search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thunderstorms"

    • கடலூர் மாவட்டத்திற்கு விடுக்கப் பட்ட கனமழை எச்சரிக்கை
    • கரைக ளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லவேண்டும்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது - சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் முன்னறி விப்பின்படி, டெல்டா மாவட்டமான கடலூர் மாவட்டத்திற்கு விடுக்கப் பட்ட கனமழை எச்சரிக்கை மற்றும் மோசமான வானி லை காரணமாக கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இதன் காரணமாக இடிமின்னலுடன் கனமழை பெய்து வரும்போதுதிறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச்செல்வதை முற்றிலும் தவிர்க்குமாறும், தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின்இரு கரைக ளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லவேண்டும். கால்நடைகளை பாது காப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம். கடலூர் மாவட்ட மீன வர்கள் யாரும் மறு அறி விப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது.

    கடலூர்மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கை கள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல் படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் கீழ்க்கண்ட தொலை பேசி எண்களும் செயல்பட்டு வருகிறது. தொலைபேசி எண்கள் கட்டணமில்லால்லாதது.04142-220700, தொலைபேசி எண் - 107704142-௨௩௩௯௩௩ மேற்படி தொலை பேசி எண்களை தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். இதில் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களுக்கு நேரடி யாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

    • கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பார்வதி புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராசாங்கம். விவசாயி.
    • ன்னல் தாக்கிய தில் 2 ஆடுகளும் உயிரிழ ந்தது. வடலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பார்வதி புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராசாங்கம். விவசாயி. இவர் நேற்று மதியம் பார்வதிபுரம் பாய்பான்குட்டைஏரிக்கு அருகில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது இடியுடன் பலத்த மழை பெய்துள்ளது. அந்த சமயம் மின்னல் தாக்கியதில் ராசாங்கம்படு காயமடைந்தார். உடனே ‌அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குபரி சோதித்த டாக்டர் ஏற்கனவே ராசாங்கம் உயிரி ழந்ததாக கூறியுள்ளார். மேலும்மின்னல் தாக்கிய தில் 2 ஆடுகளும் உயிரிழந்தது. வடலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த இடியுடன் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.
    • கடலூர் பகுதியில் ஒரு சில இடங்களில் மரம் சேர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

    கடலூர்:

    தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது . இன்று தமிழகம் மற்றும் புதுவை காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திருந்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த இடியுடன் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் கடலூர் பண்ருட்டி நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டு வேப்பூர் பெல்லாந்துறை எஸ்.ஆர்.சி. குடிதாங்கிவிருத்தாசலம் தொழுதூர் பண்ருட்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வந்தது. இது மட்டும் இன்றி கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணி மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வழக்கமான நடைபெற்று வரும் விவசாய பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டு தற்போது நிலப்பகுதிகளில் தண்ணீர் தேங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது இதன் காரணமாக விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கடலூர் பகுதியில் ஒரு சில இடங்களில் மரம் சேர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு:- வேப்பூர் - 97.0, பெல்லாந்துறை - 79.8, குப்பநத்தம் - 69.6, கீழச்செருவாய் - 56.0, காட்டுமயிலூர் - 55.0, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 39.5, விருத்தாசலம் - 29.0, தொழுதூர் - 22.0, மீ-மாத்தூர் - 18.0, பண்ருட்டி - 15.0, லக்கூர் - 8.0, வானமாதேவி - 5.0, கலெக்டர் அலுவலகம் - 1.0, கடலூர் - 0.2, மொத்த மழை - 495.10 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஒருசில கிராமங்களில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் கிராம பொது மக்கள் இருளில் தவித்த னர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேல்வளி மண்டல சுழற்றி காரண மாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஒருசில இடங்களில் பயிர் வகைகள் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் ஆழ்ந்த கவலை அடைந்தனர். இதனிடையே நேற்று நள்ளிரவு திடீரென கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக கடலூர், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம், திருவந்திபுரம், நடுவீரப் பட்டு, பாலூர் ஆகிய பகுதிகளில் கொட்டி தீர்த்தது. இதனால் நகர் பகுதியில் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றது. இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஒருசில கிராமங்களில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் கிராம பொது மக்கள் இருளில் தவித்த னர். ஏற்கனவே தொடர் மழை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர் மண்ணில் சாய்ந்து உள்ளது. இத னால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    ×