search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prathosam"

    • சிவனை வழிபட்டால் சிவனுடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்.
    • நினைத்த காரியம் நிறைவேறும்.

    சனிப்பிரதோஷம் ஆன இன்று நாம் சிவனை பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், சிவன் அருகில் உள்ள நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை மற்றும் சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு நன்மை கிடைக்கும். மேலும் உலக நன்மையை கருத்தில் கொண்டு தீமையான விஷத்தை சிவன் ஏற்றுக்கொண்டு உங்களுக்கு நன்மையை தரும் அருளை வழங்குவார்.

    பிரதோஷ தினமான இன்று அதிகாலையில் நீராடி குளித்து முடித்த பின்னர் திருநீர் இட்டு சிவநாமம் ஆன நமச்சிவாய என்ற வாசகத்தை ஓதி உங்களது வேண்டுதலை துவங்கலாம். இன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவினை தவிர்த்து விரதமிருந்து பிரதோஷத்தை முடித்த பின்னர் உணவை உட்கொள்ளவேண்டும். பின்னர் நீங்கள் இரவு உணவு சாப்பிடலாம் இப்படி பதினொரு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனுடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்.

    மேலும் ஒரு சனி பிரதோஷமான இன்று ஒருநாள் நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்று வந்தால் ஐந்து வருடங்கள் தினமும் நீங்கள் சிவன் கோயிலுக்கு சென்று வந்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். இந்த பிரதோஷம் வேண்டுதல் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் யாதெனில் : திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் , ஏழ்மையில் வாடுபவர்களுக்கு வறுமை நீங்கும், நோய்களால் அவதிப்பட்டு துன்புற்று இருக்கும் நபர்களுக்கு நோய்கள் நீங்கும், எடுத்த காரியங்கள் நிறைவேறாமல் பாதியிலேயே தடங்கலுடன் இருக்கும் அனைவருக்கும் சகல காரியங்களிலும் நீங்கள் நினைத்த வெற்றி கிடைக்கும்.

    மேலும் சனிபிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபடுவர்களுக்கு சிவன் அருளும் கிடைக்கும். பிரதோஷ தினத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை அனைவருடனும் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். இதே தினத்தில் நந்தியையும் சேர்த்து வழிபாடு செய்தால் இந்திரனுக்கு சமமான பெயரும் புகழும் செல்வாக்கும் உங்களுக்கு கிடைக்கும். இன்றைய தினத்தில் நீங்கள் செய்யும் தானங்கள் எண்ணிலடங்கா பலனை கொடுக்கும் என்பதால் நீங்கள் உங்களால் முடிந்த தானங்களை இன்று செய்யலாம்.

    ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய…

    • இன்று முதல் 8-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலை ஏற அனுமதி அளித்திருந்தது.
    • சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர லிங்கம், சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாசி மாத பவுர்ணமி மற்றும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று (4-ந் தேதி) முதல் 8-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலைஏற வனத்துறை அனுமதி அளித்திருந்தது.

    இன்று சனிபிரதோ ஷத்தை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அதிகாலையிலேயே மலையடிவாரமான தாணிபாறையில் குவிந்தனர். காலை 7 மணிக்கு பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

    10 வயதிற்குட்பட்ட வர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன் பைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    சனிபிரதோஷத்தை முன்னிட்டு மலைமேல் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    • 10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.
    • மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 7-ந் தேதி மாசி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

    10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.

    இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகம் இருந்தாலோ மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக அமாவாசை, பௌர்ணமி நாட்களை சதுரகிரிக்கு பக்தர்களுக்கு 4 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பக்தர்கள் யாரும் நீரோடை பகுதியில் இறங்கி குளிக்க அனுமதி இல்லை.
    • இரவு பக்தர்கள் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    பக்தர்கள் யாரும் நீரோடை பகுதியில் இறங்கி குளிக்க அனுமதி இல்லை. கோவில் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் பக்தர்கள் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    மேலும் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம்.
    • நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன.

    சிவபெருமானே ஜகத் குரு என்று போற்றப்படுபவர். அவரே சனகாதி முனிவர்களுக்கு பிரம்மம் குறித்து உபதேசம் செய்தவர். சிவபெருமானுக்கு மொத்தம் எட்டு சீடர்கள் என்கிறது சைவ சித்தாந்த மரபு. சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி என்பவர்களோடு முதன்மைச் சீடராக விளங்குபவர் நந்தி தேவர்.

    நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. இறைவனின் சந்நிதியில் நந்திக்குப் பின் நின்று வணங்க வேண்டும் என்பதன் தாத்பர்யமும் தர்மத்தைப் பின்பற்றி அதன் மூலம் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான்.

    சிவபக்தர்களை ஓடிவந்து காக்கும் நந்தி தேவரை பிரதோஷ வேளையில் நினைத்து வழிபட, அவரே குருவாக இருந்து நமக்கு இறையருளைப் பெற்றுத் தருவார்.

    நந்திகேசி மஹாயாக

    சிவதயா நபராயண கௌரீ

    சங்கரஸேவர்த்தம்

    அனுக்ராம் தாதுமாஹஸ

    என்னும் நந்தி தேவருக்குரிய ஸ்லோகத்தையும் சொல்லி வணங்கலாம். எல்லாவற்றுக்கும் மேலான மந்திரமான நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைத் தொடர்ந்து பிரதோஷ வேளையில் தியானிப்பதன் மூலம் நந்திபகவானின் கருணையையும் சிவபெருமானின் அருளையும் பரிபூரணமாகப் பெறலாம்.

    • குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
    • தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும்.

    வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்புவாய்ந்தது. அந்த நாளில் நந்தி பகவானை வழிபடுவதன் மூலம் குருவருளையும் திருவருளையும் பெறலாம்.

    குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ரம் ஜபித்தும் வழிபாடு செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும்.

    சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒன்றான தட்சிணாமூர்த்தி திருவடிவத்தைக் கட்டாயம் வணங்க வேண்டிய நாள் வியாழக்கிழமை. அதோடு பிரதோஷம் சேர்ந்துவருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    நலமும் வளமும் தரும் பிரதோஷ பூஜையை தரிசிப்பதும் அப்போது சிவனாரை மனமொன்றிப் பிரார்த்தனை செய்வதும் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. மிகுந்த நன்மைகளை வாரிவழங்கக் கூடியது.

    நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். சிவ என்பதற்கு மங்களம் என்று பொருள். நந்தி என்பதற்கும் ஆனந்ததையும் மகிழ்ச்சியையும் தருபவர் என்றே பொருள். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும். இறைவனின் சந்நிதியில் நந்திக்குப் பின் நின்று வணங்க வேண்டும் என்பதன் தாத்பர்யமும் தர்மத்தைப் பின்பற்றி அதன் மூலம் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான்.

    நந்திபகவான் பிரதோஷ நாளில் வேண்டும் வரம் தருபவராக விளங்குகிறார். இந்த நாளில் அவரை நினைத்து வழிபடுவது சிவ பெருமானின் பேரருளை நமக்குத் தரும். அதனால்தான் பிரதோஷ தினத்தில் நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    சிவபக்தர்களை ஓடிவந்து காக்கும் நந்தி தேவரை பிரதோஷ வேளையில் நினைத்து வழிபட, அவரே குருவாக இருந்து நமக்கு இறையருளைப் பெற்றுத் தருவார். இன்று மாலை (19/1/23) பிரதோஷ வேளையில் அனைவரும் வீட்டில் சிவபெருமானை நினைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவபுராணம் படியுங்கள்.

    வியாழக்கிழமை (இன்று) நாளில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத் தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும். குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.

    • சிவபெருமானுக்கு பிரதோஷம் மிகவும் உகந்த நாளாகும்.
    • இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.

    மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது. அப்பிரதோஷ தினங்களின் சிறப்பு என்ன என்பதையும், அப்பிரதோஷ வழிபட்டால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். எனவே இம்மாதத்தில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    புத பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாள், புதன்கிழமை. இந்தநாளில் வரும் பிரதோஷ தினமான இன்று வழிபாடு செய்யும் மிதுனம், கன்னி ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், புதன் தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். புதன் நீச்சம் பெற்றதால் வரும் கெடுபலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிப்பில் ஆா்வம் இல்லாதவர்கள் கூட நன்றாக படிப்பார்கள்.

    அப்படியான பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலுக்கு சென்று, பிரதோஷ தினத்தில் செய்யப்படும் சோம சூக்த வலம் வந்து நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும். பின்பு கோயிலில் உள்ள நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை வணங்கி, பிறகு சிவனுக்கான பிரதோஷ வழிபாடுகள் செய்து கோயிலை மூன்று முறை வளம் வந்து வணங்கி இல்லம் திரும்ப வேண்டும்.

    "பொன்" எனப்படும் தங்கத்திற்கு அதிபதி குரு பகவான் ஆவார். எனவே மார்கழி மாதத்தில் புதன் கிழமையில் வரும் சிறப்பான இன்றைய பிரதோஷத்தின் போது குரு பகவானையும், சிவபார்வதியையும் வணங்குவதால் உங்களுக்க பொன்னாபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வறுமை நிலை நீங்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். பிறருடனான பகை நீங்கும்.

    புதனை வலிமைப்படுத்த இன்று பச்சை பயிறு, சுண்டல் தானம் செய்யுங்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜூலை மாதத்தில் மட்டும் 3 பிரதோஷங்கள் வருகின்றன.
    • ஜூலை 1-ந்தேதி, 15-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மகாபிரதோஷம் வருகிறது.

    ஆங்கில மாதத்தின் கணக்கின்படி ஒரு ஆண்டிற்கு ஒருமுறையே ஒரு விழா வரும். ஆனால் வருகின்ற 2023-ம் ஆண்டை பொறுத்தவரை பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி 2 முறை வருகிறது. அதாவது ஜனவரி-2023-ல் 2-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று வைகுண்ட ஏகாதசி வருகிறது. மேலும் 2023-ல் டிசம்பர் மாதம் 23-ந்தேதி (சனிக்கிழமை) அன்றும் வைகுண்ட ஏகாதசி வருகிறது.

    வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் கோவிலில் சொக்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். ஒரே ஆண்டில் 2 முறை வைகுண்ட ஏகாதசி வருவதால் 2 முறையும் சொர்க்கவாசல் திறக்கப்படுமா?அல்லது ஐதிக முறைப்படி, நட்சத்திரம் அடிப்படையில் சொர்க்கவாசல் திறக்கப்படுமா? என்பது தெரியவில்லை. இதே சமயம் ஒரே ஆண்டில் 2 முறை வைகுண்ட ஏகாதசி வருவதை சிறப்பானதாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

    ஒரே மாதத்தில் 3 பிரதோஷம்

    சிவப்பெருமானுக்கு உகந்த பிரதோஷ நாளானது ஒரு மாதத்திற்கு 2 முறை மட்டுமே வரும். அதன்படி 2023-ம் ஆண்டின் கணக்கின்படி ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் 2 பிரதோஷம் வருகிறது. ஆனால், ஜூலை மாதத்தில் மட்டும் 3 பிரதோஷங்கள் வருகின்றன. அதுவும் இதே மாதத்தில் மகாபிரதோஷம் என்று சொல்லக்கூடிய ஜூலை- 1-ந்தேதி மற்றும் 15-ந்தேதி ஆகிய 2 நாட்களும் பிரதோஷம் வருகிறது. சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளை மகாபிரதோஷம் என்பார்கள்.

    ஜூலை 1-ந் தேதி, 15-ந்தேதி ஆகிய 2 நாட்களும் சனிக்கிழமை வருவதால் ஒரே மாதத்தில் 2 மகாபிரதோஷம் வருவதை பக்தர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். மேலும் ஜூலை 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று வழக்கத்திற்கு மாறாக மேலும் ஒரு பிரதோஷம் வருகிறது. 2023 ஆண்டின் கூடுதல் சிறப்பாக பிப்ரவரி மாதம் 18-ந்தேதி அன்றும் சனி மகாபிரதோஷம் வருவது குறிப்பிடத்தக்கது.

    • மார்கழி என்பது பூஜைகளுக்கு உரிய மாதம்.
    • பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வருவது.

    மார்கழி மாதத்தின் பிரதோஷ நன்னாள் நாளை (21-ம் தேதி). பிரதோஷ வேளையில் சிவ தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால், பாவங்கள் தொலையும், புண்ணியங்கள் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான மாதம். மார்கழி என்பது பூஜைகளுக்கு உரிய மாதம். இந்த மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் எண்ணற்ற பலன்களை வழங்கும் என்பது ஐதீகம். இந்த மாதத்தில் நாம் செய்யும் பூஜைகளும் ஜபதபங்களும் மந்திரங்களும் மும்மடங்கு பலன்களைக் கொடுக்கும்.

    சிவ வழிபாடுகளில் மிக மிக முக்கியமான வழிபாடு என்று பிரதோஷத்தைக் குறிப்பிடுவார்கள். பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வருவது. திரயோதசி என்பது ஒவ்வொரு பெளர்ணமிக்கும் முந்தைய மூன்றாம் நாளும் அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளும் வருகிறது.

    திரயோதசி திதி வருகிற மாலை நேரம் பிரதோஷம். பிரதோஷத்தில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடந்தேறும். பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில்தான் சிவனாருக்கு பூஜைகள் நடத்தப்படும்.

    பிரதோஷ நன்னாளில், சிவலிங்கத்திருமேனிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது போலவே, அந்த நாளில், நந்திதேவருக்கும் வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். பிரதோஷம் என்பது எப்போதுமே, மாலை 4.30 முதல் 6 மணி வரை.

    செவ்வாய்க் கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் ராகுகால வேளையில், அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று துர்கைக்கு விளக்கேற்றுவார்கள். நெய்தீபம் அல்லது எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவார்கள்.

    மார்கழி மாதத்தின் பிரதோஷ நாளில், விரதம் இருந்து மாலையில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லுங்கள். நந்திதேவருக்கும் சிவலிங்கத்திருமேனிக்கு நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்துக்கு பொருட்களை வழங்கி, அபிஷேகத்தை தரிசியுங்கள். நமசிவாய மந்திரத்தைச் சொல்லி சிவனாரை வழிபடுங்கள். சிந்தையைத் தெளிவாக்கி, வாழ்வை வளமாக்கித் தந்தருள்வார் சிவனார்!

    • பிரதோஷங்களிலேயே 20 வகையான பிரதோஷம் இருக்கின்றது.
    • இந்த நாளில் வழிபாடு செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்..

    தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக, திருப்பாற்கடலை கடைந்தனர். மந்தர மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் இதற்கு பயன்படுத்தினர். அப்படி திருப்பாற்கடல் கடையப்பட்ட போது, அதற்குள் இருந்து பல தெய்வீக அம்சம் நிறைந்த பொருட்களும், தேவதைகளும், தெய்வங்களும் கூட வெளிப்பட்டன. இறுதியாகத்தான் அமிர்தம் வெளிப்பட்டது. ஆனால் எல்லாவற்றுக்கும் முன்பாக முதன் முதலில் கடலில் இருந்து வெளிப்பட்டது கொடிய விஷம்தான். அதோடு கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகியும் வலி பொறுக்க முடியாமல், விஷத்தை கக்கியது. அந்த இரண்டு விஷமும் ஒன்று சேர்ந்து 'ஆலகால' விஷமாக மாறியது. அது இந்த உலகையே அழிக்கும் சக்தி படைத்ததாக இருந்தது.

    இதையடுத்து அனைவரும் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை அருந்தினார். அந்த விஷம் அவரது உடலுக்குள் நுழையாமல் இருக்க, அவரது கழுத்தை பிடித்தார், பார்வதி. அதனால் விஷம் கழுத்திலேயே நின்று, கழுத்து நீலநிறமாக மாறியது. இதனால்தான் ஈசனை 'நீலகண்டன்' என்றும் அழைக்கிறோம். கழுத்தில் விஷம் பரவியதால் மயக்கமடைந்த சிவன், மயக்கம் தெளிந்ததும் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று ஆனந்த நடனம் புரிந்தார். அந்த நாளே 'பிரதோஷ தின'மாக வழிபடப்படுகிறது.

    இதனால்தான் பிரதோஷ தினத்தில் சிவன்- பார்வதி மற்றும் நந்தியம்பெருமான் வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நாளில் வழிபாடு செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும். பிரதோஷங்களிலேயே 20 வகையான பிரதோஷம் இருக்கின்றது. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    1. தினசரி பிரதோஷம்: தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப் பிரதோஷத்தை யார் ஒருவர், ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    2. பட்சப் பிரதோஷம்: அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர்பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் 'திரயோதசி' திதியை 'பட்சப் பிரதோஷம்' என்கிறோம். இந்த பிரதோஷ கால வேளையில், பட்சி லிங்க வழிபாடு (பறவைகளோடு தொடர்புடைய மயிலாப்பூர், மயிலாடுதுறை போன்று) செய்வது உத்தமம்.

    3. மாதப் பிரதோஷம்: கிருஷ்ண பட்சம் என்ற தேய்பிறையில் பவுர்ணமிக்குப் பிறகு 13-வது திதியாக வரும் 'திரயோதசி' திதியே 'மாதப் பிரதோஷம்' ஆகும். இந்த பிரதோஷ நாளில் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு (பாணம் என்பது ஒரு வகை லிங்கம்) செய்வது நன்மையான பலன்களைத் தரும்.

    4. நட்சத்திரப் பிரதோஷம்: பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை, பிரதோஷ நேரத்தில் வழிபடுவது 'நட்சத்திர பிரதோஷம்' ஆகும்.

    5. பூரண பிரதோஷம்: திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராமல், திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷ நாளை, 'பூரண பிரதோஷம்' என்பார்கள். இந்தப் பிரதோஷத்தின் போது சுயம்புவாக தோன்றிய லிங்கத்தை தரிசனம் செய்வது சிறப்பான பலனைத் தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

    6. திவ்யப் பிரதோஷம்: பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது 'திவ்யப் பிரதோஷம்' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

    7. தீபப் பிரதோஷம்: பிரதோஷ தினமான திரயோதசி அன்று தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபாடு செய்வதையும் 'தீபப் பிரதோஷம்' என்கிறோம். இவ்வாறு செய்வதால் சொந்த வீடு அமையும் வாய்ப்பு உருவாகும்.

    8. சப்தரிஷி பிரதோஷம்: வானத்தில் 'வ' வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களை, 'சப்தரிஷி மண்டலம்' என்பார்கள். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே 'சப்தரிஷி பிரதோஷம்' ஆகும். இதனை அபயப் பிரதோஷம் என்றும் அழைப்பார்கள். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு ஈசன் பாவ-புண்ணியம் பார்க்காது அருள்புரிவார்.

    9. மகா பிரதோஷம்: புராணத்தில் பிரதோஷம் நடந்ததாக கூறப்படுகிறது. சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் 'மகா பிரதோஷம்' ஆகும். அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் சிறப்புக்குாியது.

    திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள தண்டீசுவரர் ஆலயம், திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் சிவ ஆலயம், கும்பகோணம் அருகே உள்ள 'திருக்கோடி காவல்' சிவ ஆலயம் ஆகியவை, எமன் வழிபட்ட சுயம்பு லிங்கங்களில் குறிப்பிடத்தக்கவை. மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், 'மகா பிரதோஷம்' எனப்படும்.

    10. உத்தம மகா பிரதோஷம்: சனிக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானது. அதிலும் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறை சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் 'உத்தம மகா பிரதோஷம்' ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

    11. ஏகாட்சர பிரதோஷம்: வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

    12. அர்த்தநாரி பிரதோஷம்: வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால் அதற்கு 'அர்த்தநாரி பிரதோஷம்' என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

    13. திரிகரண பிரதோஷம்: வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது 'திரிகரண பிரதோஷம்.' இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

    14. பிரம்மப் பிரதோஷம்: ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது 'பிரம்மப் பிரதோஷம்.' இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

    15. அட்சரப் பிரதோஷம்:வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது 'அட்சரப் பிரதோஷம்.' தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

    16. கந்தப் பிரதோஷம்: சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் 'கந்தப் பிரதோஷம்' எனப்படும். இது முருகப்பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

    17. சட்ஜபிரபா பிரதோஷம்: ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

    18. அஷ்டதிக் பிரதோஷம் : ஒரு வருடத்தில் வரும் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

    19. நவக்கிரகப் பிரதோஷம்: ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது 'நவக்கிரகப் பிரதோஷம்.' இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

    20. துத்தப் பிரதோஷம்: அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

    • சனிப்பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு முதல் வழிபாடு செய்யப்படுகிறது.

    சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. பிரதோஷம் நித்ய பிரதோஷம், மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.

    தினம் தோறும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் நித்ய பிரதோஷ காலம் எனப்படும். மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் மாதப் பிரதோஷம் எனப்படும்.

    மஹா பிரதோஷம் : மாதங்களில் தேய்பிறை அல்லது வளர்பிறை திரயோதசியுடன் சனிக்கிழமை கலந்து வந்தால் அது மஹா பிரதோஷம் என்று வழங்கப்படுகிறது. இவை சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வந்தால் மிகவும் உத்தமம் என்று புராணங்களும் கூறுகின்றன.

    பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு முதல் வழிபாடு செய்யப்படுகிறது. பிரதோஷ தரிசனத்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.

    மற்ற பிரதோஷம் வழிபட சனிப்பிரதோஷ முக்கியத்துவம் பெறுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், சிவ ஆலயத்தில் இந்த வழிபாட்டின் மூலம் கிடைக்கும் நன்மைகள் தான் காரணம். ஒருவர் பிற நாட்களில் கோயிலுக்கு செல்வதை விட இந்த சனிப் பிரதோஷ நாட்களில் அவர்கள் மனதில் நினைத்த விஷயங்களை எண்ணி வழிபாடு செய்வதன் மூலமாக எண்ணிய காரியங்களில் எண்ணியவாறு அவர்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். முக்கியமாக சிவாலயங்களுக்கு நீங்கள் சென்று வழிபடுவது ஐந்து வருட வழிபாட்டிற்கு சமமாக இந்த ஒரு நாள் வழிபாடும் கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    என்ன வகைப்பட்ட தோஷங்கள் ஒருவரை ஆட்டிப் படைத்தாலும், அவர்கள் இந்த நாளில் சிவனை வழிபடுவதன் மூலமாக அந்தப் ஒரு தோஷங்களில் இருந்து விலகுவதாக ஐதீகம் உள்ளது. சாதாரண தினங்களில் ஏற்படும் வழிபாடுகளை விட சனிக்கிழமை பிரதோஷம் செய்யும் வழிபாடு ஆயிரம் மடங்கு நன்மைகளை வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நாள் முழுவதும் விரதம் இருந்து, பால் ஆகாரம் மற்றும் எடுத்துக் கொண்டு, மாலையில் சிவன் கோவில் சென்று வழிபடுவது மிகவும் நன்மை பயக்கும்.

    • இன்று செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை வழங்கும் என்பது ஐதீகம்.
    • இன்று விரதம் இருந்து சிவனாரைத் தொழுவோம். நமசிவாயம் சொல்லுவோம்.

    பிரதோஷ அன்று சிவபெருமானுக்கு பூஜை செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் ரொம்பவே மகத்துவம் மிக்கது.

    விரதம் இருந்து சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் சிவனாரை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். புகழும் கெளரவமுமாக வாழலாம்.

    விரதம் இருந்து பிரதோஷ நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை வழங்கும் என்பது ஐதீகம். பிறப்பே இல்லாத முக்தியை அளித்து அருள் செய்யும்.

    சனிப் பிரதோஷ நாளில், முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவநடனத்தைத் தரிசிக்க பூலோகம் வருவார்களாம். நந்திதேவரையும் சிவனாரையும் அபிஷேகித்து,ஆராதித்து தரிசித்தார்களாம். பிரதோஷ பூஜைக்கு நாமும் அபிஷேகப் பொருட்களையும் பூக்களையும் வழங்குவோம்.

    நந்திதேவரின் கொம்புகளுக்கிடையே ஈசன் திருநடனம் புரியும் தருணம் பிரதோஷம் என்கிறது புராணம். விரதம் இருந்து பிரதோஷ நாளில், நமசிவாயம் என்று ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து, சிவ பூஜையை தரிசித்தாலோ சிவ பூஜை செய்தாலோ, நம் முன்னோர்கள் செய்த ஏழுதலைமுறை பாவங்களும் நீங்கும் என்கிறது சிவபுராணம்.

    இன்னொரு விஷயம்... மற்ற நாட்களில் வரும் பிரதோஷ நாளில், சிவ தரிசனம் செய்வதாலும் சிவ பூஜை செய்வதாலும் என்னென்ன பலன்கள் கிடைக்கிறதோ... சனிப் பிரதோஷ நாளில் செய்தால், மும்மடங்கு பலன்கள் கிடைக்கும்.

    பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வரும். பிரதோஷ வேளை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில், சிவ பூஜை செய்யவேண்டும். குளித்துவிட்டு, சுவாமி படத்துக்கு முன்னே அமர்ந்துகொண்டு, 'நமசிவாயம்' என்று ஜபித்துக் கொண்டிருந்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும். புண்ணியம் பெருகிவிடும்.

    மற்ற பிரதோஷம் வழிபட சனிப்பிரதோஷ முக்கியத்துவம் பெறுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், சிவ ஆலயத்தில் இந்த வழிபாட்டின் மூலம் கிடைக்கும் நன்மைகள் தான் காரணம். ஒருவர் பிற நாட்களில் கோயிலுக்கு செல்வதை விட இந்த சனிப் பிரதோஷ நாட்களில் அவர்கள் மனதில் நினைத்த விஷயங்களை எண்ணி வழிபாடு செய்வதன் மூலமாக எண்ணிய காரியங்களில் எண்ணியவாறு அவர்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். முக்கியமாக சிவாலயங்களுக்கு நீங்கள் சென்று வழிபடுவது ஐந்து வருட வழிபாட்டிற்கு சமமாக இந்த ஒரு நாள் வழிபாடும் கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    என்ன வகைப்பட்ட தோஷங்கள் ஒருவரை ஆட்டிப் படைத்தாலும், அவர்கள் இந்த நாளில் சிவனை வழிபடுவதன் மூலமாக அந்தப் ஒரு தோஷங்களில் இருந்து விலகுவதாக ஐதீகம் உள்ளது. சாதாரண தினங்களில் ஏற்படும் வழிபாடுகளை விட சனிக்கிழமை பிரதோஷம் செய்யும் வழிபாடு ஆயிரம் மடங்கு நன்மைகளை வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நாள் முழுவதும் விரதம் இருந்து, பால் ஆகாரம் மட்டும எடுத்துக் கொண்டு, மாலையில் சிவன் கோயில் சென்று வழிபடுவது மிகவும் நன்மை பயக்கும்.

    வீட்டில் விளக்கு ஏற்றி சிவன்பெருமான் புகைப்படத்தின் முன்பு அவருடைய மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலமாக இந்த நாளில் சிறப்பு பயன்களை நீங்கள் முழுமையாக அடைய முடியும்.

    இன்று (22ம் தேதி) சனிப் பிரதோஷம். மாலையில் சிவனாரைத் தொழுவோம். நமசிவாயம் சொல்லுவோம். நல்லனவற்றையெல்லாம் பெறுவோம்.

    நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!

    ×