search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prithviraj"

    • இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘கோல்டு’.
    • இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.


    கோல்டு

    கோல்டு

    'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கியுள்ள திரைப்படம் 'கோல்டு'. பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். அதீத எதிர்பார்ப்புகளுடன் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான இப்படம் பல விமர்சனங்களை சந்தித்தது.


    அல்போன்ஸ் புத்திரன்

    அல்போன்ஸ் புத்திரன்

    அல்போன்ஸ் புத்திரனிடம் சமூக வலைதளத்தின் வாயிலாக ரசிகர் ஒருவர், "அஜித்துடன் ஒருப்படம் பண்ணுங்க தலைவா" என கேள்விக்கு எழுப்பினார். இதற்கு பதிலளித்த அல்போன்ஸ், அஜித் சாரை இதுவரைக்கும் மீட் பண்ண முடியல. நிவின் ஒருமுறை அஜித் சாருக்கு பிரேமம் படம் பிடித்துள்ளதாக கூறியிருந்தார். பிறகு, நான் ஒரு 10 முறை அவரின் வலதுக்கை மற்றும் மேலாளரிடம் அஜித் சாரை சந்திக்க வேண்டி கேட்டு இப்போது 8 வருஷம் ஆகிறது. எனக்கு வயதாவதற்குள்ளாக அஜித் சாரை பார்த்தால் படம் பண்ணுவேன்.

    ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த கேள்வியை கேட்கும்போது எனக்கு எவ்வளவு வலிக்கும் தெரியுமா தம்பி? முயற்சி செய்து செய்து சோர்வடைந்து விட்டேன். நீங்கள் கேட்கும்போது முதலில் கோவம் வரும். பின்னர் நீங்களும் என்னை மாதிரி ஒரு ஏகே ரசிகரென நினைத்து அமைதியாக கடந்து விடுவேன். ஏகே சாரை வைத்து படம் எடுத்தால் ஹாலிவுட், கோலிவுட் திரையரங்குகளில் படம் 100 நாள் ஓடும். இதே மாதிரிதான் உலகநாயகன், சூப்பர் ஸ்டார், தளபதியுடனும் என கூறினார். இவரின் இந்த பதில் ரசிகர்களிடம் ஆதரவை பெற்று பலரும் விரைவில் அஜித் சாரை சந்திப்பீர்கள் என கூறிவருகின்றனர்.

    • மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் பிரித்விராஜ்.
    • இவர் தற்போது ‘குருவாயூர் அம்பல நடையில்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் பிரித்விராஜ் 'ஜெய ஜெய ஜெய ஹே'படத்தை இயக்கிய விபின் தாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'குருவாயூர் அம்பல நடையில்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.


    பிரித்விராஜ்

    இந்த படத்துக்கு கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தெய்வத்தின் பெயரை படத்திற்கு வைத்து கேலி செய்வதற்குத் திட்டமிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் பெயரை காரணமாக வைத்து பிரித்விராஜுக்கு மிரட்டல் விடுப்பதை ஏற்க முடியாது என்று மலையாள பட உலகினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    • இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள திரைப்படம் ‘கோல்டு’.
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.


    கோல்டு

    'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கியுள்ள திரைப்படம் 'கோல்டு'. பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.


    கோல்டு

    அதீத எதிர்பார்ப்புகளுடன் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான இப்படம் பல விமர்சனங்களை சந்தித்தது. இந்த விமர்சனங்களுக்கு படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி, 'கோல்டு' திரைப்படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


    • நேரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன்.
    • இவர் தற்போது இயக்கியுள்ள கோல்டு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

    'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கும் படம் 'கோல்டு'. பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

     

    கோல்ட்

    கோல்ட்

    இப்படத்தின் கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் புத்திரன் செய்து முடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு 'கோல்டு' திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

     

    கோல்ட்

    கோல்ட்

    இந்நிலையில் 'கோல்டு' திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது, எங்கள் தரப்பில் வேலை தாமதம் காரணமாக 'கோல்டு' திரைப்படம் ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரம் கழித்து வெளியாகிறது. தாமதத்திற்கு எங்களை மன்னியுங்கள். 'கோல்டு' வெளியாகும் போது இந்த தாமதத்தை எங்கள் வேலையின் மூலம் ஈடுசெய்வோம் என்று நம்புகிறோம் என இயக்குனர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

    • பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி ஹிட்டான படம் 'லூசிபர்'.
    • லூசிபர் இரண்டாம் பாகத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர்.


    லூசிபர்

    இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார்.


    லூசிபர் 2 படக்குழு

    இந்நிலையில் 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு 'எம்புரான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


    • பிரித்விராஜ் தற்போது காப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் இருந்து பிரபல நடிகை விலகியுள்ளார்.

    மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் மஞ்சு வாரியர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு பிறகு படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது எச்.வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமாருடன் இணைந்து நடித்து வருகிறார்.

    மஞ்சு வாரியர்

    மஞ்சு வாரியர்

    இந்த நிலையில் மலையாளத்தில் பிரித்விராஜுடன் காப்பா என்ற படத்தில் நடிக்க மஞ்சு வாரியரை ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தை வேணு இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. பட வேலைகள் தொடங்கிய நிலையில் படக்குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து வேணு விலகினார். எனவே அவருக்கு பதிலாக ஷாஜி கைலாஷ் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தில் இருந்து மஞ்சு வாரியரும் விலகி உள்ளார். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மஞ்சு வாரியர் எதற்காக இப்படத்தில் இருந்து விலகினார் என்பதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

    • இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் கடுவா.
    • மாற்றுத்திறனாளி ஆணையம் பிருதிவிராஜ் நடித்த கடுவா படத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    பிருதிவிராஜ், சம்யுக்தா மேனன் ஆகியோர் நடித்துள்ள கடுவா மலையாள படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தை தமிழில் வாஞ்சிநாதன், ஜனா, எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான ஷாஜி கைலாஸ் இயக்கியுள்ளார். கேரளாவில் உயர் அதிகாரிக்கு எதிராக போராடிய கடுவாகுன்னல் குருவச்சன் என்பவரது வாழ்க்கை உண்மை கதையை மையமாக வைத்து தயாராகி உள்ளது.


    இந்த நிலையில் கடுவா படத்தில் "மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறப்பதற்கு அவரவர் பெற்றோர் செய்த பாவம்தான் காரணம்" என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வசனங்களுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கேரள மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையம் இயக்குனர் ஷாஜி கைலாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


    இது குறித்து ஷாஜி கைலாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நான் இயக்கிய கடுவா படத்தில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோரை வேதனைப்படுத்தும் வகையில் காட்சி இடம்பெற்றதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திரைக்கதையில் அந்த வசனம் வரும்போது கதாநாயகன் பிரித்விராஜோ, இயக்கிய நானோ அதன் மற்றொரு பக்கம் பற்றி யோசிக்காமல் செய்துவிட்டோம் என்பதுதான் உண்மை" என்று பதிவிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த பதிவை பகிர்ந்து பிரித்விராஜும் மன்னிப்பு கேட்டுள்ளார், அதில் "மன்னிக்கவும். தவறு நடந்துவிட்டது. ஏற்றுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • மலையாள திரையுலகின் பிரபலமான நடிகர் பிரித்விராஜ்.
    • பிரித்விராஜ் நடித்து வெளியாகவுள்ள படம் கடுவா.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் இயக்குனர் ஷானி கைலாஷ் இயக்கத்தில் கடுவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சம்யுக்தா மேனன், விவேக் ஓபராய், அர்ஜுன் அஷோகன், சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படம் வரும் ஜூலை -7 ஆம் தேதி தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது.


    ரஜினிகாந்த்

    இந்நிலையில் படத்தின் புரோமோஷன் பணியில் இறங்கியுள்ள கடுவா படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரித்விராஜ் கலந்து கொண்டு கூறுகையில், " கமல் சாரின் காமெடி சென்ஸ் பற்றி நமக்கு தெரியும். பஞ்சதந்திரம் போன்ற படங்களில் பார்த்திருப்போம்.

    ஆனால், ரஜினி சாரின் காமெடி சென்ஸ் குறித்து அவ்வளவாக யாரும் பேசியது இல்லை. ரஜினி சாருக்கு சிறந்த நகைச்சுவை தன்மை உள்ளது. அவரை குடும்ப நகைச்சுவை படங்களில் பார்க்க நான் ஆசைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.

    மலையாள உலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லாலை வைத்து, நடிகர் பிரித்விராஜ் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். #Mohanlal #Prithviraj
    இயக்குநர் கே.வி.ஆனந்துடன் நடிகர் சூர்யா மூன்றாவது முறையாகக் கூட்டணி அமைத்து ‘காப்பான்’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். ஆர்யா, மோகன்லால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். 

    பிரதமரைப் பாதுகாக்கும் அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். நியூயார்க், பிரேசில், டெல்லி, சண்டிகர், ஐதராபாத் எனப் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. மலையாளத்தில் மோகன்லால் அடுத்து நடித்துள்ள லூசிபர் படம் விரைவில் வெளியாக உள்ளது.

    இந்தப் படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கி உள்ளார். மொழி, ராவணா உள்பட பல படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். இந்த படத்தில் மஞ்சு வாரியர், தொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், விவேக் ஓபராய் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். 



    அரசியல் திரில்லர் கதைக்களம் கொண்ட இந்தப் படம் வர்த்தக அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் மார்ச் 28-ந்தேதியன்று வெளியாக உள்ளது. மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    விஷாக் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் மதுர ராஜா படத்தின் மூலம் நடிகர் ஜெய் மலையாளத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடுகிறார். #MaduraRaja #Mammootty #Jai
    ஜருகண்டி படத்திற்குப் பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி, எல்.சுரேஷ் இயக்கும் நீயா 2 ஆகிய படங்களில் நடித்துள்ள ஜெய் அந்தப் படங்களின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளார். அதற்கு முன்பாக அவர் நடித்துள்ள மலையாள திரைப்படம் வெளியாக உள்ளது.

    மலையாளத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் மதுர ராஜா. மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தை இயக்கிய விஷாக் இந்தப் படத்தை இயக்குகிறார். ஆக்‌‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து ஜெய் நடிக்கிறார். மம்முட்டியின் தம்பியாக ஜெய் நடிப்பதாக கூறப்படுகிறது.



    2010-ம் ஆண்டு மம்முட்டி, பிரித்வி ராஜ் இணைந்து நடித்த போக்கிரி ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகிறது. முதல் பாகத்தில் நடித்த பிரித்வி ராஜுக்கு இதில் சிறப்பு தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். கோபி சுந்தர் இசையமைக்க, ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்கிறார். #MaduraRaja #Mammootty #Jai

    தனுஷ் ஜோடியாக மரியான படத்தில் உதட்டு முத்தக்காட்சியில் நடித்திருந்த பார்வதி, பின்னர் உதட்டு முத்தக்காட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் உதட்டு முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார். #Parvathy #MyStory
    பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை பார்வதி. இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

    மலையாளத்தில் ‘என்னு நின்டே மொய்தீன்’ பட வெற்றிக்கு பிறகு பார்வதி - பிரித்விராஜ் ஜோடி ‘மை ஸ்டோரி’  என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். 

    ரோஷிணி தினகர் இயக்கியிருக்கும் இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் `மிஸி மிஸி' என தொடங்கும் பாடல் காட்சியில், பார்வதியும், பிருத்விராஜூம் உதட்டோடு உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார்கள். 



    தமிழில் ‘மரியான்’ படத்திற்குப் பிறகு, உதட்டு முத்தத்திற்கு எதிராக கருத்துக்களைக் கூறிவந்த பார்வதி, மீண்டும் முத்தக்காட்சியில் நடித்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். #Parvathy #MyStory #PrithviRaj

    மிஸி மிஸி பாடலை பார்க்க: 

    ×