாவில் நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்து விவாதித்தோம். சர்வதேச உத்தரவு நடைமுறைக்கு வரும்வரை, சர்வதேச நாடுகள் ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்'' என்றார்.

    மேலும், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது குறித்து ஜெலன்ஸ்கி பைடன் உடன் ஆலோசனை நடத்தியதை உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை, இது தனி விசயம் என்று தெரிவித்துள்ளது.

    • உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வரும் நிலையில் வாக்னர் படை செயலால் ரஷியாவுக்கு பின்னடைவு
    • உயிரிழப்புகள் வேண்டாம் என கருதி பின்வாங்குகிறோம் என வாக்னர் படை அறிவிப்பு

    எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்ல இருப்பதாகவும் அறிவித்தார். இதனால் ரஷியாவில் ஆயுத புறட்சி ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    பின்னர், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக தனது படைகள் வெளியேறுவதாக எவ்ஜெனி புரிகோசின் தெரிவித்தார். இதனால் ஆயுத கிளர்ச்சி முடிவுக்கு வரவிருக்கிறது.

    இதற்குமுன் இரண்டு முறை ரஷியா ஆட்சி கவிழ்ப்பு சதியை எதிர்கொண்டுள்ளது. அப்போது சோவியத் ரஷியாவாக இருந்தது.

    1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோவியத் ரஷியா உடைவதற்கு முன், கம்யூனிஸ்ட் கட்சியின் கடுமைவாதிகள், சோவியத் ரஷியா உருவாவதற்கு முக்கிய பங்கு வகித்த 15 குடியரசுகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கும் அதிகார ஒப்பந்தத்தை தடுத்து அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த சதி முறியடிக்கப்பட்டது.

    அப்போது அதிபராக இருந்த மிக்கைல் கோர்பசேவ் ஆகஸ்ட் 19-ந்தேதி கிரிமியாவில் உள்ள டச்சாவில் விடுமுறையை கழிப்பதற்காக சென்றார். சோவியத் ரஷியாவின் ரகசிய போலீசார் அவரை வீட்டுச்சிறையில் அடைத்தனர். மாஸ்கோ நகரில் ராணுவ வீரர்கள், ராணுவ டாங்கிகள் குவிக்கப்பட்டனர்.

    அடுத்த இரண்டு மூன்று நாட்களில் ரஷிய மக்கள் ஜனநாயகத்தை வலியுறுத்தி வீதியில் இறங்கி போராட தொடங்கினர். மாஸ்கோவின் பாராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு போராடத் தொடங்கினர்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் போரிஸ் யெல்ட்சின் மக்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து சதி முறியடிக்கப்பட்டது. கோர்பசேவ் நாடு திரும்பிய போதிலும் அவரது செல்வாக்கு குறைந்தும், யெல்ட்சின் சக்தி வாய்ந்த தலைவராகவும் கருதப்பட்டார்.

    இந்த சம்பவம் நடைபெற்ற சில மாதங்களில் சோவியத் ரஷியாவில் இருந்த நாடுகள் பிரிந்து சுதந்திரத்தை அறிவிக்க தொடங்கின.

    இரண்டு வருடங்கள் கழித்து 1993-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை பாராளுமன்ற கிளர்ச்சி ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கடுமைவாதிகள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது பாராளுமன்றம் டாங்கிகள் கொண்டு தாக்கப்பட்டன.

    யெல்ட்சின் சோவித் ரஷியா உடைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின், அரசியில் நெருக்கடிக்குப்பின் பாராளுமன்ற மன்றத்தில் கம்யூனிஸ்ட் கடுமைவாதிகள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து யெல்ட்சினை நீக்கி, துணை அதிபர் அலெக்சாண்டர் ருட்ஸ்கோயை அதிபராக்க முயன்றனர். அப்போது ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அவர்களை தடுத்தனர்.

    அதேவேளையில் பாராளுமன்றத்திற்கு வெளியே மாஸ்கோ மேயர் அலுவலகம் மற்றும் டெலிவிசன் மையத்தை கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    இதனால் யெல்ட்சின் ராணுவ உதவியுடன் கிளர்ச்சியாளர்களை துவம்சம செய்தார். அக்டோபர் 4-ந்தேதி ராணுவ ஒயிட் ஹவுஸை தாக்கியது. 18 மாடி கட்டிடம் தகர்க்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர்கள், போராளிகள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதில் 148 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

    டிசம்பர் மாதம் பொது வாக்கெடுப்பு மூலம் அதிபருக்கு அதிக அதிகாரம் என்ற அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருந்தாலும், யெல்ட்சின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தனர்.

    • உயிரிழப்புகளை தவிர்க்க முன்னேறி செல்வதிலலை என வாக்னர் படை முடிவு
    • வாக்னர் படை தலைவர் பெலாரஸ் செல்ல இருப்பதால் கிரிமினல வழக்குகளை ரத்து செய்ய ரஷியா முடிவு

    வாக்னர் எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு ரஷியாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பாக செயல்படுகிறது. ரஷியப் படைகளுடன் சேர்ந்து உக்ரைனுக்கு எதிரான சண்டையிட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று வாக்னர் அமைப்பு தற்போது ரஷியாவுக்கு எதிராக திரும்பியது

    வாக்னர் அமைப்பு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை கைப்பற்றியதாக அறிவித்தது. அதோடு 50 சதவீதம் ராணுவ வீரர்கள் தங்களுடன் ஆதரவாக இருப்பதாகவும், மாஸ்கோவை நோக்கி முன்னேறுவதாகவும் தெரிவித்தது.

    ஏற்கனவே உக்ரைன்கு எதிராக போரிட்டு வரும் நிலையில், உள்நாட்டில் ஆயுத கிளர்ச்சி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் ரஷிய அதிபர் புதின் நாட்டு மக்களிடையே உரையற்றினார். அப்போது வாக்னர் அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி புரிகோஸை கைது செய்யவும், கிளர்ச்சியாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவிட்டார். மேலும், வாக்னர் படை தலைவர் துரோகம் செய்துவிட்டார். முதுகில் குத்திவிட்டதாக தெரிவித்தார். ரஷியா முழுவதும் ராணுவ படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றுது.

    பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் வாக்னர் குழு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டானிலிருந்து வீரர்களைத் திரும்பப் பெறத் தொடங்க முடிவு செய்தது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக தனது படைகள் வெளியேறுவதாக வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இதுதொடர்பாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்ட பதட்டத்தைத் தணிக்கும் வகையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வாக்னர் குழு தலைவர் அண்டை நாடான பெலாரசுக்குச் செல்கிறார். அவர் மீதான கிரிமினல் வழக்கு முடித்து வைக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதனால் ரஷியாவில் ஏற்பட இருந்த ஆயுத கிளர்ச்சி முடிவுக்க வர இருக்கிறது.

    • ரஷிய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வாக்னர் குழு கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
    • ரஷியாவின் ரோஸ்டோவ் நகரில் ராணுவ படைகள் தனது கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதாக வாக்னர் குழு தெரிவித்தது.

    மாஸ்கோ:

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவால் உக்ரைனை சுலபமாக வெற்றி கொள்ள இயலவில்லை. போர் முடிவுக்கு வராமல் 15 மாதங்களுக்கும் மேலான நிலையில் தற்போது ரஷியா புது சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

    அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், ரஷிய நாட்டிற்கான தனியார் ராணுவ கூலிப்படை தலைவராக உக்ரைனுக்கு எதிராக, அவரது படையும் போரில் ஈடுபட்டு வந்தது.

    இதற்கிடையே, ரஷிய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரஷியாவிற்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சிக்கு பிரிகோசின் அழைப்பு விடுத்திருக்கிறார். தற்போது ரஷியாவின் தெற்கில் உள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் உள்ள ரஷிய ராணுவ படைகள், தனது கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் அறிவித்திருக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியிலிருந்து நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாப்போம்.

    இந்தக் கலகம் எங்களுக்கு ஒரு கொடிய அச்சுறுத்தல். இதற்கு பதிலளிக்கும் விதமாக கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    கிளர்ச்சிக்கு காரணமானவர்கள் அனைவரும் தவிர்க்க முடியாத தண்டனையை அனுபவிப்பார்கள். ஆயுதப்படைகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு தேவையான உத்தரவுகள் கிடைத்துள்ளன.

    இதுபோன்ற குற்றச் செயல்களில் பங்கேற்பதை நிறுத்துங்கள். மேற்கத்திய நாடுகளின் முழு ராணுவ, பொருளாதார மற்றும் தகவல் இயந்திரம் ரஷியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.

    இந்தப் போரில் நமது மக்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும்போது, அனைத்து சக்திகளின் ஒருங்கிணைப்பு, ஒற்றுமை, பொறுப்பு ஆகியவை தேவை.

    ரஷியா உக்ரைனில் தன் எதிர்காலத்திற்கான மிகக் கடினமான போரில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் கிளர்ச்சி என்பது கண்டிக்கத்தக்கதாகும். இதுபோன்ற நேரத்தில் ஆயுதமேந்திய கிளர்ச்சி என்பது ரஷ்யாவிற்கும், அதன் மக்களுக்கும் ஒரு அடி.

    ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு சதி செய்து ஏற்பாடு செய்தவர்கள், தனது தோழர்களுக்கு எதிராக ஆயுதங்களை உயர்த்தியவர்கள், ரஷியாவைக் காட்டிக் கொடுத்துள்ளனர். அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

    • மேற்கத்திய நாடுகளை எச்சரிக்க புதின் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக தகவல்
    • பெலாரஸ் நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன

    உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. முதலில் உக்ரைனை எளிதாக நினைத்தது ரஷியா. சூழ்நிலை அவ்வாறு அமையவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி வருவதால் உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.

    உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியபோது கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி, உக்ரைன் நாட்டிற்குள் ஊடுருவ பெலாரஸ் பகுதியை ரஷியப் படைகள் பயன்படுத்தியன. ஆயுதங்களையும் குவித்து வைத்தது.

    இந்த நிலையில் இன்று ரஷிய அதிபர் புதின், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சந்தித்தார். அப்போது ஜூலை 7 அல்லது 8-ந்தேதிக்குள் தந்திரோபாய அணுஆயுதங்களை (tactical nuclear weapons) வைப்பதற்கான கட்டிட வேலைகள் முடிந்துவிடும். அதன்பிறகு விரைவாக அணுஆயுதங்கள் கொண்டு வந்து குவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    தந்திரோபாய அணுஆயுதங்கள் எதிரிகளின் துருப்புகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கவும் பயன்படுத்தப்படும். கண்டம் விட்டு கண்டம் தாண்டி பெரிய நகரத்தையே அழிக்கும் அணுஆயுதம் போன்று அல்லாமல், குறுகிய தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டவையாக இருக்கும்.

    ஆனால், எவ்வளவு ஆயுதங்கள் பெலாரஸ்க்கு அனுப்பப்படும் என்பது குறித்து புதின் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், சுமார் 2 ஆயிரம் ஆயுதங்களை அனுப்பி வைக்கலாம் என அமெரிக்க அரசு நம்புகிறது.

    மேற்கத்திய நாடுகளை மிரட்டுவதற்காகத்தான் ரஷியா இந்த வேலைகளை செய்கிறது. இதற்கு பெலாரஸ் அதிபர் உடன்போகிறார் என பெலாரஸ் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

    நேட்டோ மாநாடு ஜூலை மாதம் வில்னியஸில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன் புதின் மற்றும் அவரது கைப்பாவையான லுகாஷென்கா ஆகியோர் பெலாரஸில் ஆயுதங்களை குவிக்க திட்டமிட்டுள்ளனர் என பெலாரஸ் நாட்டின் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

    • சீன அரசாங்கம் ரஷியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது
    • புதினுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஜி ஜின்பிங்கின் பயணம் அமைந்திருப்பதாக பேசப்படுகிறது.

    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக இன்று ரஷியா வந்தடைந்தார். தலைநகர் மாஸ்கோவில் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து புதினுக்கு ஜி ஜின்பிங் ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உக்ரைன் போர் விஷயத்தில் சீனா நடுநிலை வகிப்பதாக கூறுகிறது. ஆனால் சீன அரசாங்கம் ரஷியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் புதினுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஜி ஜின்பிங்கின் இந்த மூன்று நாள் பயணம் அமைந்திருப்பதாக பேசப்படுகிறது.

    அனைத்து நாடுகளின் இறையாண்மைக்கு மரியாதை அளிப்பது, சீனாவின் 12 அம்ச யோசனை மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உக்ரைன் பற்றிய சீனாவின் கருத்துக்களை புதின் வரவேற்றார். மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குவதில் விருப்பம் காட்டுவதாக சீனாவின் கருத்துக்கள் இருப்பதாக அவர் கூறினார். சீன-ரஷிய உறவுகள் உயர்ந்த நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 23-ம் தேதி நாடு திரும்புகிறார்.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டைக் கடந்துள்ளது.
    • உக்ரைனின் மரியுபோல் நகருக்கு ரஷிய அதிபர் புதின் சென்றார்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்குத் தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

    போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

    இதற்கிடையே, இந்தப் போரில் கிழக்கு உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், போர் தொடங்கி ஓராண்டை கடந்துள்ள நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முதல் முறையாக உக்ரைனுக்குள் நுழைந்துள்ளார். போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகருக்கு ரஷிய அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டார்.

    மரியுபோல் நகரை ரஷிய படைகள் கடந்த ஆண்டு மே மாதம் கைப்பற்றியது. தற்போது மரியுபோல் நகர் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அதிபர் புதினின் இந்த பயணம் உக்ரைன் - ரஷியா போரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குவதற்கான சலுகைகளை தனது அரசாங்கம் வழங்கும் என புதின் தெரிவித்தார்
    மாஸ்கோ:

    ரஷியா, உக்ரைன் போர் 100வது நாளை தாண்டிய நிலையில், இரு நாடுகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளன. இதற்கு ரஷியாதான் காரணம் என மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

    இந்நிலையில் வளர்ந்து வரு உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு மேற்கத்திய நாடுகள்தான் காரணம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டினார்.

    இதுகுறித்து பேசிய அவர்,  உலக உணவு சந்தையில் என்ன நடக்கிறது என்பதையும், அது சந்தித்து வரும் பிரச்சனைகளையும் ரஷியாவின் மீது திருப்புவதை காண முடிகிறது. மேலும், ரஷியாவிற்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் உலகச் சந்தைகளை மோசமாக்குவதுடன், உற்பத்தியை குறைத்து விலைகளை உயர்த்துகின்றன. 

    உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடுக்கவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகள் உணவு பிரச்சனைகளுக்கு ரஷியாவை குற்றம்சாட்டி வருகின்றன. உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குவதற்கான சலுகைகளை தனது அரசாங்கம் வழங்கும். 

    இவ்வாறு புதின் கூறினார்.
    ரஷிய அதிபர் புதின், பீலேவை தனக்கு பிடித்த வீரர்களில் ஒருவர் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    பிரேசிலியா:

    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100வது நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த படையெடுப்பில் ஆயிரக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் பல நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா தொடர்ந்து முன்னேறி வருகிறது.

    இந்த போரினால் உலக அளவில் பொருளாதாரமும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த போர் மூலம் உக்ரைன் மற்றும் ரஷியாவில் இருந்து ஏற்றுமதி செய்யாமல் இருக்கும் உணவு தானியங்கள் மூலம் உலகின் பல நாடுகளில் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் உக்ரைன் மீதான போரை ரஷியா உடனே நிறுத்த வேண்டும் என கால்பந்து ஜாம்பவான் பீலே, ரஷிய அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-

    "இந்தப் படையெடுப்பை நிறுத்துங்கள்." இந்த சண்டை பொல்லாதது மற்றும் நியாயப்படுத்தவே முடியாதது. இந்த போர் வலி, பயம், மற்றும் வேதனையைத் தவிர வேறெதையும் கொண்டுவருவதில்லை.

    இவ்வாறு பீலே கூறியுள்ளார். 

    உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் உக்ரைனின் தேசிய அணி விளையாடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவர் இதனை தெரிவித்தார்.

    பீலேவும், புடினும் கடைசியாக மாஸ்கோவில் 2017 இல் உலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற கான்ஃபெடரேஷன் கோப்பையின் போது சந்தித்தனர். ரஷிய அதிபர் புதினும், பீலேவை தனக்கு பிடித்த வீரர்களில் ஒருவர் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    இந்த விஷம் எலும்புகள் மற்றும் தசைகளை ஒன்றாக இணைக்கும் பிணைப்பை உடைத்து, உடல் முற்றிலும் நடுக்கத்தை ஏற்படுத்தும்.
    மாஸ்கோ: 

    உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதையடுத்து ரஷியா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. பல அயல்நாட்டு நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறின. இருப்பினும் ரஷ்ய அதிபர் புதின் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை, ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள நாடுகளுக்கு பதிலடி தருவேன் என கூறி வருகிறார்.

    மேற்கத்திய நாடுகள் ரஷியாவை எதிர்த்தாலும், அந்நாட்டிடம் இருந்துதான் எரிபொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. இதனால் புதின் தைரியமாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது புதின் தன் எதிரிகளை கொல்வதற்கு உலகில் அதிகம்  ஆபத்தான விஷம் ஒன்றை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ‘ஸ்ட்ரைக்னைன்’என்று பெயர்கொண்ட அந்த விஷம் ரஷிய உளவு நிறுவனமான கேஜிபியால் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. 

    இந்த விஷம் குறித்து நச்சுயியல் நிபுணர் நீல் பிராட்பரி கூறியதாவது:-

    ‘ஸ்ட்ரைக்னைன்’ என்பது உலகின் மிகவும் ஆபத்தான வேதிப்பொருள். இந்த விஷம் உடலுக்குள் போனவுடன் பயங்கர வலியை கொடுக்கும். எலும்புகள் மற்றும் தசைகளை ஒன்றாக இணைக்கும் பிணைப்பை உடைத்து, உடல் முற்றிலும் நடுக்கத்தை ஏற்படுத்தும். 

    இந்த விஷம் மிக மெதுவாக செயல்பட்டு பல மணி நேரத்திற்கு பிறகு மனிதர்களை கொல்லும். அவர் சாகும்வரை உடலில் உள்ள தசைகள் தொடர்ந்து வலியை உணர்ந்தபடியே இருக்கும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.
    ×