என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "power outages"
- மேல்மலையனூர் அருகே தாயனூர் துணை மின் நிலையத்தில் 15-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே தாயனூர் துணை மின் நிலையத்தில் 15-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மானந்தல், வடபாலை, ஈயக்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவளம்பாடி, நாரணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு, ஆத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண்பிள்ளை பெற்றாள், எய்யில், உண்ணாமநந்தல், எதப்பட்டு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.
- கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஒருசில கிராமங்களில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் கிராம பொது மக்கள் இருளில் தவித்த னர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேல்வளி மண்டல சுழற்றி காரண மாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஒருசில இடங்களில் பயிர் வகைகள் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் ஆழ்ந்த கவலை அடைந்தனர். இதனிடையே நேற்று நள்ளிரவு திடீரென கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.
குறிப்பாக கடலூர், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம், திருவந்திபுரம், நடுவீரப் பட்டு, பாலூர் ஆகிய பகுதிகளில் கொட்டி தீர்த்தது. இதனால் நகர் பகுதியில் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றது. இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஒருசில கிராமங்களில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் கிராம பொது மக்கள் இருளில் தவித்த னர். ஏற்கனவே தொடர் மழை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர் மண்ணில் சாய்ந்து உள்ளது. இத னால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
- விருதுநகரில் முன்னறிவிப்பில்லாத மின்தடை ஏற்பட்டுள்ளது.
- பொதுமக்கள் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் மாதத்தில் ஒரு நாள் மின் பாதை பராமரிப்பு பணிக்காக ஒவ்வொரு மின் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்படுகிறது. ஆனால் அன்றைய நாளில் பல நேரங்களில் மாலை 5 மணிக்கு தான் மின்விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக முறையான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மின்தடை அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடியால் திடீர் திடீரென மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், குடும்ப பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
விருதுநகர் நகர் பகுதியில் இன்று குறிப்பிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் விருதுநகர் நகர் முழுவதும் இன்று மின்தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். சிறு தொழில் செய்வோர், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.
எனவே இனிமேலாவது மின்வாரிய அதிகாரிகள் மின்தடை குறித்த பகுதிகள் தொடர்பான முறையான அறிவிப்பு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மதுரை
மதுரை தெற்கு கோட்டம், ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோவில், அனுப்பானடி, தெப்பக்கு ளம் ஆகிய துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (12-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 1, 2-வது தெருக்கள், ஒர்க்ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி அக்ரஹாரம்,தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் அக்ரஹாரம் படித்துறை, திலகர் திடல் சந்தை, பாரதியார்ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1 மற்றும் 4-வது தெரு, விவேகானந்தர் ரோடு.
பெரியார் பஸ் நிலையம், டி.பி.ேக. ரோட்டின் ஒரு பகுதி, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு,மேல மாசி வீதியின் ஒரு பகுதி, இன்மையிலும் நன்மை தருவார் கோவில் தெரு, மேல வடம் போக்கி தெரு, ஹயாத்கான் சாலை. மேல வாசல் ஹவுசிங் போர்டு. மேல வாசல் மரக்கடை பகுதிகள், ஹீரா நகர் மற்றும் திடீர் நகர் முழுவதும், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின்ரோடு, புட்டு தோப்பு மெயின் ரோடு, எச்.எம்.எஸ். காலனி, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு ஏரியா முழுவதும், மோதிலால் மெயின் ரோடு.
மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், என்.எம்.ஆர். புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவன்யூ, மேல அனுப்பானடி கிழக்கு பகுதி, தமிழன் அவன்யூ, மருத்துவமனை சுற்றுப்புறம், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி. காலனி. திருமகள் நகர், செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்